ShareChat
click to see wallet page
search
“பட்டு சேலை காத்தாட” ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தை எம்ஜிஆரை கேட்காமல் தெலுங்கில் வெளியிட்டதில் தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் சிறிய மனக்கசப்பு இருந்தது. இந்த சூழலில் ‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தை ஆரம்பித்தார் தேவர். கதையை கேட்ட எம்.ஜி.ஆர், இந்த மாதிரி கதையெல்லாம் என்னை வெச்சி எடுக்கமாட்டீங்களா என்று கேட்க, மனக்கசப்பு நீங்கி தேவர் சம்மதித்தார். கதை வசனம் எழுதிய ஆரூர் தாஸுக்கு, தன்னை அவ்வளவாக எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. ஆனால் காட்சியின் தொடக்கத்தில் நாயகன் பேசும் வசனத்தை கேட்ட எம்.ஜி.ஆர், ஆரூர் தாஸை கட்டி அணைத்து ‘எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது’ என்றாராம். அந்த வசனம் இதுதான். எம்.ஜி.ஆர்: ‘எங்கப்பா இறந்ததுலேருந்து, எங்க அம்மா எந்த ஒரு மங்கல காரியத்துலேயும் பங்கெடுத்துக்கிட்டது கிடையாது. பொதுவா, கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுனம்னு சொல்லுவாங்க. ஆனா நான் விடிஞ்சதும் எங்கம்மா முகத்துலதான் விழிக்கிறேன். அதனாலதான் எனக்கு வெற்றி மேல வெற்றி கிடைக்குது. எனக்கு தாய் தான் தெய்வம்! அந்தத்தாய் சொல்லைத் தட்டமாட்டேன்’. “கையில் எடுத்தால் துவண்டு விடும் … கண்கள் இரண்டும் சிவந்து விடும் சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே …” பின்னல் ஜடை முன்புறமாக, ஒன்றை பூ அதில் மலர்ந்திருக்க நளினமாக ஜாடை காட்டி நடந்து வரும் சரோம்மா இந்த வர்ணனைக்கு படு பொருத்தம். “நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு அமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு” என்று நாயகனை வர்ணித்தபடி எம்.ஜி.ஆரின் உதட்டை தொட்டு சிரித்து குலுங்குவார் சரோம்மா. இனிமை தேன் மழை பொழிந்த சுசீலாம்மா, சௌந்தர்ராஜன்… பட்டு சேலை காத்தாட இசை தென்றல் வீசிய திரை இசைத்திலகம் மகாதேவன்…இதுபோன்ற இனிமைகள் இனி கிடைக்குமா?… “காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே” உண்மையான காதலை வெளிப்படுத்தும் வரிகளை இப்படி எழுத கவிஞரால் மட்டுமே இயலும். —————————– படம்: தாய் சொல்லை தட்டாதே இசை: கே.வி.மகாதேவன் குரல்: டி.எம்.எஸ், பி.சுசீலா வரிகள்: கண்ணதாசன் https://youtu.be/sPfVsdX_Soo?si=fqLuEH7ZB-2sdeG0 #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் .
📷நினைவுகள் - ە ە - ShareChat