நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
01:18
#ஹரிதாஸ் ‘ஹரிதாஸ்’ திரைப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் ஒரு தனிப் பெருமையும், நீங்காத புகழும் உண்டு. இப்படத்தின் கதை ‘பக்த விஜயம்’ என்கிற நூலை ஆதாரமாகக் கொண்டது. 16-10-1944 இல் வெளிவந்த இத்திரைப்படம் சென்னை பிராட்வே தியேட்டரில் அந்த வருட தீபாவளி உட்பட 3 தீபாவளிகளைக் கொண்டாடி, 110 வாரங்கள் ஓடி ஒரு மாபெரும் சரித்திரம் படைத்தது. ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் தயாரிப்பான ‘ஹரிதாஸ்’ இரண்டாவது உலகப்போர் மும்மரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்ததால், அப்போதைய அரசுக் கட்டுப்பாட்டின் காரணமாக நீளம் குறைந்த படமாகத் தயாரிக்கப்பட்டது. மொத்த நீளம் 10995 அடிகள் தாம். இது அக்கால நடைமுறைப்படி மிகச் சிறிய படம். இந்த ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். கோவலன் (1934), தூக்கு தூக்கி (1936), சகுந்தலை (1940), சாவித்திரி (1941) போன்ற மிகச் சிறந்த படங்களை வெற்றிகரமாகத் தயாரித்து புகழுடன் விளங்கிய நிறுவனம். இந்தப் படங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக அமைந்துவிட்ட படம் ‘ஹரிதாஸ்’. ஹரிதாஸ் ஒரு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவன். அவனுக்கு காலா காலத்தில் ஒரு திருமணமும் செய்து வைத்துவிட்டனர் அவனது பெற்றோர். ஹரிதாசின் மனைவியின் பெயர் லட்சுமி. ஹரிதாசுக்கு ஒரு நண்பன். கண்ணன் என்று பெயர். சபலபுத்தியுடைய ஹரிதாசுக்கு ஒருநாள் ரம்பா எனும் நாட்டியக்காரியை அறிமுகம் செய்து வைக்கிறான். ரம்பாவின் அழகில் மயங்கிய ஹரிதாஸ், ரம்பாவே கதியென அவளது வீட்டிலேயே தங்கி உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறான். தாய், தந்தை வீட்டில் இல்லாத ஒருநாள் ரம்பாவை நாட்டியமாடுவதற்காக தன் வீட்டிற்கே அழைத்து வந்து விடுகிறான் ஹரிதாஸ். இது அவனது மனைவி லட்சுமிக்குப் பிடிக்கவில்லை. மேலும் ரம்பா ஒரு தாசி எனவும் அறிந்து, கோபம் கொண்ட லட்சுமி ரம்பாவையும் அவளது குழுவினரையும் அடித்துத் துரத்தி விடுகிறாள். லட்சுமியைப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது ரம்பாவிற்கு. சூழ்ச்சி செய்து, முதலில் ஹரிதாசின் பெற்றோரை, ஹரிதாசே வீட்டை விட்டு வெளியேறும்படிச் செய்து விடுகிறாள். இப்போது தட்டிக் கேட்க, அவனது பெற்றோர்கள் அங்கு இல்லை என்கிற தைரியத்தில் ஹரிதாஸ் தான்தோன்றியாக ரம்பாவின் வீட்டிலேயே நாட்களைக் கழிக்கிறான். குடியும், சூது விளையாட்டும் அவனுடன் ஒட்டிக் கொள்கிறது. அனைத்துச் செல்வங்களையும் ரம்பாவிடம் இழக்கிறான். ஹரிதாஸிடம் இப்போது வீடு ஒன்று தான் மீதி. அதையும் நயவஞ்சமாக எழுதி வாங்கி விடுகிறாள் ரம்பா. ஒருநாள் அவனது வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் இழந்த ஹரிதாஸையும், அவனது மனைவியையும் வீட்டை விட்டே துரத்தி விடுகிறாள். மனைவியை அழைத்துக் கொண்டு, கால்நடையாகவே பயணித்து, ஒரு வனப்பகுதி வந்து சேருகிறான் ஹரிதாஸ். ஒரு சாதுவிடம், அழகான பெண்கள் மூவர், ஒருநாள் ஆசி பெறுவதைக் காண்கிறான். அவர்கள் தங்களை கங்கை, சரஸ்வதி, யமுனை எனவும், சாபத்தில் அவர்கள் உருவம் பாழாகி, பின் இந்த சாதுவை பூஜித்து வந்ததால் சாப விமோசனமடைந்து பழைய நிலைக்குத் திரும்பியதாகவும் கூற அதை நம்ப மறுக்கிறான் ஹரிதாஸ். அந்நேரம் அந்த சாதுவும் அங்கு வருகிறார். அவரைக் கேவலமாகப் பேசுகிறான் ஹரிதாஸ். அந்தப் பெண்களுடன் தொடர்புபடுத்தி, சாதுவை அவமானப்படுத்துகிறான். ஹரிதாசை எச்சரிக்கிறார் சாது. அதை அலட்சியம் செய்த ஹரிதாஸ், சாதுவைத் தனது காலால் எட்டி உதைக்க முற்படுகிறான். கோபமடைந்த சாது, அவனது இரண்டு கால்களையும் இல்லாமல் செய்து விடுகிறார். ஹரிதாஸ் முடமாகி விடுகிறான். தவறை உணர்ந்த ஹரிதாஸ், சாதுவிடம் மன்னிப்புக் கேட்கிறான். அவன் தனது தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்து, அவர்களது நன்மதிப்பைப் பெற்றால், சாபம் நீங்கி விடுமெனக் கூறி மறைகிறார் அந்தச் சாது. உண்மையில் அவர் சாது வேஷத்தில் வந்த கடவுள் கிருஷ்ணர். ஊனமுற்ற ஹரிதாஸ், தனது தாயும் தந்தையும், ஒருநாள் பக்தகோஷ்டிகளுடன் துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டே செல்வதை ஒரு குன்றின் உச்சியிலிருந்து கவனிக்கிறான். ‘அப்பா, அம்மா’ என எவ்வளவோ சத்தமுடன் குரல் கொடுத்தும் அவர்கள் காதுக்கு அது விழவில்லை. மனமொடிந்த ஹரிதாஸ் குன்றின் உச்சியிலிருந்து உருண்டு கீழே விழுந்து தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்து கீழே விழும் பொழுது சாதுவின் அருளால் அங்கோர் வைக்கோல் போர் உருவாகி அதன் மேல் விழுகிறான். கவனித்து விட்ட பக்தகோடிகள் அங்கே ஓடி வருகிறார்கள். ஹரிதாஸின் தாய் தந்தையரும் அதிலிருக்கின்றனர். மறுபடியும் சாதுவின் அருளாசியில் அவனது இரண்டு கால்களும் மீண்டு வர, தாய் தந்தையரை வணங்கி, அவர்களுக்கு ஆசிரமம் அமைத்து, நல்லவனாக மாறி அனைத்துப் பணிவிடைகளையும் செய்து வருகிறான். தந்தையின் காலை, அவர் உறங்கும் பொழுது பிடித்து விட்டுக் கொண்டிருந்த நிலையில், அவனை சோதனை செய்ய அங்கே சாது தோன்றி அவனை அழைக்கிறார். பணிவிடை முடியாமல் வர இயலாது என திடமாகக் கூறி விடுகிறான் ஹரிதாஸ். மகிழ்ச்சியடைந்த சாது, தன் உருவத்தைக் களைந்து கோபாலராக மாறி சங்கு சக்ரத்துடன் காட்சியளித்து அனைவரையும் ஆசிர்வதிக்கிறார். படம் இனிதே நிறைவு பெறுகிறது. ‘சிவகவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, எம்.கே.தியாகராஜ பாகவதரை, புகழின் மற்றுமொரு சிகரத்திற்கு இட்டுச் சென்ற படம் ‘ஹரிதாஸ்’. ‘சிவகவி’யைப் போலவே இப்படத்தின் பாடல்களும் அமோக வெற்றியைப் பெற்றன. படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ஹரிதாஸாக நடித்த பாகவதர், ஒரு வெண் புரவியின் மேலமர்ந்து, ‘வாழ்விலோர் திருநாள்’ எனப் பாடியபடியே தோன்றுவார், கண்ணடிப்பார். அப்போது தியேட்டரில் ஏற்பட்ட ஆரவாரத்தை நேரில் அனுபவித்த அனுபவம் இந்தக் கட்டுரையாளருக்கு உண்டு. ஆண்கள் பரவசமடைவது இருக்கட்டும். பாகவதர் அக்காட்சியில் இளம்பெண்களைத் துரத்தும் காட்சியைக் கண்டு, படம் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் அடைந்த பிரமிப்பையும், பரவசத்தையும் அக்காலப் பெரியவர்கள் பரவலாகச் சொல்லியிருக்கிறார்கள். அக்காலத்தில் பாகவதருக்கு பெண் ரசிகைகள் ஏராளம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ‘மன்மத லீலைகள் வென்றார் உண்டோ?’ இது பாகவதர் பாடிய ஒரு பாட்டின் முதலடி. இப்பாடலுக்கு டி.ஆர்.ராஜகுமாரி நடனமாடுவார். சாருகேசி ராகத்தில் அமைந்த இப்பாடலும், காட்சியும் அடைந்த வெற்றி மகத்தானது. அதுவரை தமிழ்மொழியில் புழக்கத்தில் இல்லாத ஒரு புதிய சொல்லாடல் இந்த ‘மன்மத லீலை’. இதன் பயன்பாடு தமிழில் இப்போது எந்த அளவு இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இப்பாடலின் ஆரம்பத்தில், ரம்பாவாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரி மலர்க்கணை ஒன்றை பாகவதர் மேல் வீசுவார். பாட்டின் நடுவிலே ஒரு பறக்கும் முத்தம் (FLYING KISS). இளம் ரசிகர்கள் கிறங்கிப் போவார்கள். இப்படத்தின் இன்னுமொரு விசேஷ அம்சமாகச் சொல்ல வேண்டியது படத்தின் பாட்டுக்கள். இயற்றியவர் பாபநாசம் சிவன். இசை ஜி.ராமநாதனின் கைவண்ணம். அனைத்துப் பாடல்களுமே மிகுந்த வரவேற்பைப் பெற்று புகழடைந்தன. ‘அன்னையும் தந்தையும் தானே – பாரில் அண்ட சராசாரம், கண்கண்ட தெய்வம்’ ‘கிருஷ்ணா முகுந்தா முராரே – ஜெய கிருஷ்ணா முகந்தா முராரே’ ‘அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்’ ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?’ ‘நிஜமா, இது நிஜமா?’ போன்ற பாடல்கள் அக்காலத்தில் ஒலிக்காத இடமே கிடையாது. படத்தில் பாகவதரின் மனைவியாக நடித்தவர் என்.சி.வசந்த கோகிலம். இவரை அக்காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு நிகராகப் பேசுவார்கள். இவர் பாடியிருந்த, ‘கதிரவன் உதயம் கண்டேன்’ பாடலும் ஒரு வெற்றிகரமான பாடாலாக அமைந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம் ஜோடி அக்கால நியதிப்படி இப்படத்திலும் உண்டு. ஆனால் வழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இவர்களது நகைச்சுவை சோபிக்கவில்லை. படத்தின் ஒரு காட்சியில் கூட என்.எஸ்.கே.யும், பாகவதரும் சேர்ந்து நடித்த காட்சி இல்லை என்பது அதிசயமாக இருந்தது. புளி மூட்டை ராமசாமிக்கு இப்படத்தில் குறிப்பிடும்படியான ஒரு நல்ல வேஷம் கிடைத்து அவரும் அதை அருமையாகக் கையாண்டார். பிரபல எடிட்டராக இருந்த சுந்தர்ராவ் நட்கர்னி என்பவர் திறம்பட இப்படத்தை இயக்கியிருந்தார். ராயல் டாக்கீஸ் டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் நிறுவனத்திற்கு இப்படம் மிகப் பெரிய பெயரையும், அமோக வசூலையும் அள்ளிக் கொடுத்தது. ஹரிதாஸ் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த காலத்திலேயே, 1945 இல் மஞ்சள் பத்திரிகையான ‘இந்து நேசன்’ ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சிறை செல்ல வேண்டியதாயிற்று. இப்படத்தின் ஆரம்பத்தில் பாகவதர் ஒரு வெள்ளைப் புரவியில் அமர்ந்து உல்லாசமாக பவனி வந்தது ராசியில்லை எனவும், அதன் காரணமாகவே சிறை செல்ல வேண்டியதாயிற்று எனவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. எது எப்படியிருந்தாலும், ‘ஹரிதாஸ்’ காலத்தால் மறக்க முடியாத ஒரு உன்னதத் திரைக்காவியம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. – கிருஷ்ணன் வெங்கடாசலம் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - தியாகராஜபாகவதர் ராஜகுமாரி வசந்தகோகிலம் NSகிருஷ்ணன் T.A. மதுரம் PBரங்காச்சாரி மற்றும் பலர் . டைாக்கேகன் சந்தா ராவ நடகர்ளி ஸ்டுடியோ  சென்டிால் ளடுடியோஸ் கோலை  புகாாப்யூசர்ஸ் ராபல் டாக்கி டஸ்டிரியயூட்டர்ஸ் மதுனா பஜவாடா (IIlll@)" ஹரீதாஸ் L6800 நடேசன் தியாகராஜபாகவதர் ராஜகுமாரி வசந்தகோகிலம் NSகிருஷ்ணன் T.A. மதுரம் PBரங்காச்சாரி மற்றும் பலர் . டைாக்கேகன் சந்தா ராவ நடகர்ளி ஸ்டுடியோ  சென்டிால் ளடுடியோஸ் கோலை  புகாாப்யூசர்ஸ் ராபல் டாக்கி டஸ்டிரியயூட்டர்ஸ் மதுனா பஜவாடா (IIlll@)" ஹரீதாஸ் L6800 நடேசன் - ShareChat
அட ஆறுமுகம் இது யாரு முகம் ஆஹா தாடியை வச்சா வேறு முகம் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - ShareChat
01:04
தங்கமலை ரகசியம் திரைப்படத்திலிருந்து A. P. கோமளா, A. G. இரத்தின மாலா மற்றும் K. ராணி பாடிய வரவேணும் வரவேணும்… என்ற பாடல் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - ShareChat
01:58
1958 ம் ஆண்டு வெளியான வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படம்! #🎬 சினிமா #😍Old மூவிஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
🎬 சினிமா - ShareChat
01:23
எஸ்.எம்.சுப்பையா நாயுடு; நீ எங்கே என் நினைவுகள் அங்கே #எஸ்_எம்_சுப்பையா நாயுடு; மதிமலர் சிங்காரவேலனே தேவா.. கொஞ்சும் சலங்கை படத்தில் இந்த பாடலுக்கு சாவித்திரியையும் ஜெமினி கணேசனையும் பார்த்திருப்போம். இப்பாடலைப் பாடுவதற்கு முதலில் பி.லீலாவைத் தான் அழைத்தார்கள். காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்துடன் இசைந்து பாடவேண்டிய இப்பாடலை தன்னால் பாடமுடியாது என்று சொல்லிவிடவே அதன்பின்னால் இதைப் பாடும் வாய்ப்பு எஸ்.ஜானகிக்கு வந்தது. ஆபேரி ராகத்தில் அப்பாடல் இறவாப்புகழ் பெற்றுவிட்டது. இந்த பாடலுக்கு இசைஅமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. தமிழ்சினிமாவின் ஆரம்பகால இசையமைப்பாளர்களில் ஒருவர். இசைக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் இவர். சின்ன வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்து தஞ்சா வூரில் ஒரு நாடக்குழுவில் சேர்ந்து பின்னர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பெனிக்குத் தாவி, அங்கிருந்தே பதினாறு வயதுக்குமேல் இசை கற்றவர். அவர் அடைந்த உயரம் பிரமிக்கவைக்கிறது. 1935-ல் வெளிவந்த பக்தராமதாஸ் படத்தில் ஹார்மோனியக் கலைஞராக திரையுலகில் நுழைந்தார் சுப்பையா நாயுடு. நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் நாடகமே பக்தராமதாஸ். பின்னர் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் மாதசம்பளத்துக்கு ஹார்மோனியக் கலைஞராக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் ஜி.ராமநாதன் இசையமைத்த சில படங்களில் ஹார்மோனியக் கலைஞராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் ஒரே படத்துக்கு பல இசையமைப்பாளர்கள் ஆளுக்கு சில பாடல்கள் என்று பிரித்துக்கொண்டு வேலை செய்வார்கள். பின்னணி இசைக்கென்று தனியாக வாத்தியக் குழு இருக்கும். இந்நிலையில் ஜுபிடர் பிக்சர்ஸ் சென்ட்ரல் ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுக்க அதில் இசையமைப்பாளராக மாதச் சம்பளத்துக்கு சுப்பையா நாயுடு சேர்ந்தார். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்தை ஜூபிடர் பிக்சரஸ் தயாரித்தது. கதை வசனம் மு.கருணாநிதி. அப்படத்தின் முழுப்பாடல்களுக்கும் இசை அமைத்தவர் சுப்பையா நாயுடுதான். இந்தப் படத்தில்தான் பின்னணிப்பாடகர்கள் கதாநாயகனுக்காகப் பாடுவது என்பது அறிமுகம் ஆயிற்று. திருச்சி லோகநாதனும் எம்.எம்.மாரியப்பாவும் பின்னணிப்பாடகர்கள் ஆனார்கள். அவர்களை அறிமுகப் படுத்திய பெருமை இவருக்கு வந்தது. உடுமலை நாராயண கவிராயரின் வரிகளுக்கு அருமையாக மெட்டமைத்து பாடல்களைப் பிரபலமாக்கினார் அன்று இளைஞராக இருந்த சுப்பையா நாயுடு. அடுத்து ஜுபிடர் பிக்சர்சஸ் தயாரித்த அபிமன்யுவில் சுப்பராமனுடன் இணைந்து இசை அமைத்தார். இதை அடுத்து பட்ஷிராஜா ஸுடுடியோஸ் தயாரித்த ஏழை படும் பாடு(1950) படம் வெளியாகி சுப்பையா நாயுடுவுக்கு நிலைத்த புகழைத் தந்தது. இதுதான் அவருக்கு முக்கியத் திருப்பம். இந்த கட்டத்தில் வந்த கன்னியின் காதல் முக்கியமாகச் சொல்லவேண்டும். இதில்தான் கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்றவாறு கவியரசு கண்ணதாசன் பாடலாசிரியராக சுப்பையா நாயுடுவின் இசையில் பாட்டெழுதினார். இதற்கடுத்து சில படங்களுக்கு அப்புறம் வந்ததுதான் மலைக்கள்ளன். இப்படம் நாயகன் எம்ஜிஆருக்கும் திருப்புமுனை. இசை அமைப்பாளர் சுப்பையா நாயுடுவும் புகழ் உச்சிக்கு ஏறினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் வெளியான படம் அது. அதில்வரும் “எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. இந்த நாட்டிலே” என்ற பாடல் இன்னும் பலகாலத்துக்கு நிலைத்திருக்கும். பாடலை டி.எம்.சவுந்தரராஜன் எம்ஜிஆருக்காக பாடினார். அதன் பின்னர் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆரின் குரலாகவே மாறிப்போனார். ஆபேரி ராகத்தில் அருமையாக இப்பாடலுக்கு இசை சேர்த்திருக்கிறார் சுப்பையா நாயுடு. எம்.ஜி.ஆர். அடுத்து தயாரித்து இயக்கிய படம் நாடோடிமன்னன். ‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெதிலே சொல் என் தோழா’- சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் தியாகி லஷ்மணதாஸ் எழுதிய ராகமாலிகைப் பாடல், பட்டுக்கோட்டையாரின் ‘மானைத் தேடி மச்சான் வரப் போறார்’ ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி’ - ‘தூங்காதே தம்பி தூங்காதே’ஆகிய பாடல்களும் சுப்பையா நாயுடு இசை கோர்த்தவைதான். உவமைக் கவிஞர் சுரதாவின்,‘கண்ணில்வந்து மின்னல் போல் காணுதே.. உயர் காவியக் கலையே ஓவியமே..’ என்ற பாடல் என்றும் மறக்கமுடியாத டூயட் பாடல். கவி காமு ஷெரிப்பின், ‘அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.. அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை..’ என்ற அன்னையின் ஆணை படப்பாடல். டி.எம்.எஸ். குரலில் இதயங்களை என்றென்றைக்கும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது. மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்துக் கொலை படத்தில் குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே என்று சந்திரபாபு பாடும் பாடல் சுப்பையாநாயுடு இசையில் புகழ்பெற்ற பாடல். ஆனால் இதன் பின்னால் ஒரு சர்ச்சையும் உண்டு. இந்த பாட்டின் மெட்டு டி.ஜி.லிங்கப்பாவினுடயது. அதை சந்திரபாபு, சுப்பையா நாயுடுவிடம் சொல்லி போட வைத்துவிட்டார் என்பது. 1961-ல் வெளிவந்த திருடாதே படமும் சுப்பையா நாயுடு இசைதான். ‘திருடாதே பாப்பா திருடாதே..’ இந்தப் பாடலைக் கேட்டு ஆடாத தலையே தமிழ்மண்ணில் இல்லை. அதே ஆண்டு வந்த படம்தான் கொஞ்சும் சலங்கை. அதில் வெளிவந்த சிங்கார வேலனே தேவா படம் பற்றித்தான் ஆரம்பத்தில் பார்த்தோம். அறுபதுகளுக்குப் பின்னர் ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் நடித்த பல படங்கள் இசை அமைத்தார் சுப்பையாநாயுடு. அதில் முத்துச்சிப்பி என்ற ஜெய்சங்கர்-ஜெயலலிதா நடித்தப் படத்தில் வரும் பாடல்களில் ‘தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக. கண் பட்ட இடம் பூமலரும் பொன்மகளே வருக - நீ வருக’ என்ற பாடல் இன்று அதிமுக மேடைகளில் அந்த இசையமைப்பாளரின் மேன்மையைச் சொல்லி ஒலித்துக் கொண்டிருக்கிறது. மன்னிப்பு என்ற படத்தில் வரும்,‘நீயெங்கே என் நினைவுகள் அங்கே..’ என்ற பாடலை இரவுகளில் கேட்டிருக்கிறீர்களா? சுப்பையா நாயுடுவை நினைத்து நன்றி சொல்லுங்கள். 1975- எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்கு மணிவிழா. எம்.எஸ்.வி, கண்ணதாசன் இருவரும் இணைந்து ஏற்பாடு செய்ய எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருமே கலந்துகொண்டார்கள். 1976-ல் இவர் இசை அமைத்த குலகௌரவம் இவரது கடைசிப்படம். 1979-ல் இந்த மாபெரும் இசைக்கலைஞர் மரணம் அடைந்தார். குழந்தைகள் இல்லை என்பதால் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தவர் அவர் மீது பேரன்பு வைத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன்! இணையதள பக்கத்தில் இருந்து Natesan Subramani #🎬 சினிமா #😍Old மூவிஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
🎬 சினிமா - NAESAN NAIESAN சையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயூடு NAESAN NAIESAN சையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயூடு - ShareChat
தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது #Malaimurasu #Newsupdate #ECI #தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 🗳️
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 🗳️ - தமிழ்ஙாடு சட்டமன்ற தேர்தல் 2026 தேர்தல் அட்டவணை IIGlluU முரசு எய்திகள் 234 தொகுதிகள்  போல ஒரே கட்டமாக தேர்தல் தமிழ்ஙாட்டில் வழக்கம் வேட்புமனு தாக்கல் வேட்புமணு தாக்கஸ் செய்ய வேட்புமணு பரிசீலினை வேட்புமணு திரும்பப் பற துவக்கம் கடைசி ஙாள் கடைசி நாள் ஏப்ரல்  ஏப்ரல் ஏப்ரல் மார்ச் 30 09 06 07 வாக்கு வாக்குப்பதிவு எண்ணிக்கை ஏப்ரல் (1) भारत 04 28 1 క్తే ELECTIONCOHNSSIOHOFINDIA  தமிழ்ஙாடு சட்டமன்ற தேர்தல் 2026 தேர்தல் அட்டவணை IIGlluU முரசு எய்திகள் 234 தொகுதிகள்  போல ஒரே கட்டமாக தேர்தல் தமிழ்ஙாட்டில் வழக்கம் வேட்புமனு தாக்கல் வேட்புமணு தாக்கஸ் செய்ய வேட்புமணு பரிசீலினை வேட்புமணு திரும்பப் பற துவக்கம் கடைசி ஙாள் கடைசி நாள் ஏப்ரல்  ஏப்ரல் ஏப்ரல் மார்ச் 30 09 06 07 வாக்கு வாக்குப்பதிவு எண்ணிக்கை ஏப்ரல் (1) भारत 04 28 1 క్తే ELECTIONCOHNSSIOHOFINDIA - ShareChat
🔴Live : தமிழ்நாடு சட்டமன்றதேர்தல் தேதி அறிவிப்பு | Tamilnadu Election Date | Election 2026 #malaimurasu #breakingnews #electionnews #தேர்தல் திருவிழா 2026 #தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 🗳️
தேர்தல் திருவிழா 2026 - தமிழ்நா( சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப் பதிவு 23 6iJ6 2026 வாக்கு எண்ணிக்கை  4 1 04 @0 2026 = fslM(unissMdha ' தமிழ்நா( சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப் பதிவு 23 6iJ6 2026 வாக்கு எண்ணிக்கை  4 1 04 @0 2026 = fslM(unissMdha ' - ShareChat
#💪கெத்து ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓
💪கெத்து ஸ்டேட்டஸ் - கல்யாணம் ஆகலை ங்கிறதையும் சோகமாகத் தான் சொல்றாங்க.. கல்யாணம் ஆகிடுச்சு ங்கிறதையும் சோகமா தான் சொல்லுறாங்க... டிசைனோ தெரியல. 6T60T60T கல்யாணம் ஆகலை ங்கிறதையும் சோகமாகத் தான் சொல்றாங்க.. கல்யாணம் ஆகிடுச்சு ங்கிறதையும் சோகமா தான் சொல்லுறாங்க... டிசைனோ தெரியல. 6T60T60T - ShareChat