நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
அவன்தான் மனிதன் திரைப்படம் #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #💝இதயத்தின் துடிப்பு நீ #💪கெத்து ஸ்டேட்டஸ்
ஆலயம் ஆவது மங்கை மனது #🎬 சினிமா #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #❤️எங்கேயும் காதல்
🎬 சினிமா - ShareChat
00:28
#திருவேற்காடு #கருமாரியம்மன்* கோயில் பற்றி பார்ப்போம், 🐉பாம்பே தலையணியாம், வேப்பிலையோ பஞ்சு மெத்தை' என அம்மன் தாலாட்டில் விவரிக்கும் திருவேற்காடு கருமாரியம்மன், மிகப்பெரிய புற்றில் கருநாகமாக அன்னை குடி கொண்டு இருந்ததும், வேம்பு வடிவமாகவே சக்தி உருமாறி நின்றதும் இங்குதான். அருள் பொழிய நாகமும், மருந்தாக வேம்பும் இங்கே காட்சி தருவது அற்புதமான காட்சி. 🐉🌸சிவபெருமான் தேவர்களின் துன்பம் நீக்வதற்காக தேவலோகம் செல்ல வேண்டிவந்தது. அப்போது உமையாளிடம் நீயே சிவனும் சக்தியுமாகி ஐந்தொழிலையும் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இந்த திருநீற்றினால் அருள்புரிவாயாக என்று கூறிச் சென்றார். 🐉🌸அம்மையும் அகத்தியரிடம் தாம் ஆட்சி செய்ய தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான் சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி ☄1. அந்தரக்கன்னி, ☄2. ஆகாயக்கன்னி, ☄3.பிரமணக்கன்னி, ☄4. காமாட்சி, ☄5. மீனாட்சி, ☄6.விசாலாட்சி, ☄7.கருமாரி செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள். 🐉🌸இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள். பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர். 🐉🌸சக்தியாகிய கருமாரி இரண்டு உருவம் கொண்டாள். முதல் உருவம் பிரகாசத்துடன் இருந்தது.இரண்டாவது நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது. 🐉🌸கருமாரி மகாவிஷ்ணுக்கு காட்சி தந்தாள். இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார். அப்போது அம்மன் அகத்தியரைப் பார்த்து முனிவா நான் உலக மக்கள் உய்வதற்காக பாம்பு உருவம் கொண்டு புற்றில் அமர்ந்து பலயுகாந்த காலங்கள் அருளாட்சி செய்வேன், கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன் என்று கருநாக வடிவம் எடுத்தாள். இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது. 🐉🌸அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது விஷேசம். மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது. 🐉🌸மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. 🐉🌸இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் கந்து வட்டி தீர்தல், வியாதி வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்கின்றனர். 🐉🌸பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக கூறுகிறார்கள். 🐉🌸பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. 🐉🌸திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டு தலத்தைப் பற்றி பாடியுள்ளார்,திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருக்கோயிலான வேதபுரீஸ்வரர் - பாலாம்பிகை ஆலயமும் அருகிலேயே உள்ளது. 🐉🌸அகத்தியருக்குத் திருமணக் காட்சி அருளிய தலம் இது. 🐉🌸அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு. 🐉🌸அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலம் திருவேற்காடு. 🐉🌸கூரை வேய்ந்த கோவில் அமைத்து முதன் முதலில் கருமாரியம்மனுக்கு உருவமாக "ஏழு கரகங்கள்" பிரதிஷ்டை செய்தவர் மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள். 🐉🌸தற்போது ஒவ்வொரு கருமாரியம்மனின் திருவுருவப் படத்தில் வலது புறத்தில் பானையுடன் முகம் அமைய பெற்று மற்றும் வேப்பிலையுடன் காட்சி அளிக்கிறதே அதுதான் "கரகம்". இதன் பொருள் கருமாரியம்மனின் ஆதி உருவம் "கரகம்" என்பதுதான். 🐉🌸மாரி என்றால் மழை போன்றவள். கருமாரி என்றால் கரியநிறத்து மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள். ☄க - கலைமகள்; ☄ரு - ருத்ரி; ☄மா - திருமகள்; ☄ரி - ரீங்காரி (நாத வடிவானவள்) என இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது 🐉🌸மூலவரான அன்னை சுயம்புவாக சாந்தசொரூபியாக காட்சி அளிக்கிறாள். இவளுக்குப் பின்பு இருக்கும் அம்மன் கத்தி, சூலம், டமருகம், கபாலம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும்படி காட்சி தருகிறாள். 🐉🌸அரச மர விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகர், பிரத்யங்கரா தேவி, நவகிரகம், சீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, காயத்ரி, மஹாலக்ஷ்மி, அங்காளம்மன், சாவித்ரி, துர்கை, ராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்களின் சந்நிதிகள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன. 🐉🌸சகல நோய்களையும் தீர்க்கும் அம்மனின் பிரசாதமான வேப்பிலையை மக்கள் பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். தீர்த்தமும் வேப்பிலையும் தீராத நோய்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. வேப்பிலையும் பிரம்பும் கொண்டு இங்கு மந்திரிக்கப்பட்ட மக்கள், எந்த பயமும் இன்றி மகிழ்ச்சி கொள்கிறார்கள். 🐉🌸ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள புற்றில் பால் ஊற்றினால் தோஷங்கள் விலகுகின்றன. 🐉🌸திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிஷேகம், உப்பு காணிக்கை, மாலை அணிவித்தல், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், கல்யாண உற்ஸவம், பொங்கல் வைத்தல், அக்கினி சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கண்ணடக்கம், வெள்ளிக்காணிக்கை செலுத்தபடுகிறது. 🐉🌸ஒருமுறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால், கோபம் கொண்ட சக்தி அவனை சபித்து இருளாக்கினாள். பின்னர் கோபம் தணிந்த அன்னை சூரியனின் வேண்டுகோளுக்காக இந்த தலத்தில் அமர்ந்து சூரியனின் பூஜையைப் பெறுகிறாள் என்று வேறொரு வரலாறு கூறுகிறது. 🐉🌸புற்றில் வாழ்ந்த நாகம் ஒன்று அம்மனின் அருட்காட்சியைக் காட்டியதால் இங்கு கோயில் உருவானதாகக் கூறுகிறார்கள். புற்றில் இருந்த அம்மன் சுயம்புவாக வெளியானதால் கருவில் இல்லாத கருமாரி அன்னை என்று போற்றப்படுகிறாள். 🐉🌸ஆடி மாதம் தொடங்கி புரட்டாசி வரையிலான 12 வாரங்களும் இங்கு அம்மனுக்கு சிறப்பான பண்டிகை நாள்கள். மேலும் தை மாத பிரம்மோற்ஸவம், அமாவாசை, சித்ரா பௌர்ணமி, நவராத்திரி என எல்லா மாதங்களுமே அம்மனுக்கு இங்கு விழா நாள்கள்தான். 🐉🌸காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் பக்தர்களுக்கு ஒரு ஆன்மிக மருத்துவமனையாகவே விளங்கி வருகிறது, 🐉🌸இந்த ஆலயத்தில் இருக்கும் 'பதி விளக்கு' அணையாத விளக்கு. அம்மனையும், இந்த விளக்கையும் தரிசித்தால் மாங்கல்ய பலம் பெறுவார்கள் என்பது ஐதீகம். 🐉🌸தன்னை நம்பி வரும் பெண்களுக்கு மாங்கல்ய வரமளித்து, அவர்களை சுமங்கலியாக வாழ வைக்கும் இந்த அம்மனுக்கு தாலிகளே அதிகம் காணிக்கையாக அளிக்கப்படுகிறது. செவ்வாய் தோறும் இங்கு காலை 10 மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய தோஷ பரிகார பூஜை சிறப்பானது. 🐉🌸தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது, இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது. #அன்றாடம்_ஆன்மீகம். #அம்மன் #பராசத்தி அம்மன் கலெக்சன்
அம்மன் - அன்றாடம் ஆன்மீகம் Oaren அன்றாடம் ஆன்மீகம் Oaren - ShareChat
#சம்பூர்ண_ராமாயணம் #இயக்குனர்_சோமு இராமாயண காவியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ராமராக என். டி. ராமராவும் பரதனாக சிவாஜிகணேசனும் ராமரின் மனைவி சீதையாக பத்மினியும், சத்துருக்கனாக பி. வி. நரசிம்ம பாரதியும் நடித்து சிறப்பித்துள்ளனர். பரதனின் (சிவாஜி கணேசன்) தாயின் சூழ்ச்சியின் காரணமாக முடிசூடவிருந்த இராமர் 14 வருடங்கள் வனவாசம் செல்ல ஏற்பட்டது.இச்சம்பவமறியாது தாய் கூறிய பின் தெரிந்து கொள்ளும் பரதன் தன் தாயை அவதூறாகப் பேசியவாறு ராமரின் பாதம் நோக்கி ஓடுகிறான்.அங்கு இராமருக்கு சேவையாற்ற விரும்பும் பரதனின் அன்பினை மெச்சுகின்றார் இராமரும். பின்னர் நடைபெறும் காப்பியச் சிறப்புமிக்க இராமரின் இலங்கை யுத்தம் இராவண அழிப்பு என்பன திரைக்கதை முடிவாகும். ஏ.பி.நாகராஜன்-எம்.ஏ.வேணு கூட்டணியில் தயாரிக்கப்பட்ட பல படங்களை இயக்கிய டைரக்டர் கே.சோமு, தமிழின் மிக நீளமான படமான "சம்பூர்ண ராமாயண"த்தை விறுவிறுப்பாக இயக்கி, வெள்ளி விழாப் படமாக்கினார். சோமுவின் சொந்த ஊர் பழனி. 1917-ம் ஆண்டில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் 12-வது பிள்ளையாகப் பிறந்தவர். இவரது மூத்த அண்ணன் உடுமலைப்பேட்டையில் பிரபல வக்கீலாக இருந்தார். சோமுவின் மற்றொரு அண்ணன், நாடகங்கள் நடத்துவதிலும், நடிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து, சோமுவும் நாடகத்தில் நடித்தார். ராஜாஜி எழுதிய "விமோசனம்" என்ற மதுவிலக்குப் பிரசார கதையை நாடகமாக நடத்தினார். நகரசபை அலுவலகத்தில் வேலை கிடைத்தும், அதை உதறித் தள்ளிவிட்டு, சேலம் மாடர்ன் தியேட்டர்சில் நடிகராகச் சேர்ந்தார். எம்.ஜி.ஆர். தளபதியாக நடித்த "மந்திரிகுமாரி" யில் துணைத்தளபதி வேடம் இவருக்குக் கிடைத்தது. இவரைப் பார்த்தவர்கள், "யார் இந்த புதுமுகம்? எம்.கே. ராதாவைப்போல் இருக்கிறாரே!" என்றனர். சினிமாவில் நடிகராக முன்னேற வேண்டும் என்பதே சோமுவின் ஆசை. ஆனால் இவருடைய திறமையைக் கண்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டு, துணை டைரக்டர் பதவியை கொடுத்தார். மாடர்ன் தியேட்டர்ஸ், ஆங்கிலத்தில் "ஜங்கிள்" (காடு) என்ற ஆங்கிலப்படத்தைத் தயாரித்தது. அதன் டைரக்டரான வில்லியம் பர்க் என்ற ஆங்கிலேய டைரக்டருக்கு துணை டைரக்டராக சோமு பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பணியாற்றிய கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோருடன் பழகி, அவர்களின் நட்பைப் பெற்றார், சோமு. மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகியாகப்பணியாற்றிய எம்.ஏ. வேணு, அதிலிருந்து விலகி "எம்.ஏ.வி. பிக்சர்ஸ்" என்ற படக்கம்பெனியைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதல் படம் "மாங்கல்யம்." இதன் கதை -வசனத்தை எழுதிய ஏ.பி. நாகராஜன், கதாநாயகனாகவும் நடித்தார். பி.எஸ்.சரோஜா கதாநாயகி. மற்றும் ராஜசுலோசனா, எம்.என்.நம்பியார் நடித்தனர். 1954-ல் வெளிவந்த இந்த திரைப்படத்தை கே.சோமு டைரக்ட் செய்தார். முதல் படமே, வெற்றிப்படமாக அமைந்தது. "எம்.ஏ.வி"யின் இரண்டாவது படம் "பெண்ணரசி." இதில் ஏ.பி.நாகராஜனும், சூர்யகலாவும் ஜோடியாக நடித்தனர். மற்றும் கண்ணாம்பா, பி.எஸ்.வீரப்பா, நம்பியார், ஈ.வி.சரோஜா, ராஜசுலோசனா நடித்தனர். இதை சோமு டைரக்ட் செய்தார். இதைத்தொடர்ந்து, எம்.ஏ.வேணு -ஏ.பி.நாகராஜன் - கே.சோமு ஆகியோர் ஒரு கூட்டணியாக செயல்பட்டு, பல வெற்றிப் படங்களை வழங்கினார். அஞ்சலிதேவி - எம்.என்.கண்ணப்பா நடித்த "டவுன் பஸ்" குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம். "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா", "பொன்னான வாழ்வே மண்ணாகி போமா" ஆகியவை இதில் இடம் பெற்ற "சூப்பர் ஹிட்" பாடல்கள். சோமு இயக்கிய 4-வது படம் "நான் பெற்ற செல்வம்." இதில் சிவாஜிகணேசனும், ஜி.வரலட்சுமியும் ஜோடியாக நடித்தனர். பிறகு சோமு இயக்கிய "மக்களைப் பெற்ற மகராசி", வரலாறு படைத்த படமாகும். தமிழ்ப்பட உலகில், வட்டாரத் தமிழ் வசனம் முதன் முதலாக இடம் பெற்ற படம். இது சிவாஜிகணேசன் கொங்குத் தமிழ் பேசி அற்புதமாக நடித்தார். மற்றும் பானுமதி, கண்ணாம்பா, வி.கே.ராமசாமி ஆகியோரும் நடித்தனர். "ரத்தக்கண்ணீர்" (1954) படத்துக்கு பிறகு, மீண்டும் நாடக உலகுக்குத் திரும்பிவிட்ட எம்.ஆர்.ராதாவை திரும்பவும் சினிமாவில் நடிக்க வைத்து, அவர் ஏராளமான படங்களில் நடிப்பதற்கு வழிவகுத்த பெருமை சோமுவுக்கும், ஏ.பி.நாகராஜனுக்கும் உண்டு. அவரையும், சவுகார் ஜானகியையும் ஜோடியாக நடிக்க வைத்து, ஏ.பி.நாகராஜன் கதை வசனத்தில், 28 நாட்களில் படத்தை எடுத்து முடித்தார், சோமு. அந்தப் படம்தான் 16-2-1958-ல் வெளிவந்த "நல்ல இடத்து சம்பந்தம்." சென்சாரில் ஒரு அடி கூட வெட்டப்படாமல் வெளிவந்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கிய புதிதில், அதிக பாடல்கள் இடம் பெற்றதால் படங்கள் நீளமாக இருந்தன. அவற்றின் நீளம் சுமார் 20 ஆயிரம் அடியாக இருந்தன. தமிழில் மிக நீளமான படத்தை, விறுவிறுப்பாக இயக்கியவர் என்ற பெருமை கே.சோமுவுக்கு உண்டு. அந்தப் படம்தான் "சம்பூர்ண ராமாயணம்." 14-4-1958-ல் வெளிவந்த இந்தப் படத்தின் நீளம் 22,953 அடி. anuradha #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - சம்பூர்ண ரமமாயுணம் కే சம்பூர்ண ரமமாயுணம் కే - ShareChat
தம்பிக்கு எந்த ஊரு திரைப்படம் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💝இதயத்தின் துடிப்பு நீ #❤️எங்கேயும் காதல் #💪கெத்து ஸ்டேட்டஸ்
🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 - ShareChat
01:18
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை! #காலை வணக்கம் #காலை வணக்கம் நண்பர்களே
காலை வணக்கம் - சிக்கல்கள்என்பவை ஓடும்ரெயிலிலிருந்து பார்க்கும்மரங்களைப் போன்றவை. அருகித்தகேத்னெலிஅ போனால்அவை அவற்றைக்கடந்துசென்றால் அவை சிறிதாகிவிடும் இதுதான் omಹ6ಹl காலை வணக்கம் MATESAN சிக்கல்கள்என்பவை ஓடும்ரெயிலிலிருந்து பார்க்கும்மரங்களைப் போன்றவை. அருகித்தகேத்னெலிஅ போனால்அவை அவற்றைக்கடந்துசென்றால் அவை சிறிதாகிவிடும் இதுதான் omಹ6ಹl காலை வணக்கம் MATESAN - ShareChat
இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
😍Old மூவிஸ் - NATESAN இன்றிருப்ரூபபர்நனை இஜே்த்து உண்மை எண்ணிடாமல் வைத்துகாத்துஎன்ன நன்மை இருக்கும்வரை இன்பங்களை அனுபவிக்கும்தன்மை இல்லையென்றால் வாழ்வினிலேஉனக்கு ஏதுஇனிமை NATESAN இன்றிருப்ரூபபர்நனை இஜே்த்து உண்மை எண்ணிடாமல் வைத்துகாத்துஎன்ன நன்மை இருக்கும்வரை இன்பங்களை அனுபவிக்கும்தன்மை இல்லையென்றால் வாழ்வினிலேஉனக்கு ஏதுஇனிமை - ShareChat
திரை இசைத் திலகம் #கே_வி_மகாதேவன் திருவிளையாடல் - புராணப் படங்களில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்த படம். "புராணப் படமா? ஏ.பி.நாகராஜன் தான் செய்யணும்" என்ற அளவுக்கு அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கித் தந்த படம். 1965-ஆம் ஆண்டு வெளிவந்த பிராந்திய மொழிப் படங்களில் தமிழில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் சிறப்பு விருதினைப் பெற்ற படம். அதற்கு முன்பும் கூட புராணப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் புதிய தலைமுறைக்கு ஏற்றபடி புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார் ஏ.பி. நாகராஜன் அவர்கள். நடிகர் திலகத்தின் அபாரமான நடிப்பாற்றல் - நுணுக்கமான அசைவுகளைக் கூட துல்லியமாக அவர் வெளிப்படுத்தி நடித்த விதம் - சிவனாக வரும் காட்சிகளில் புருவத்தைக் கூட அசைக்காமல் நடித்த பாங்கு-அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதுவரை சமூகப் படங்களில் மட்டுமே கையாளப்பட்டு வந்த "பிளாஷ்-பாக்" உத்தியைக் கையாண்டு கதை பின்னப்பட்ட முதல் படம் திருவிளையாடல் தான். ஞானப் பழத்துக்காக கோபித்துப் பிரிந்து சென்று தனியாக இருக்கும் முருகனின் சினத்தைத் தணிப்பதற்காக பராசக்தி பரமனின் திருவிளையாடல்களில் சிலவற்றைக் கூறுவதாக கதை அமைத்திருந்தார் ஏ.பி.நாகராஜன். அதன்பிறகு வெளிவந்த புராணப்படங்கள், பக்திப் படங்கள் எல்லாமே இந்தப் பாணியிலேயே வர ஆரம்பித்தன என்பது கவனத்துக்குரிய விஷயம். இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் அமைத்த இசை . அதுவரை அவர் அமைத்த படங்களின் இசையையும் பாடல்களையும் எல்லாம் தூக்கி அடித்தது. பொதுவாக நடிகர் திலகத்திடம் ஒரு தனித்தன்மை உண்டு. அவர் நடிக்கும் படம் எதுவோ அது வெளிவந்த பிறகு அதில் வேறு எத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விஞ்சி அவரது நடிப்பு மட்டுமே பெரிதாகப் பேசப்படும். அதுதான் முன்னணியில் நிற்கும். ஆனால் திருவிளையாடல் படம் ஒரு விதிவிலக்கு. நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாக படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் நாகேஷின் நகைச்சுவை நடிப்பும். படத்தின் பாடல்களும். இன்றளவும் நாகேஷ் காமெடி என்று எடுத்துக்கொண்டால் முதலிடம் பெறுவது திருவிளையாடல் தருமி தானே? அதே போல படத்தின் இசையும் மிகப் பிரமாண்டமாகப் பேசப்பட்டது. "அய்யரின் இசையின் மகத்துவத்தை முழுமையாக உணர்த்திய படம்" என்று கே.வி. மகாதேவனின் உற்ற துணையாக இருந்த உதவியாளர் டி. கே. புகழேந்தி பெருமையாகக் குறிப்பிடுவார். அந்த அளவுக்கு இசையின் ஆக்கிரமிப்பு அதுவும் நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாகப் பேசப்படும் அளவுக்கு இருந்தது. முதல் காட்சியிலேயே இசையின் ஆக்கிரமிப்பு துவங்கி விடுகிறது. கயிலாயத்தில் தேவரும், முனிவரும், நாரதரும், பூத கணங்களும் சிவபூஜை செய்யும் காட்சி. பலதரப்பட்ட இசைக்கருவிகளைக் கையாண்டு அருமையான தனி ஆவர்த்தனத்தை ஆதி தாளத்தில் வெகு அற்புதமாக அமைத்து மெய்சிலிர்க்க வைத்தார் கே.வி.மகாதேவன். சங்கீதத்தில் "காலப்ரமாணம்" என்று ஒரு சொல்வழக்கு உண்டு. தாளத்தில் அது மிக முக்கியமான் ஒரு அம்சம். அதன்படி ஒவ்வொரு வாத்தியத்தையும் கணக்கு பிசகாமல் கையாண்டு மகாதேவன் அமைத்திருக்கும் அந்த தனி ஆவர்த்தனமும் அதைத் தொடரும் சீர்காழியின் கணீர்க் குரலும். "சம்போ மகாதேவா" - என்ற ஒரே வரியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி விரியவைத்து என்னமாய்த்தான் அமைத்திருக்கிறார் மகாதேவன்! சம்போ மகாதேவா .. என்று பாடலின் ஒற்றை வரியை வைத்தே மோகன ராகத்தில் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். சீர்காழி கோவிந்தராஜன் முடித்ததும் வீணையில் மோகன ராகத்தை கலைமகள் மீட்டுவதாக வரும் சஞ்சாரங்கள்... இப்படி எல்லாம் பாடலை இப்போது போடவேண்டும் என்றால் அதற்கு கே.வி. மகாதேவன்தான் மறுபடியும் பிறந்து வரவேண்டும். தொடர்ந்து பி.சுசீலாவின் குரலில் "நமச்சிவாய வாழ்க" என்ற மாணிக்கவாசகரின் சிவபுராண வரிகள்... "ஈசனடி போற்றி எந்தையடி போற்றி..." என்று தொடரும் அர்ச்சனைப் பதிகத்தை யஜுர் வேதத்தில் "யோபாம் புஷ்பம் வேதா" என்று துவங்கும் "மந்த்ர புஷ்பம்" - பகுதியை நினைவுறுத்தும் வகையில் மெட்டமைத்து திருவாசகத்தை தமிழ் வேதம் என்று கொண்டாடும் அளவுக்கு அற்புதமாக கையாண்டிருக்கிறார் கே.வி. மகாதேவன். ஞானப் பழத்துக்காக கோபமுற்று தாய் தந்தையைப் பிரிந்து செல்லும் முருகனை சாந்தப் படுத்தும் விதமாக அவ்வையாராக வரும் கே. பி.சுந்தராம்பாள் பாடும் "ஞானப் பழத்தைப் பிழிந்து" என்ற தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பாடலை இடையிடையே ஒற்றை வயலினைக் கையாண்டு காம்போதி ராகத்தில் ஆரம்பித்து, சாவேரி, மோகனம், கானடா என்று ராகமாலிகை விருத்தமாக வெகு சிறப்பாக அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். தொடர்ந்து படத்தில் இடம் பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசு கண்ணதாசன். "பழம் நீயப்பா" - பாடலில் முருகனுக்குகந்த ஷண்முகப்ரியா ராகம் தான் எத்தனை அழகாகக் கையாப்பட்டிருக்கிறது! பாடலின் இடையே வரும் இணைப்பிசையில் நம் மனதை அப்படியே கட்டிப்போட்டுவிடுகிறார் கே.வி.மகாதேவன். பி.பி.ஸ்ரீனிவாஸ் - எஸ். ஜானகியின் குரல்களில் "பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்" மகாதேவனின் இசையில் நடபைரவி ராகத்தில் கலந்து கேட்பவர் செவிகளை மட்டுமல்ல மனதையும் நிறைக்கிறது. இந்தப் பாடலில் நாதஸ்வரமும், புல்லாங்குழலும் தான் எவ்வளவு லாவகமாகக் கையாளப் பட்டிருக்கின்றன. நடபைரவியில் இத்தனை இனிமையாக - காலத்தை வென்று நிற்கும் அளவுக்கு ஒரு திரைப்படப் பாடலை வேறு யாராலுமே தரமுடியாது. இடைவேளைக்கு முன்வரும் சிவதாண்டவத்திற்கு மகாதேவன் அமைத்திருக்கும் இசை . உண்மையிலேயே மகாதேவ தாண்டவம் தான். தாள வாத்தியங்களில் ஆதிக்கம் நிறைந்திருந்தாலும் வயலினில் ஹம்சானந்தி ராகத்தை பளிச்சென்று மின்னல் போல வெளிக்காட்டி மறைக்கும் லாவகம் - கே.வி. மகாதேவனால் மட்டுமே சாத்தியம். "நீலச்சேலை கட்டிகிட்ட சமுத்திரப்பொண்ணு" - கண்ணதாசனின் நயமான வரிகள் விரகதாபத்தால் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை எடுத்துக்காட்டுகின்றன என்றால் அதற்கு "பஹாடி"யில் மகாதேவன் அமைத்திருக்கும் மெட்டும் அதனை பி.சுசீலா பாடி இருக்கும் அழகும், நடிகையர் திலகம் வெளிப்படுத்தும் பாவங்களும் பாடலுக்கு தனி இடம் கொடுத்து விடுகின்றன. அடுத்து "ஒரு நாள் போதுமா" .. பாடலுக்கு வருவோம். உண்மையிலேயே இந்தப் பாடலை கே.வி.மகாதேவன் அமைத்திருக்கும் அழகை - பாடலின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொள்வது என்றால் அதற்கு ஒரு நாள் போதாது தான். வடநாட்டில் இருந்துவரும் ஹேமநாத பாகவதர் பாண்டியமன்னனின் சபையில் பாடுவதாக காட்சி. நாடெங்கும் உள்ள பாடகர்களை எல்லாம் வெற்றி கொண்ட ஆணவத்தில் மிதக்கும் ஹேமநாத பாகவதரை விறகுவெட்டியாக வரும் ஈசன் எப்படி தன்னிலை உணரவைக்கிறார் என்பது கதை ஆரம்பத்தில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைக்க விரும்பினார் ஏ.பி.நாகராஜன். ஆனால் தோல்வி அடையும் கதாபாத்திரத்துக்கு தான் பாடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்த காரணத்தால் சீர்காழி கோவிந்தராஜன் தன்னால் பாட முடியாது என்று நயமாக மறுத்து விட்டார். சங்கீதத்தில் முடிசூடா மன்னனாக வரும் பாடகருக்கு ஒரு சங்கீத வித்வானையே பாடவைத்தால் என்ன என்று தோன்றியதும் அனைவருக்கும் ஒருமனதாக நினைவுக்கு வந்த பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் தான். அவரிடம் சென்று கதையமைப்பைக் கூறி ஹேமநாத பாகவதருக்காக அவர் பாடவேண்டும் என்று தயக்கத்துடன் கோரிக்கை வைத்தார்கள். "என்னது? தோற்றுப்போகும் சங்கீத வித்வானுக்கு நான் பாடணுமா? என்னை என்னவென்று நினைத்தீர்கள்?" என்றெல்லாம் கூச்சல் போடாமல் - சற்றுக்கூட முகம் சுளிக்காமல்,"அதுக்கென்ன தாராளமா பாடறேன்" - என்று எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் சம்மதித்தார் பாலமுரளிகிருஷ்ணா. கவியரசர் பாடலுக்கான பல்லவியை இப்படி எழுதிக் கொடுத்தார்: "நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா" இந்தப் பல்லவியை மேலே சொன்ன அதே "ச்ரோதோவகயதி" முறையைப் பின்பற்றி.. "ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா.. - என்று வரிக்கு வரி வார்த்தைகளைக் கூட்டி அமைத்த திறமையை என்னவென்று சொல்வது? அதே சமயம் இந்தப் பாடலுக்கு கே.வி. மகாதேவன் தேர்ந்தெடுத்த ராகமோ "மாண்ட்". கதைப்படி ஹேமநாத பாகவதர் வடநாட்டிலிருந்து வரும் ஒரு சங்கீத நிபுணர். பாண்டிய நாட்டுக்கு வருகை தந்து அரசவையில் பாட வருகிறார். யாருக்குமே அவரது சொந்த மண்ணுக்கு உரித்தான விஷயங்களில் தானே பிடிப்பு சற்று அதிகமாக இருக்கும். ஆகவே தான் ஹேமநாத பாகவதர் தன் பாடலை ஹிந்துஸ்தானி ராகமான மாண்ட்டில் ஆரம்பிக்கிறார். மாண்ட் - இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம். கேட்பவரை கிறங்கடிக்கும் வன்மை வாய்ந்த ஒரு ராகம். நமது தென்னக கர்நாடக இசையில் கச்சேரியின் பிற்பகுதியில் இடம்பெறும் துக்கடாக்களுக்கு பயன்படுத்தப் படும் ராகம். எம்.எஸ். அம்மா அவர்கள் பாடிப் பிரபலமடைந்த வள்ளலாரின் "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்" மாண்ட் ராகத்தில் அமைந்தது தான். அந்த ராகத்தில் துவங்கும் "ஒரு நாள் போதுமா" பாடலைக் கேட்டு வரகுண பாண்டியன் மட்டும் அல்ல. நாமுமே அல்லவா கிறங்கிவிடுகிறோம். சரணத்தில் "குழலென்றும் .." என்ற வார்த்தைக்கு பிறகு ஒரு சிறு ஆலாபனை, ஸ்வரம் என்று பாடிய பிறகு அந்த வார்த்தைக்கு தக்கபடி குழலிசையில் முடிப்பதும், அதே போல "யாழென்றும்.." என்ற வார்த்தைக்கு பிறகு வரும் ஸ்வரங்களை வீணையில் இசைத்து பிறகு இரண்டு வார்த்தைகளையும் இணைத்து பாடலைத் தொடர்வதும்..... கே.வி.மகாதேவனுக்கு மட்டுமே சாத்தியம்... கடைசி சரணத்தில் கவிஞர் ராகத்தின் பெயர்களை இணைத்து பாடல் வரிகளை அமைக்க அவற்றை முறையே தோடி, தர்பார், மோகனம், கானடா என்று அந்தந்த ராகங்களிலேயே அமைத்து ஒரு ராக முத்திரைப் பாடலாக அமைத்துவிட்டிருக்கிறார் கே.வி. மகாதேவன். இங்கு கையாண்ட ராகங்கள் அனைத்துமே தென்னாட்டுக்கு சொந்தமான கர்நாடக ராகங்கள் தான். ஹிந்துஸ்தானியில் மட்டும் தான் என்று இல்லை நான் உங்கள் கர்நாடக சங்கீதத்திலும் கரை கண்டவன் என்று ஹேமநாத பாகவதர் பறை சாற்றிக் கொள்வது போல வரிக்கு வரி ராகம் மாறும் பாடலாக அமைத்து கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப பாடலை அமைத்திருக்கும் விதம் அந்த கதாபாத்திரத்தை கே.வி. மகாதேவன் எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டு இசை அமைத்திருக்கிறார் என்பதற்கு ஒரு சான்று. ஒரு இசை அமைப்பாளர் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு இந்தப் பாடலின் மூலம் ஒரு இலக்கணமே வகுத்துக்கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன் என்றால் அது மிகை அல்ல. அடுத்து டி.ஆர். மகாலிங்கத்தின் கணீர்க் குரலில் இரண்டு பாடல்கள். இரண்டுமே சிறப்பான பாடல்கள். "இல்லாததொன்றில்லை" என்ற விருத்தம். இந்த விருத்தம் சிம்மேந்திர மத்யமம், ஹிந்தோளம் ஆகிய இரண்டு ராகங்களின் சேர்க்கையில் அமைந்தது. பீம்ப்ளாசில் அதாவது ஆபேரியில் - "இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை." - கவிஞர் இந்தப் பல்லவியை இறைவனுக்காக செய்தாரா அல்லது கே.வி. மகாதேவனை மனதில் வைத்துக்கொண்டு கொடுத்தாரா என்பது தெரியாது. ஆனால் இந்தப் பாடல் உண்மையிலேயே அரும்சாதனை தான். பாடலின் உச்சத்தில் பொங்கும் உணர்ச்சிப் பெருக்கும், அதை சிறப்பாக பிரதிபலிக்கும் வண்ணம் வரிகளுக்கிடையே இணைத்திருக்கும் இணைப்பிசையும் பாடலை சிகரத்தில் ஏற்றி நிறுத்திவிடுகிறது. இந்த மாதிரி ஒரு பாடலைக் கேட்டபிறகும் இறைவன் சும்மா இருப்பாரா?. பாணபத்திரருக்காக விறகு விற்க மட்டுமல்ல எதைச் செய்யவும் இறங்கி வரமாட்டாரா? அப்படி விறகுவெட்டியாக வரும் இறைவன் பாடுவதாக அமைந்த "பார்த்தாப் பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்" - பாடல். சரியான நாட்டுப்புற மெட்டுப் பாட்டு. இந்தப் பாடலை வெற்றிப் பாடலாக மாற்ற மகாதேவனுக்கு கைகொடுத்த ராகம் சிந்துபைரவி. அடுத்து ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்குவதற்காக விறகு வெட்டியாக வந்த பரமன் அவர் தங்கி இருக்கும் மாளிகையின் வெளியே உள்ள திண்ணையில் வந்து படுத்துக்கொண்டு பாடுவதாக அமைந்த பாடல் "பாட்டும் நானே பாவமும் நானே". டி.எம். சௌந்தரராஜன் அற்புதமாகப் பாடி இருக்கும் இந்தப் பாட்டுக்கு மகாதேவன் அமைத்த இசை .. உச்சத்தின் உச்சம். "கௌரி மனோகரி" ராகத்தைக் கையாண்டு இந்தப் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். பி.ஜி.எஸ் மணியன் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - 1 தேவன் (8 69 LoBM 1 தேவன் (8 69 LoBM - ShareChat
#📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #🎬 சினிமா #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ்
📷நினைவுகள் - ShareChat
00:29
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம் இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம் வாழும்போதாவது எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம். #💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள்
💪கெத்து ஸ்டேட்டஸ் - பிறக்கும்போதுதாயை அழவைக்கிறோம் 3 232 6euGorjlL( பழகு MATESAN VectorStock VectorStock com/6281473 பிறக்கும்போதுதாயை அழவைக்கிறோம் 3 232 6euGorjlL( பழகு MATESAN VectorStock VectorStock com/6281473 - ShareChat