
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#எம்ஜிஆர்_சிவாஜியின் முதல் வெள்ளிவிழா படங்கள் உருவான சுவாரஸ்ய பின்னணி!
நாற்பதுகளில் சிவாஜி கணேசன் நாடகங்களில் நடித்து வந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. டி.எஸ்.நடராஜனின் என் தங்கை நாடகம் அப்போது நல்ல வரவேற்பை பெற்றது. அதில் பாசமிகு அண்ணனாக சிவாஜி கணேசன் நடித்தார். கண் தெரியாத தங்கைக்காக தனது காதலை தியாகம் செய்யும் கதாபாத்திரம்.
இதே காலகட்டத்தில் பாவலர் பாலசுந்தரத்தின் பராசக்தி நாடகமும் மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது.
இதுவும் அண்ணன், தங்கை கதைதான். இரண்டு நாடகங்களின் கதையும் அண்ணன், தங்கைப் பாசம் என்ற நேர்க்கோட்டில் பயணிப்பதால், இரண்டு கதைகளையும் ஒன்றாக்கி ஒரு திரைப்படம் தயாரித்தால் என்ன என்று கோவையில் இயங்கி வந்த சென்ட்ரல் ஸ்டுடியோஸ் கருதியது. அதற்கு டி.எஸ்.நடராஜன் மறுப்பு தெரிவித்தார்.
தனது என் தங்கை நாடகம் மாறுதலின்றி திரைப்படமாக வேண்டும் என விரும்பினார். இதனால் சென்ட்ரல் ஸ்டுடியோஸின் முயற்சி பாதியிலேயே நின்றது. அந்த நேரத்தில் பராசக்தி நாடகத்தின் உரிமையை பி.ஏ.பெருமாள் வாங்கி, ஏவி மெய்யப்ப செட்டியாருடன் இணைந்து திரைப்படமாக்கும் வேலையில் இறங்கினார். என் தங்கை நாடகத்தில் நடித்து வந்த சிவாஜி அப்போது, அஞ்சலி தேவியின் பூங்கோதை படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். அவரை சென்னை வரவழைத்து, மேக்கப் டெஸ்ட் எடுத்து, பராசக்தியில் பிரதான வேடத்தில் நடிக்க வைத்தனர்.
பராசக்தியை திரைப்படமாக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கையில், என் தங்கை நாடகத்தின் உரிமையை அசோகா பிக்சர்ஸ் வாங்கி நாராயணமூர்த்தியை இயக்குனராக ஒப்பந்தம் செய்தது. என் தங்கை நாடகத்தில் சிவாஜி நடித்து வந்த பிரதான வேடத்தில் திருச்சி லோகநாதனை நடிக்க வைத்தனர். அவரது நடிப்பு திருப்தி தராததால் அவரை மாற்றி எம்ஜி ராமச்சந்திரனை நாயகனாக்கினர்.
பராசக்தி பல நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு சிவாஜியின் ஒல்லியான தோற்றமும், வசன உச்சரிப்பும், சரியாக வருமா என்ற சந்தேகத்தை ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு ஏற்படுத்தியது. அவர் கே.ஆர்.ராமசாமியை சிவாஜிக்குப் பதில் நடிக்க வைக்க விரும்பினார். ஆனால், பெருமாள் சிவாஜி நடிப்பதில் உறுதியாக இருந்தார். பல வருடங்கள் தயாரிப்பில் இருந்த பராசக்தி 1952 இல் வெளியீட்டுக்கு தயாரானது. அந்த நேரத்தில் அஞ்சலி தேவியின் பூங்கோதையும் வெளியாகவிருந்தது. பெருமாள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பூங்கோதை வெளியீட்டை தள்ளி வைத்து, பராசக்தி சிவாஜியின் முதல் படமாக வெளியாக அஞ்சலி தேவி உதவினார்.
பராசக்திக்கு பல மாதங்கள் முன்பு 1952 மே 31 ஆம் தேதி என் தங்கை எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றியை பெற்றது. அவரது நடிப்பில் 175 நாள்களை கடந்த முதல் வெள்ளி விழாப் படமாக அது அமைந்தது. 1952 அக்டோபர் 17 தீபாவளியை முன்னிட்டு வெளியான பராசக்தி பெரும் சலசலப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியது. சர்ச்சைகளை கடந்து திரையிட்ட 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் அனைத்திலும் 50 நாள்கள் ஓடிய படம், 175 தினங்களை கடந்து வெற்றி பெற்றது.
அண்ணன், தங்கை பாசம் என்ற ஒரே சரடில் அமைந்த கதைதான் என் தங்கையும், பராசக்தியும். இரண்டுமே வெள்ளி விழாப் படங்கள்.
tamil.news18.com #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
சரஸ்வதி சபதம் திரைப்படத்திலிருந்து #😍Old மூவிஸ் #❤️எங்கேயும் காதல் #📷நினைவுகள் #🎬 சினிமா
ராமன் தேடிய சீதை திரைப்படத்திலிருந்து #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #❤️எங்கேயும் காதல் #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
அவன்தான் மனிதன் திரைப்படம் #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #💝இதயத்தின் துடிப்பு நீ #💪கெத்து ஸ்டேட்டஸ்
ஆலயம் ஆவது மங்கை மனது #🎬 சினிமா #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #❤️எங்கேயும் காதல்
#திருவேற்காடு #கருமாரியம்மன்*
கோயில் பற்றி பார்ப்போம்,
🐉பாம்பே தலையணியாம், வேப்பிலையோ பஞ்சு மெத்தை' என அம்மன் தாலாட்டில் விவரிக்கும் திருவேற்காடு கருமாரியம்மன், மிகப்பெரிய புற்றில் கருநாகமாக அன்னை குடி கொண்டு இருந்ததும், வேம்பு வடிவமாகவே சக்தி உருமாறி நின்றதும் இங்குதான். அருள் பொழிய நாகமும், மருந்தாக வேம்பும் இங்கே காட்சி தருவது அற்புதமான காட்சி.
🐉🌸சிவபெருமான் தேவர்களின் துன்பம் நீக்வதற்காக தேவலோகம் செல்ல வேண்டிவந்தது. அப்போது உமையாளிடம் நீயே சிவனும் சக்தியுமாகி ஐந்தொழிலையும் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இந்த திருநீற்றினால் அருள்புரிவாயாக என்று கூறிச் சென்றார்.
🐉🌸அம்மையும் அகத்தியரிடம் தாம் ஆட்சி செய்ய தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான் சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி
☄1. அந்தரக்கன்னி,
☄2. ஆகாயக்கன்னி,
☄3.பிரமணக்கன்னி,
☄4. காமாட்சி,
☄5. மீனாட்சி,
☄6.விசாலாட்சி,
☄7.கருமாரி செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள்.
🐉🌸இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள். பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர்.
🐉🌸சக்தியாகிய கருமாரி இரண்டு உருவம் கொண்டாள். முதல் உருவம் பிரகாசத்துடன் இருந்தது.இரண்டாவது நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது.
🐉🌸கருமாரி மகாவிஷ்ணுக்கு காட்சி தந்தாள். இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார். அப்போது அம்மன் அகத்தியரைப் பார்த்து முனிவா நான் உலக மக்கள் உய்வதற்காக பாம்பு உருவம் கொண்டு புற்றில் அமர்ந்து பலயுகாந்த காலங்கள் அருளாட்சி செய்வேன், கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன் என்று கருநாக வடிவம் எடுத்தாள். இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது.
🐉🌸அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது விஷேசம். மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது.
🐉🌸மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது.
🐉🌸இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் கந்து வட்டி தீர்தல், வியாதி வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்கின்றனர்.
🐉🌸பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக கூறுகிறார்கள்.
🐉🌸பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு.
🐉🌸திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டு தலத்தைப் பற்றி பாடியுள்ளார்,திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருக்கோயிலான வேதபுரீஸ்வரர் - பாலாம்பிகை ஆலயமும் அருகிலேயே உள்ளது.
🐉🌸அகத்தியருக்குத் திருமணக் காட்சி அருளிய தலம் இது.
🐉🌸அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.
🐉🌸அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலம் திருவேற்காடு.
🐉🌸கூரை வேய்ந்த கோவில் அமைத்து முதன் முதலில் கருமாரியம்மனுக்கு உருவமாக "ஏழு கரகங்கள்" பிரதிஷ்டை செய்தவர் மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள்.
🐉🌸தற்போது ஒவ்வொரு கருமாரியம்மனின் திருவுருவப் படத்தில் வலது புறத்தில் பானையுடன் முகம் அமைய பெற்று மற்றும் வேப்பிலையுடன் காட்சி அளிக்கிறதே அதுதான் "கரகம்". இதன் பொருள் கருமாரியம்மனின் ஆதி உருவம் "கரகம்" என்பதுதான்.
🐉🌸மாரி என்றால் மழை போன்றவள். கருமாரி என்றால் கரியநிறத்து மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள்.
☄க - கலைமகள்;
☄ரு - ருத்ரி;
☄மா - திருமகள்;
☄ரி - ரீங்காரி (நாத வடிவானவள்)
என இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது
🐉🌸மூலவரான அன்னை சுயம்புவாக சாந்தசொரூபியாக காட்சி அளிக்கிறாள். இவளுக்குப் பின்பு இருக்கும் அம்மன் கத்தி, சூலம், டமருகம், கபாலம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும்படி காட்சி தருகிறாள்.
🐉🌸அரச மர விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகர், பிரத்யங்கரா தேவி, நவகிரகம், சீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, காயத்ரி, மஹாலக்ஷ்மி, அங்காளம்மன், சாவித்ரி, துர்கை, ராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்களின் சந்நிதிகள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.
🐉🌸சகல நோய்களையும் தீர்க்கும் அம்மனின் பிரசாதமான வேப்பிலையை மக்கள் பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். தீர்த்தமும் வேப்பிலையும் தீராத நோய்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. வேப்பிலையும் பிரம்பும் கொண்டு இங்கு மந்திரிக்கப்பட்ட மக்கள், எந்த பயமும் இன்றி மகிழ்ச்சி கொள்கிறார்கள்.
🐉🌸ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள புற்றில் பால் ஊற்றினால் தோஷங்கள் விலகுகின்றன.
🐉🌸திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிஷேகம், உப்பு காணிக்கை, மாலை அணிவித்தல், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், கல்யாண உற்ஸவம், பொங்கல் வைத்தல், அக்கினி சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கண்ணடக்கம், வெள்ளிக்காணிக்கை செலுத்தபடுகிறது.
🐉🌸ஒருமுறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால், கோபம் கொண்ட சக்தி அவனை சபித்து இருளாக்கினாள். பின்னர் கோபம் தணிந்த அன்னை சூரியனின் வேண்டுகோளுக்காக இந்த தலத்தில் அமர்ந்து சூரியனின் பூஜையைப் பெறுகிறாள் என்று வேறொரு வரலாறு கூறுகிறது.
🐉🌸புற்றில் வாழ்ந்த நாகம் ஒன்று அம்மனின் அருட்காட்சியைக் காட்டியதால் இங்கு கோயில் உருவானதாகக் கூறுகிறார்கள்.
புற்றில் இருந்த அம்மன் சுயம்புவாக வெளியானதால் கருவில் இல்லாத கருமாரி அன்னை என்று போற்றப்படுகிறாள்.
🐉🌸ஆடி மாதம் தொடங்கி புரட்டாசி வரையிலான 12 வாரங்களும் இங்கு அம்மனுக்கு சிறப்பான பண்டிகை நாள்கள். மேலும் தை மாத பிரம்மோற்ஸவம், அமாவாசை, சித்ரா பௌர்ணமி, நவராத்திரி என எல்லா மாதங்களுமே அம்மனுக்கு இங்கு விழா நாள்கள்தான்.
🐉🌸காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் பக்தர்களுக்கு ஒரு ஆன்மிக மருத்துவமனையாகவே விளங்கி வருகிறது,
🐉🌸இந்த ஆலயத்தில் இருக்கும் 'பதி விளக்கு' அணையாத விளக்கு. அம்மனையும், இந்த விளக்கையும் தரிசித்தால் மாங்கல்ய பலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
🐉🌸தன்னை நம்பி வரும் பெண்களுக்கு மாங்கல்ய வரமளித்து, அவர்களை சுமங்கலியாக வாழ வைக்கும் இந்த அம்மனுக்கு தாலிகளே அதிகம் காணிக்கையாக அளிக்கப்படுகிறது. செவ்வாய் தோறும் இங்கு காலை 10 மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய தோஷ பரிகார பூஜை சிறப்பானது.
🐉🌸தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது, இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது.
#அன்றாடம்_ஆன்மீகம். #அம்மன் #பராசத்தி அம்மன் கலெக்சன்
#சம்பூர்ண_ராமாயணம்
#இயக்குனர்_சோமு
இராமாயண காவியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ராமராக என். டி. ராமராவும் பரதனாக சிவாஜிகணேசனும் ராமரின் மனைவி சீதையாக பத்மினியும், சத்துருக்கனாக பி. வி. நரசிம்ம பாரதியும் நடித்து சிறப்பித்துள்ளனர்.
பரதனின் (சிவாஜி கணேசன்) தாயின் சூழ்ச்சியின் காரணமாக முடிசூடவிருந்த இராமர் 14 வருடங்கள் வனவாசம் செல்ல ஏற்பட்டது.இச்சம்பவமறியாது தாய் கூறிய பின் தெரிந்து கொள்ளும் பரதன் தன் தாயை அவதூறாகப் பேசியவாறு ராமரின் பாதம் நோக்கி ஓடுகிறான்.அங்கு இராமருக்கு சேவையாற்ற விரும்பும் பரதனின் அன்பினை மெச்சுகின்றார் இராமரும். பின்னர் நடைபெறும் காப்பியச் சிறப்புமிக்க இராமரின் இலங்கை யுத்தம் இராவண அழிப்பு என்பன திரைக்கதை முடிவாகும்.
ஏ.பி.நாகராஜன்-எம்.ஏ.வேணு கூட்டணியில் தயாரிக்கப்பட்ட பல படங்களை இயக்கிய டைரக்டர் கே.சோமு, தமிழின் மிக நீளமான படமான "சம்பூர்ண ராமாயண"த்தை விறுவிறுப்பாக இயக்கி, வெள்ளி விழாப் படமாக்கினார்.
சோமுவின் சொந்த ஊர் பழனி. 1917-ம் ஆண்டில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் 12-வது பிள்ளையாகப் பிறந்தவர். இவரது மூத்த அண்ணன் உடுமலைப்பேட்டையில் பிரபல வக்கீலாக இருந்தார்.
சோமுவின் மற்றொரு அண்ணன், நாடகங்கள் நடத்துவதிலும், நடிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து, சோமுவும் நாடகத்தில் நடித்தார். ராஜாஜி எழுதிய "விமோசனம்" என்ற மதுவிலக்குப் பிரசார கதையை நாடகமாக நடத்தினார்.
நகரசபை அலுவலகத்தில் வேலை கிடைத்தும், அதை உதறித் தள்ளிவிட்டு, சேலம் மாடர்ன் தியேட்டர்சில் நடிகராகச் சேர்ந்தார். எம்.ஜி.ஆர். தளபதியாக நடித்த "மந்திரிகுமாரி" யில் துணைத்தளபதி வேடம் இவருக்குக் கிடைத்தது.
இவரைப் பார்த்தவர்கள், "யார் இந்த புதுமுகம்? எம்.கே. ராதாவைப்போல் இருக்கிறாரே!" என்றனர்.
சினிமாவில் நடிகராக முன்னேற வேண்டும் என்பதே சோமுவின் ஆசை. ஆனால் இவருடைய திறமையைக் கண்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டு, துணை டைரக்டர் பதவியை கொடுத்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ், ஆங்கிலத்தில் "ஜங்கிள்" (காடு) என்ற ஆங்கிலப்படத்தைத் தயாரித்தது. அதன் டைரக்டரான வில்லியம் பர்க் என்ற ஆங்கிலேய டைரக்டருக்கு துணை டைரக்டராக சோமு பணியாற்றினார்.
இந்த காலக்கட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பணியாற்றிய கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோருடன் பழகி, அவர்களின் நட்பைப் பெற்றார், சோமு.
மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகியாகப்பணியாற்றிய எம்.ஏ. வேணு, அதிலிருந்து விலகி "எம்.ஏ.வி. பிக்சர்ஸ்" என்ற படக்கம்பெனியைத் தொடங்கினார்.
இந்த நிறுவனத்தின் முதல் படம் "மாங்கல்யம்." இதன் கதை -வசனத்தை எழுதிய ஏ.பி. நாகராஜன், கதாநாயகனாகவும் நடித்தார். பி.எஸ்.சரோஜா கதாநாயகி. மற்றும் ராஜசுலோசனா, எம்.என்.நம்பியார் நடித்தனர்.
1954-ல் வெளிவந்த இந்த திரைப்படத்தை கே.சோமு டைரக்ட் செய்தார். முதல் படமே, வெற்றிப்படமாக அமைந்தது.
"எம்.ஏ.வி"யின் இரண்டாவது படம் "பெண்ணரசி." இதில் ஏ.பி.நாகராஜனும், சூர்யகலாவும் ஜோடியாக நடித்தனர். மற்றும் கண்ணாம்பா, பி.எஸ்.வீரப்பா, நம்பியார், ஈ.வி.சரோஜா, ராஜசுலோசனா நடித்தனர். இதை சோமு டைரக்ட் செய்தார்.
இதைத்தொடர்ந்து, எம்.ஏ.வேணு -ஏ.பி.நாகராஜன் - கே.சோமு ஆகியோர் ஒரு கூட்டணியாக செயல்பட்டு, பல வெற்றிப் படங்களை வழங்கினார்.
அஞ்சலிதேவி - எம்.என்.கண்ணப்பா நடித்த "டவுன் பஸ்" குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம். "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா", "பொன்னான வாழ்வே மண்ணாகி போமா" ஆகியவை இதில் இடம் பெற்ற "சூப்பர் ஹிட்" பாடல்கள்.
சோமு இயக்கிய 4-வது படம் "நான் பெற்ற செல்வம்." இதில் சிவாஜிகணேசனும், ஜி.வரலட்சுமியும் ஜோடியாக நடித்தனர்.
பிறகு சோமு இயக்கிய "மக்களைப் பெற்ற மகராசி", வரலாறு படைத்த படமாகும். தமிழ்ப்பட உலகில், வட்டாரத் தமிழ் வசனம் முதன் முதலாக இடம் பெற்ற படம். இது சிவாஜிகணேசன் கொங்குத் தமிழ் பேசி அற்புதமாக நடித்தார். மற்றும் பானுமதி, கண்ணாம்பா, வி.கே.ராமசாமி ஆகியோரும் நடித்தனர்.
"ரத்தக்கண்ணீர்" (1954) படத்துக்கு பிறகு, மீண்டும் நாடக உலகுக்குத் திரும்பிவிட்ட எம்.ஆர்.ராதாவை திரும்பவும் சினிமாவில் நடிக்க வைத்து, அவர் ஏராளமான படங்களில் நடிப்பதற்கு வழிவகுத்த பெருமை சோமுவுக்கும், ஏ.பி.நாகராஜனுக்கும் உண்டு.
அவரையும், சவுகார் ஜானகியையும் ஜோடியாக நடிக்க வைத்து, ஏ.பி.நாகராஜன் கதை வசனத்தில், 28 நாட்களில் படத்தை எடுத்து முடித்தார், சோமு. அந்தப் படம்தான் 16-2-1958-ல் வெளிவந்த "நல்ல இடத்து சம்பந்தம்." சென்சாரில் ஒரு அடி கூட வெட்டப்படாமல் வெளிவந்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கிய புதிதில், அதிக பாடல்கள் இடம் பெற்றதால் படங்கள் நீளமாக இருந்தன. அவற்றின் நீளம் சுமார் 20 ஆயிரம் அடியாக இருந்தன.
தமிழில் மிக நீளமான படத்தை, விறுவிறுப்பாக இயக்கியவர் என்ற பெருமை கே.சோமுவுக்கு உண்டு. அந்தப் படம்தான் "சம்பூர்ண ராமாயணம்." 14-4-1958-ல் வெளிவந்த இந்தப் படத்தின் நீளம் 22,953 அடி.
anuradha #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
தம்பிக்கு எந்த ஊரு திரைப்படம் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💝இதயத்தின் துடிப்பு நீ #❤️எங்கேயும் காதல் #💪கெத்து ஸ்டேட்டஸ்
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை! #காலை வணக்கம் #காலை வணக்கம் நண்பர்களே
இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை
இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃







