
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
வாழ்க்கைப் படகு திரைப்படத்திலிருந்து
உன்னைத் தானே நான் அறிவேன்… என்ற பாடல் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ்
தமிழ்த் திரைப்படபின்னணிப் #பாடகர்_டி_எல்_மகராஜன்!
தமிழ்த் திரைப்பட உலகின் முதல் பின்னணிப் பாடகர் என்றப் பெருமையை ஈன்றிருக்கும் பழம்பெரு பாடகர் திருச்சி எஸ்.லோகநாதனின் மூத்தப் புதல்வரான டி.எல்.மகராஜன்’, தனது தந்தை வழியில் இசைஞானம் பெற்ற பின்னணிப் பாடகராவார். இவர் அக்கால நகைச்சுவை நடிகை சி.டி.ராஜகாந்தம் என்பவரின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1954 ஆம் ஆண்டில் மார்ச் திங்கள் 9 ஆம் நாள் திருச்சி லோகநாதன் – ராஜலக்ஷ்மி* தம்பதியருக்கு மூத்தப் புதல்வராகப் பிறந்த மகராஜன், தனது 10 வது வயதிலேயே ‘வள்ளலார்’ என்ற நாடகத்தில் முதன் முதலாகப் பாடி நடித்து பின்னர் தனது 12வதுவயதில் பிரபல இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் ‘திருவருட் செல்வர்’ (1967) படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.சௌந்திரராஜனுடன் இணைந்து, “காதலாகிக் கசிந்து” என்னும் பாடலைப் பாடி பிரபலமானார்.
டி.எல்.மகராஜன் திரைப் பாடல்களைக் காட்டிலும் ஏராளமான பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். இவரின் பக்திப் பாடல்கள் அடங்கிய ஒலி நாடாக்களும் குறு வட்டுகளும் நிறைய வெளி வந்திருக்கின்றன. திரைப் படப் பாடல்களைப் பொறுத்த மட்டிலும், 1980 ஆம் ஆண்டில் கவிஞர் புரட்சிதாசன் கதை வசனம் பாடல்களை இயற்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்த ‘நான் போட்ட சவால்’* (1980) படத்தில் இளையராஜா இசையில், இவர் பாடிய “நெஞ்சே உன் ஆசை என்ன” என்றப் பாடல் சிறந்ததொரு எழுச்சிப் பாடலாகப் புகழ் பெற்றது.
இதனைத் தவிர்த்து, இவர் பாடிய மேலும் சிலப் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. “உன்னை கேளாய்” (தேசம்) *”முன்னேறுதான்”* (இந்திரா), “காதல் யோகி” (தாளம்), “நீ கட்டும் சேலை” (புதிய மன்னர்கள்), “கொட்டி” (அண்ணன் என்னடா தம்பி என்னடா), “அயே சம்பா” (பாண்டவர் பூமி), “மச்சினிக்கு” (பூவே உனக்காக), “ஆலமர” மற்றும் “பூந்தேரில்” (பெரிய மருது), *”வந்தவனெல்லாம்”*
(கருமையில் ஓர் அழகு), *”கார்த்திகை மாதம்”(இருமுடி), “பக் பக் பக்” (பார்த்திபன் கனவு), “மேரே பியாரி” (இன்று போய் நாளை வா), “வாடி வாடி முயலே” ( அந்த நாள் ஞாபகம்), *”ரெட்ட ஜடை ராக்கம்மா”*(அன்பே அன்பே), “பூவாட்டம்”* (அரவிந்தன்), “செவ்வானமே”* (நல்லதொரு குடும்பம்), “நினைத்தால்”*(உன் கையில் குரோதம்), “அவன் பாதி”*(அவன் இவன்), “மார்கழிப் பூக்களே” ( அவன் அவள் அது), “அந்தி மழை மேகம்”* (நாயகன்) போன்ற நினைவில் நிற்கும் பாடல்களையும் டி.எல்.மகராஜன் தனது ரசிகர்களுக்கு விருந்தாகப் படைத்திருக்கிறார்.
டி.எல்.மகாராஜனுக்கு திருமணமாகி நிர்மலாதேவி என்ற மனைவியும், ஆதிலட்சுமி என்ற மகளும் உள்ளனர். திரைப்படங்களில் பாடுகின்ற வாய்ப்புகள் படிப் படியாக இவருக்கு குறைந்து விட்ட போதிலும், அவ்வப்போது மேடை இசை நிகழ்ச்சிகளிலும் கச்சேரிகளிலும் இவர் பங்கேற்று தனது இசையாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். இடையிடையே தொலைக்காட்சிகளின் இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் பங்கேற்று வருவதை இன்றும் காண முடியும்.
டி.எல்.மகராஜனின் இளைய சகோதரர் தீபன் சக்கரவர்த்தி இசைத் துறையில் இவரைக் காட்டிலும் சற்று பிரபலமானவர். இவர் ஒரு நடிகராகவும், புகழ் பெற்ற பலப் பாடல்களைப் பாடியிருக்கும் பின்னணிப் பாடகராகவும் தன்னை நிலை நாட்டிக் கொண்டவர். இவரின் மற்றொரு சகோதரரான் டி.எல்.தியாகராஜன் இவ்விருவரைப் போன்று புகழ் பெற இயலாவிட்டாலும் இவர் *‘பொம்பள மனசு’* என்ற படத்தில், ரத்தின சூரியன் என்பவர் இசையில்*”அமுத மழை பொழியும் முழு நிலவிலே”* என்றப் பாடலைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
#டி_எல்_மகராஜன்.
எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமாகத் திகழ்ந்த தன் இளம் பிராயத்தைப் பகிர்ந்தவர், ``கேள்வி ஞானத்துல பாட ஆரம்பிச்ச எனக்கு, `திருவருட்செல்வர்’ படத்துல பாட வாய்ப்பு கொடுத்தார் அந்தப் படத்தின் இயக்குநரான ஏ.பி.நாகராஜன் ஐயா. அந்தப் பாடல் ரெக்கார்டிங்க்கு போறதுக்கு முன்தினம். குண்டடிப்பட்டு ஆஸ்பத்திரியில சிகிச்சையிலேருந்த எம்.ஜி.ஆர் கிட்ட ஆசீர்வாதம் வாங்க என் பாட்டி சி.டி.ராஜகாந்தம் என்னைக் கூட்டிட்டுப்போனாங்க. அப்போ நான் கர்னாடக சங்கீதம் கத்துக்கலை.
நாங்க வந்ததுக்கான விவரத்தைக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியின் டீன், முக்கியமான மருத்துவர்கள், ஊழியர்கள் பலரையும் கூப்பிட்டார். கொஞ்ச நேரத்துல 50-க்கும் மேற்பட்டோர் அந்த அறையில கூடினாங்க. `பையன் சினிமால பாடப் போறான். எல்லோரும் பையனை ஆசீர்வாதம் பண்ணுங்க’ன்னார்.
பிறகு, பக்திப் பாடல் ஒண்ணு பாடச் சொன்னார் எம்.ஜி.ஆர். கண்ணை மூடி என் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர், எங்கப்பா பாடிய பாடலைப் பாடச் சொன்னார். `ஆசையே அலைபோலே’ பாடலைப் பாடினேன். உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆர் எழுந்து நின்னு வாழ்த்த, எல்லோரும் கைதட்டி என்னைப் பாராட்டினாங்க. `பையன் நல்லா பாடுறான். உடனே கர்னாடக சங்கீதம் கத்துக்கொடுங்க. அதுக்கான செலவை நானே ஏத்துக்கிறேன்’னு பாட்டிகிட்ட சொல்லி, உச்சிமோந்து என்னை வாழ்த்தினார்.
முதல்வரா இருந்தப்போ மதுரையில முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய எம்.ஜி.ஆர், அந்த நிகழ்ச்சியில பாட எனக்கு வாய்ப்பு கொடுத்தார். என் கல்யாணத்தின்போது அவர் உடல்நிலை சரியில்லாம இருந்தார். டாக்டர்கள் சொன்னதை மீறி, என் கல்யாணத்தை நடத்தி வைக்க வந்தவர், கல்யாண செலவைவிட ரெண்டு மடங்கு தொகையை அன்பளிப்பா கொடுத்தார்" பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இணையத்தில் இருந்து
#😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்…
அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம்…
சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்…
அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கம்
#😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக #old songs
நீ வாழ்க.. நீ வாழ்க..
ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
நீ எந்தன் கோவில் நானங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல #😍Old மூவிஸ் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😔தனிமை வாழ்க்கை 😓
நெஞ்சத்தில் நேர்மை வந்தால்
அதில் நீதிக்கு பெருமை உண்டு ... ஹோ ...
வஞ்சகம் தேரில் வந்தால்
அதை வணங்கிட முறையும் உண்டோ ... #💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
ஆடி வரும் வாழ்வினிலே….
ஆசை என்னும் மேடையிலே ஆடி வரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே #🎬 சினிமா #😍Old மூவிஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ
#நடிகர்_ஜே_பி_சந்திரபாபு
சுவையான தகவல்கள்
1947ஆம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.
தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.
எஸ். ராதாகிருஷ்ணன் இந்தியக் குடியரசு தலைவராக இருக்கையில் அவரைச் சந்திக்கச் சென்ற தமிழ்த் திரைக் கலைஞர்கள் குழுவில் பங்கேற்றிருந்த சந்திரபாபு “பிறக்கும்போதும் அழுகின்றான்” என்ற தமது பாடலைப் பாடிக் காட்டினார். அதை வெகுவாகப் பாராட்டிய குடியரசுத் தலைவரின் மடிமீது பாய்ந்து அமர்ந்து, அவரது கன்னத்தை வருடி “நீ ரசிகன்” என்றார் சந்திரபாபு! சுற்றியிருந்தவர்கள் பதறினும், குடியரசுத் தலைவர் கோபிக்காது சிரித்தார்.
சந்திரபாபு தன்னுடைய படங்களில் தன் சொந்தக் குரலில் பாடுவது தான் வழக்கம் எனினும், பறக்கும் பாவை என்னும் படத்தில் சுகமெதிலே இதயத்திலா என்னும் படத்தில் கே.ஜே.ஏசுதாஸின் பாடலுக்கு இவர் வாயசைத்தார். இதைப்போலவே, சபாஷ் மீனா திரைப்படத்தில் ஆசைக்கிளியே கோபமா என்ற பாடலை இவருக்காகப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.
தாம் நடிக்காவிடினும் பெண் என்னும் திரைப்படத்தில், நகைச்சுவை வேடம் ஏற்றிருந்த எஸ்.பாலசந்தருக்காக கல்யாணம் வேணும் வாழ்வில் என்னும் பாடலைப் பாடினார். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற படத்தில், ‘ஜாலி லைஃப்” என்னும் இவரது பின்னணிப் பாடலுக்குக்குத் திரையில் நடித்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
எம்.ஜி.ஆரை வைத்து “மாடி வீட்டு ஏழை” என்னும் திரைப்படத்தை இயக்க சந்திரபாபு முயன்றார். இரண்டாம் நாள் படப்பிடிப்புடன் இது முடிவுற்றது. இந்த முயற்சியின் தோல்விக்கு இரு தரப்பினரையுமே இன்று வரை காரணமாகச் சொல்வதும் தொடர்கிறது.
புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது!
பாடி நடித்த பாடல்கள்
ஜாலி லைப் ( கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
விளையாடு ராஜா ( நான் சொல்லும் ரகசியம் 1959 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
கண்மணிப் பாப்பா ( தட்டுங்கள் திறக்கப்படும் 1966 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தாங்கதம்மா (செந்தாமரை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ஆளு கனம் ( கண்கள் 1953 கம்பதாசன் இயற்றிய பாடல் )
கோவா மாம்பழமே ( மாமன் மகள் 1955 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
புத்தியுள்ள மனிதன் ( அன்னை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ராக் ராக் அண்ட் ரோல் ( பதிபக்தி 1958 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
பம்பரக் கண்ணாலே ( மணமகள் தேவை 1957 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
ஐயோ மச்சான் மன்னா ( ஸ்ரீ வள்ளி 1961 ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
ஒற்றைக் கண்ணு ( வாலிப விருந்து 1967 சீத்தாராமன் இயற்றிய பாடல் )
எப்போ வச்சிக்கலாம் ( பந்தபாசம் 1962 மாயவநாதன் இயற்றிய பாடல் )
என்னைத் தெரியலையா ( யாருக்கு சொந்தம் 1963 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
சிரிப்பு வருது ( ஆண்டவன் கட்டளை 1964 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தனியா தவிக்கிற வயசு ( பாதகாணிக்கை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
கவலையில்லாத மனிதன் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
பிறக்கும் போதும் அழுகின்றாய் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஒன்னுமே புரியல ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஹலோ மை டியர் ( புதையல் 1957 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
குங்குமப்பூவே ( மரகதம் 1959 கு.மா.பாலசுப்ரமணியன் இயற்றிய பாடல் )
தடுக்காதே என்னை ( நாடோடி மன்னன் 1958 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
தில்லானா பாட்டு ( புதுமைப்பித்தன் 1957 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
சரியான ஜோடி தந்தானே ( காத்தவராயன் 1958 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
நான் ஒரு முட்டாளுங்க ( சகோதரி 1959 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
சந்தோஷம் வேணுமென்றால் ( சுகம் எங்கே 1954 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
அச்சு நிமிர்ந்த வண்டி ( குலேபகாவலி 1955 )
சொல்லுறதை சொல்லிப்புட்டேன்
( பாண்டித்தேவன் 1959 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
நீ ஆடினால் ( பாண்டித்தேவன் 1959 )
மனதிற்குகந்த மயிலே ( பெற்றமனம் 1960 )
பாடிப் பாடிப் ( பெற்றமனம் 1960 பாரதிதாசன் ) #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😔தனிமை வாழ்க்கை 😓 #🎬 சினிமா







![old songs - Noorandul Kalaun] NATESAN குறையாது வளரும் பிறையாக குவியாத குமுத மலராக குறையாது வளரும் பிறையாக Natesh குவியாத குமுத மலராக குன்றாத நவநிதியாக தநித்நிரும துுன்ளாக ಜ್ೆ6 [Sunಹ நீவாழ்க. நீவாழ்க. Noorandul Kalaun] NATESAN குறையாது வளரும் பிறையாக குவியாத குமுத மலராக குறையாது வளரும் பிறையாக Natesh குவியாத குமுத மலராக குன்றாத நவநிதியாக தநித்நிரும துுன்ளாக ಜ್ೆ6 [Sunಹ நீவாழ்க. நீவாழ்க. - ShareChat old songs - Noorandul Kalaun] NATESAN குறையாது வளரும் பிறையாக குவியாத குமுத மலராக குறையாது வளரும் பிறையாக Natesh குவியாத குமுத மலராக குன்றாத நவநிதியாக தநித்நிரும துுன்ளாக ಜ್ೆ6 [Sunಹ நீவாழ்க. நீவாழ்க. Noorandul Kalaun] NATESAN குறையாது வளரும் பிறையாக குவியாத குமுத மலராக குறையாது வளரும் பிறையாக Natesh குவியாத குமுத மலராக குன்றாத நவநிதியாக தநித்நிரும துுன்ளாக ಜ್ೆ6 [Sunಹ நீவாழ்க. நீவாழ்க. - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_374239_1796b0f_1772988369488_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=488_sc.jpg)

![💪கெத்து ஸ்டேட்டஸ் - நடேஷ் Naon flanoigillal நெஞ்சத்தில் நேர்மைவந்தால் அதில்நிதிக்கு பெருமைஉண்டு Gfn VtuEsa] வஞ்சகம்தேரில் வந்தால் அதைவணங்கிட முறையும்உண்டோ நடேஷ் Naon flanoigillal நெஞ்சத்தில் நேர்மைவந்தால் அதில்நிதிக்கு பெருமைஉண்டு Gfn VtuEsa] வஞ்சகம்தேரில் வந்தால் அதைவணங்கிட முறையும்உண்டோ - ShareChat 💪கெத்து ஸ்டேட்டஸ் - நடேஷ் Naon flanoigillal நெஞ்சத்தில் நேர்மைவந்தால் அதில்நிதிக்கு பெருமைஉண்டு Gfn VtuEsa] வஞ்சகம்தேரில் வந்தால் அதைவணங்கிட முறையும்உண்டோ நடேஷ் Naon flanoigillal நெஞ்சத்தில் நேர்மைவந்தால் அதில்நிதிக்கு பெருமைஉண்டு Gfn VtuEsa] வஞ்சகம்தேரில் வந்தால் அதைவணங்கிட முறையும்உண்டோ - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_492118_391b302d_1772979490769_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=769_sc.jpg)

