நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #🎬 சினிமா #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ்
📷நினைவுகள் - ShareChat
00:29
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம் இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம் வாழும்போதாவது எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம். #💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள்
💪கெத்து ஸ்டேட்டஸ் - பிறக்கும்போதுதாயை அழவைக்கிறோம் 3 232 6euGorjlL( பழகு MATESAN VectorStock VectorStock com/6281473 பிறக்கும்போதுதாயை அழவைக்கிறோம் 3 232 6euGorjlL( பழகு MATESAN VectorStock VectorStock com/6281473 - ShareChat
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். #💝இதயத்தின் துடிப்பு நீ #💪கெத்து ஸ்டேட்டஸ்
💝இதயத்தின் துடிப்பு நீ - நொடி ஒரு துணிந்தால் இற்தநிநடம்பு இ நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம் NATESAN நொடி ஒரு துணிந்தால் இற்தநிநடம்பு இ நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம் NATESAN - ShareChat
வாழ்க்கை படத்தில் 13 பாடல்கள் 12 பாடல்களை #கேபி_காமாட்சி எழுதினார். பெரும் ஆச்சரியம் என்னவென்றால் காமாட்சி எழுதிய பல பாடல்களை எம்எஸ்.ராஜேஸ்வரி பாடியுள்ளார் என்பது தான். அப்படி ஒரு பாட்டு, எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே… இப்பாடல் வரியில் இடையில் இப்படி எழுதியிருப்பார் காமாட்சி. என் ஆசை போலவே என்னாலும் வாழ்வேன்… அந்த காலத்திலேயே ஒரு பெண் இப்படி பாடுவது போல் காட்சிக்கு தைரியமான வார்த்தைகளைப் போட்டு எழுதிய கவிஞர் கேபி.காமாட்சி என்பதை மறந்து விடக்கூடாது. #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ
😍Old மூவிஸ் - ShareChat
00:47
ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை தேவை ஒரு காவிய செல்வம் தேடாமல் தேடிய தெய்வம் நீயானால் சம்மதம் அம்மா நெஞ்சம் உன் சந்நிதி அம்மா எல்லாம் உன்னோடு தானோ ஓ ஓ ஓ ஓஓஒ #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #❤️எங்கேயும் காதல் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
😍Old மூவிஸ் - NATESH ராமுன்தேழமசீதை ஆறுகுணங்கள் கொண்டவளாம் ஒரு 5 பாவை அதுயாரோ எவரோ ராமன்தேடிய 868 தேவை ஒரு காவிய செல்வம் தேடாமல் தேடியதெய்வம் நீயானால் சம்மதம் அம்மா நெஞ்சம் உன்சந்நிதி அம்மா எல்லாம் உன்னோடு தானோ :9@9 NATESH ராமுன்தேழமசீதை ஆறுகுணங்கள் கொண்டவளாம் ஒரு 5 பாவை அதுயாரோ எவரோ ராமன்தேடிய 868 தேவை ஒரு காவிய செல்வம் தேடாமல் தேடியதெய்வம் நீயானால் சம்மதம் அம்மா நெஞ்சம் உன்சந்நிதி அம்மா எல்லாம் உன்னோடு தானோ :9@9 - ShareChat
இரு மலர்கள் திரைப்படத்திலிருந்து T. M. சௌந்தரராஜன் மற்றும் P. சுஷீலா பாடிய மன்னிக்க வேண்டுகிறேன்… என்ற பாடல் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #❤️எங்கேயும் காதல் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 - ShareChat
01:23
‘ஆயிரம் பொன்னை பூமியில் கண்டான் அன்பை இந்த பூமியில் வைத்தான் அவன் ஒரு சரித்திரம் தாயினும் பெரிது தாயகம் என்றான் தனையே இந்த மண்ணுக்குத் தந்தான் அவன் ஒரு சரித்திரம்...’ #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #❤️எங்கேயும் காதல் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
😍Old மூவிஸ் - அவன் ஒரு சரித்திரம் Mdedeongs bayshorg நடேஷ் ஆயிரம் பொன்னைபூமியில் கண்டான் அன்பைஇந்தபூமியில் NATESH வைத்தான்அவன்ஒரு சரித்திரம் பெரிது தாயினும் தாயகம் என்றான் தனையேஇந்த மண்ணுக்குத்தந்தான் அவன்ஒரு சரித்திரம்' அவன் ஒரு சரித்திரம் Mdedeongs bayshorg நடேஷ் ஆயிரம் பொன்னைபூமியில் கண்டான் அன்பைஇந்தபூமியில் NATESH வைத்தான்அவன்ஒரு சரித்திரம் பெரிது தாயினும் தாயகம் என்றான் தனையேஇந்த மண்ணுக்குத்தந்தான் அவன்ஒரு சரித்திரம்' - ShareChat
1969 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அசோகன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “நம் நாடு”. இத்திரைப்படத்தை சி.பி.ஜம்புலிங்கம் இயக்கியிருந்தார். நாகி ரெட்டி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். எம்.ஜி.ஆரின் சினிமா பயணத்தில் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் அமைந்தது. ஹிட் அடித்த பாடல்கள் “நம் நாடு” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”, “நினைத்ததை நடத்தியே முடிப்பவன்”, “வாங்கய்யா வாத்தியாரய்யா” போன்ற பாடல்கள் காலத்தை தாண்டி நிற்கும் பாடல்களாக அமைந்தன. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் வாலியே எழுதியிருந்தார். வாலி எம்.ஜி.ஆருக்கு எழுதிய பல கிளாசிக் பாடல்களில் “நம் நாடு” பாடல்களும் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை பத்தே நாட்களில் முடித்துவிட்டார்களாம். இது எப்படி சாத்தியமானது என்பதை இப்போது பார்க்கலாம். எம்.ஜி.ஆர், தயாரிப்பாளர் நாகி ரெட்டியிடம் ‘உங்களது தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதாக இருக்கிறேன். கதை தயார் செய்யுங்கள்” என ஒரு நாள் கூறினாராம். அதன் படி கதாசிரியர் சொர்ணத்தை அழைத்து “எதாவது கதை இருந்தால் கூறுங்கள்” என்றாராம் நாகி ரெட்டி. சொர்ணம் பல கதைகளை கூற, அக்கதைகள் நாகி ரெட்டியை ஈர்க்கவில்லை. அப்போது சொர்ணம், “இன்னும் சில நாட்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. அதனை மனதில் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கலாமா?” என நாகி ரெட்டியிடம் கேட்டாராம். அதனை தொடர்ந்து தெலுங்கில் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்த “கதாநாயகுடு” என்ற திரைப்படத்தை ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்தனராம். அதன் பின் இத்திரைப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியது. 14 இடங்களில் படப்பிடிப்பு “நம் நாடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு, தயாரிப்பாளர் நாகி ரெட்டியின் விஜயா வாஹினி ஸ்டூடியோஸில்தான் நடைபெற்றது. அந்த ஸ்டூடியோவில் 14 படப்பிடிப்புத் தளங்கள் இருந்தது. அந்த அத்தனை படப்பிடிப்புத் தளங்களிலும் “நம் நாடு” திரைப்படத்திற்காக செட் போடப்பட்டதாம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காலை 9 மணிக்கு தொடங்கினால் அதற்கு அடுத்த நாள் காலை இரண்டு மணி வரை நடைபெறுமாம். பல நாட்கள் ஸ்டூடியோவிலேயே தூங்கிவிடுவாராம் எம்.ஜி.ஆர். அந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எம்.ஜி.ஆரே இயக்கினாராம். எம்.ஜி.ஆர் இல்லாத காட்சிகளை எல்லாம் அத்திரைப்படத்தின் இயக்குனர் ஜம்பு லிங்கம் படமாக்கினாராம். இவ்வாறு இரவும் பகலுமாக உழைத்து இத்திரைப்படத்தை பத்து நாட்களில் முடித்திருக்கிறார்கள். https://youtu.be/2P5565Ahci4 #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #❤️எங்கேயும் காதல் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 .
📷நினைவுகள் - IIIDIII IIIDIII - ShareChat
படம் – டவுன் பஸ் இசையமைப்பு – கே.வி.மஹாதேவன் இயற்றியவர் – கவிஞர் கா.மு.ஷெரிஃப் பாடியவர் – எம்.எஸ்.ராஜேஸ்வரி #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா #❤️எங்கேயும் காதல் #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 - es NAIESAN தலையவாரிப்புமுடிச்சேன் வாிவதங்குது கலையவாரிபிழூமுடிச்சேன் தெருவிலவந்த் எதங்குதுச சதர நின்றுநின்று காலும்கடுக்குத சேதா தெருவில்வந்துநின்றுநின்று காலும்கடுக்குது வாழியவழியப்பாத்துப் பாத்துக்கண்ணும்நோகுது வாழியவழியப்பாத்துப் பாத்துக்கண்ணும்நோகுது  ಖoi வந்தால்பேசநிறையசேதி நெஞ்சில்இருக்குது அவர் பேசநிறையசேதி வந்இறஞ்சில்ி இருக்குது படம் டவுன்பஸ் சையமைப்பு கேவிமஹாதேவன் இயற்றியவர் கவிஞர்காமுஷரிஃப் எம்எஸ்ராஜேஸ்வரி பாடியவர் es NAIESAN தலையவாரிப்புமுடிச்சேன் வாிவதங்குது கலையவாரிபிழூமுடிச்சேன் தெருவிலவந்த் எதங்குதுச சதர நின்றுநின்று காலும்கடுக்குத சேதா தெருவில்வந்துநின்றுநின்று காலும்கடுக்குது வாழியவழியப்பாத்துப் பாத்துக்கண்ணும்நோகுது வாழியவழியப்பாத்துப் பாத்துக்கண்ணும்நோகுது  ಖoi வந்தால்பேசநிறையசேதி நெஞ்சில்இருக்குது அவர் பேசநிறையசேதி வந்இறஞ்சில்ி இருக்குது படம் டவுன்பஸ் சையமைப்பு கேவிமஹாதேவன் இயற்றியவர் கவிஞர்காமுஷரிஃப் எம்எஸ்ராஜேஸ்வரி பாடியவர் - ShareChat
``பக்திப் படங்களின் வருகை குறைந்தது எதனால்?!" பொதுவாகவே கடவுள் பற்றிய தமிழர்களின் கற்பனைகளும், வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை. நட்டக்கல்லையும் வணங்குவார்கள், கலைநயம் மிக்க கோயில்களுக்குச் சென்றும் வழிபட்டு வருவார்கள். கூடவே, ஆன்மிகம் குறித்த கதைகளைக் கேட்பதில் பேரார்வம் கொண்டவர்கள். கிராமியத் திருவிழா தொடங்கி, பெருநகரங்கள் வரை நாடகங்களாக மக்கள் விடிய விடிய பார்த்துக் களிப்பார்கள். பக்திப் படம் 'சம்பூர்ண ராமாயணம்' பக்திப் படம் 'சம்பூர்ண ராமாயணம்' குறிப்பாக, நூறாண்டுகளுக்கு முன்பு புராணகாலக் கதைகளான ராமாயணம், மகாபாரதம் ஆகட்டும், மண்வாசனைக் கதைகளான `நல்ல தங்காள்', `கண்ணகி சபதம்' வரை பல வகையான நாடகங்கள் தமிழகத்தின் மேடைகளில் தினமும் எங்கோ ஒரு மூலையில் அரங்கேறிக்கொண்டே இருந்தன. கூத்து நாடகமாகி, நாடகம் சினிமாவாக மாறிய பிறகும், ராமாயணம், மகாபாரதமும் அவற்றின் துணைக் கதைகளும், ராஜா - ராணிக் கதைகளுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. கிட்டப்பா, பி.யூ.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர் எனப் பாடல்கள் பாடுவதில் வல்லமை பெற்றவர்களின் படங்கள் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தன. `ஹரிதாஸ்' ஒரே தியேட்டரில் மூன்று தீபாவளிகளைக் கொண்டாடியது. சிவாஜி - நாகேஷ் சிவாஜி - நாகேஷ் 1952-ல் கருணாநிதியின் வசனத்தில் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த `பராசக்தி'யின் வெற்றி, தமிழ் சினிமாவின் பார்வையை சமூகப் படங்களின் பக்கம் முற்றிலுமாகத் திருப்பியது. ஒன்றிரண்டு பக்திப் படங்கள் வந்தாலும், பெரிதாக வெற்றி பெறவில்லை. இப்படிப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர் நடித்த `மதுரை வீரன்' திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதுநாள் வரை கறுப்புக் கோயிலில் காவல் தெய்வமாக வழிபட்டுவந்த கிராம மக்கள் `மதுரை வீர'னைத் திரையில் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். தியேட்டர்களெல்லாம் திருவிழாக் கோயில்களாயின. மக்கள் அருகிலிருந்த நகரங்களுக்கு மதிய சாப்பாட்டை முடித்ததும் மாட்டு வண்டியைக் கட்டிக்கொண்டு ஆறு மணி காட்சியைப் பார்க்க வந்தனர். தியேட்டரைச் சுற்றியிருந்த பகுதிகளில் 100, 150 வண்டிகளில் குடும்பம் குடும்பமாக அழைத்து வந்தவர்களை இறக்கி விட்டுவிட்டு, சரித்துவிடப்பட்ட வண்டிக்கருகே காளை மாடுகள் வைக்கோலை மென்றுகொண்டிருந்தன. 1958-ல் வெளிவந்த `சம்பூர்ண ராமாயணம்' சென்னையில் 26 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. ராமராவ் ராமனாகவும், சீதையாக பத்மினியும், பரதனாக சிவாஜியும், டி.கே.பகவதி ராவணனாகவும் நடித்திருந்தனர். படைப்பை முன்னே நிறுத்தி சிவாஜி எனும் ஆளுமை பரதனாக பின்னே நின்றார். `சக்கரவர்த்தி திருமகன்' என ராமாயணத்தை எழுதிய ராஜாஜி, `பரதனைக் கண்டேன்' எனப் படத்தைப் பெரிதும் பாராட்டினார். கதை, வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். நாடகத் துறையிலிருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர். சிவாஜியின் நாடககால நண்பர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். ரவிவர்மா சிவன் - பார்வதி - விநாயகர், லட்சுமி, சரஸ்வதி என ஓவியங்களில் கடவுள்களைப் படைத்து உலகம் முழுவதும் புகழ்பெற்றார். எல்லோரது வீட்டுப் பூஜையறையில் இன்றும் ரவிவர்மா வரைந்த லட்சுமி, சரஸ்வதி படங்களே ஆட்சி செய்கின்றன. அப்படியொரு தாக்கத்தைத் திரையில் ஏற்படுத்திக் காட்டியவர், ஏ.பி.நாகராஜன். `திருவிளையாடல்', `சரஸ்வதி சபதம்', `கந்தன் கருணை', `திருவருட்செல்வர்', `திருமால் பெருமை', `அகத்தியர்', `கிருஷ்ண லீலா' ஆகிய படங்கள் இந்துக் கடவுள்களை மக்களின் கண்முன் நிறுத்தின. பட வெளியீட்டின்போது திரையில் தோன்றிய கடவுள்களுக்கு, விளக்கேற்றி பூஜை செய்தார்கள் ரசிகர்கள். குறிப்பாக, `திருவிளையாடல்' திரைப்படம் எக்காலத்தையும் வென்று தனித்துவம் பெற்று இன்றளவும் திகழ்கின்றது. எல்.பி ரெக்கார்டுகளில், கிராமபோன் இசைத்தட்டில் `திருவிளையாடல்' கதை, வசனம் ஒலிக்காத திருவிழாக்களே இல்லை என்கிற அளவில் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. `திருமலை தென்குமரி' எனும் இவரது படம், திருப்பதி தொடங்கி கன்னியாகுமரி வரை பேருந்திலேயே பயணிக்கும் யாத்திரை படமாக அமைந்து, அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. `வீரபாண்டி கட்டபொம்ம'னை இயக்கிய பி.ஆர்.பந்துலு, `கர்ணன்' திரைப்படத்தைத் தயாரித்து, மகாபாரதக் கதைக்குப் புகழ் சேர்த்தார். இந்த நிலையில், எம்.ஜி.ஆரை வைத்துப் பல படங்கள் எடுத்த முருக பக்தரான சாண்டோ சின்னப்பா தேவர், `துணைவன்', `தெய்வம்', `திருவருள்' எனப் பல படங்களைத் தயாரித்து, பக்திப் பயிர் வளர்த்தார். `கற்பகம்', `பணமா பாசமா' போன்ற குடும்பப் பாங்கான படங்களை இயக்கி வந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் சாமிப் படங்களின் மீது பார்வை திரும்பியது. `ஆதிபராசக்தி' படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது. பெண்கள் திரள் திரளாகப் புறப்பட்டுவந்து `ஆதிபராசக்தி'யை வழிபட்டுச் சென்றனர். 80-களின் மத்தியில் ஶ்ரீமன் நாராயணனின் பத்து அவதாரங்களையும் `தசாவதாரம்' எனும் பெயரில் இயக்கினார், படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த நேரத்தில் `அன்னக்கிளி', `16 வயதினிலே', `உதிரிப்பூக்கள்', `மவுன கீதங்கள்' போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவை நவீன சினிமாவை நோக்கி நகர்த்தின. எம்.ஜி.ஆர் அரசியலுக்குச் சென்றுவிட்டார். சிவாஜிக்கும் அத்தனை சிறப்பான படங்கள் அமையாத நேரம். 1978-ல் கே.சங்கர் இயக்கிய `வருவான் வடிவேலன்' திரைப்படம் புராணப் படமாக இல்லாமல், நடப்பு வாழ்க்கையில் முருகக் கடவுள் தன் பக்தைக்கு எப்படி உதவினார் என்பதை மலேசியா வரை சென்று பறைசாற்றியது. பக்திப் படங்களில் பெரும் வெற்றியைக் குவித்த படம் இது. பிறகு இவரின் இயக்கத்தில் வெளிவந்த `தேவி தரிசனம்', `தாய் மூகாம்பிகை', `மீனாட்சி திருவிளையாடல்', ராஜரிஷி', `ஆயிரம் கண்ணுடையாள்', `முப்பெரும் தேவியர்', `வெற்றி விநாயகர்' எனப் பல பக்திப் படங்களை இயக்கினார். 80-களில் ஆக்‌ஷன் ஹீரோ படங்கள், சமூகப் படங்கள் மற்றும் கிராமியப் படங்களை நோக்கி ரசிகர்கள் சென்றுவிட்டனர். அத்தி பூத்தாற்போல வந்த பக்திப் படங்களும் சுத்தமாக ஓடவில்லை. ஆடிவெள்ளிக்குப் பால்குடம் தூக்குகிற பெண்கள்தான் பக்திப் படங்களுக்குக் கை கொடுப்பவர்கள். அவர்கள் அனைவரும் டிவி முன்பாக உட்கார்ந்துவிட்டனர். வலைல் பிடித்தது அ முதல் அஃகு வரை. #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #❤️எங்கேயும் காதல் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - NATESAN NATESAN - ShareChat