ஹலோ சகி & சகோ ... வணக்கம் மறுபடியும் புது கதையில சந்திக்கிறது ரொம்ப சந்தோஷம் ... எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்க நம்பிற ... இந்த கதையை தொடர்ந்து படியுங்க ... இந்த கதை டிஃபரண்டான கதை அதோட சின்ன முன்னோட்டம் ...
Aunty hero story
Angry Hero + helping mind girl ...
நாயகன் : ராவணன்
நாயகி : மைத்ரேயி
எதிர் திசையில் இருப்பவர்கள் எப்படி ஒன்று சேருவார்கள் ...
தன்னலமற்று இருப்பவளை காலத்தின் கட்டாயத்தில் கரம் பிடித்த அவனோ .. அவளை ஏற்பானா ... இல்லை வதைப்பானா .... அவள் யார் என்று உண்மை தெரிந்தால் !!! ... இவன் படும் பாடு எத்தனை ??? ...
குடும்பம் காதல் ரொமான்ஸ் ஆக்சன் வில்லத்தனம் கலந்த அதிரடி கலந்த காதல் கதை ...
ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி ...
சக்திசுரே பெண்மையை போற்றுவோம் நாவல்ஸ் 🪔
அத்தியாயம் 1
சென்னையில் இருந்து மதுரை செல்லும் வழியில் ... எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் டெம்பிள் சிட்டி மதுரையின் மையப் புள்ளி ... இரவு வேளையில் மணி 12 மணி கடந்த நிலையில் ...
எங்கடி போற ??? ...
கொஞ்சம் நில்லு !! ...
எதை சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா ... என்ன பொண்ணா ... ச்சே ... நைட் டைம்ல ... என்ன பாடா படுத்துறா ...
அம்மா அவ வருவா ... நீங்க உங்க வேலைய பாருங்க ... சாப்பிட தானே வந்தீங்க சாப்பிடுங்க ...
கழுத வரட்டும் ... இவளை பெத்ததுக்கு பெக்காமையே இருந்திருக்கலாம் ...
ஆமாமா ! நீங்க சொன்ன மாதிரி ...
அக்கா மாதிரியே நடந்துக்குற ..
வயசு ஏறிக்கிட்டே இருக்கே தவிர ... ஆனா ! ... இவ இன்னும் குழந்தை மாதிரி இருக்கா ..
என்ன பண்றது ???? ...
நம்ம தலை எழுத்து ...
அதேசமயம் தூரத்தில்
ஒரு கார் மரத்தில் மோதி
தலையில் அடிபட்ட நிலையில் ...
ஒருவர் உயிருக்காக போராடிக் கொண்டிருக்க ..
ஒரு சில நிமிடத்தில் அங்கே கூட்டம் கூடிவிட்டது ....
.
அதைப் பார்த்தபடி அதிவேகமாக ஓடி வந்த அவளோ ... தன் கையில் ஒரு அழகிய குட்டி பொம்மையும் பிடிக்க தவறவில்லை ... அதே சமயம் அவள் மனமோ அதிக படபடப்புடன் அடித்துக் கொண்டிருந்தது .... முகம் எல்லாம் வேர்த்த நிலையும் பொருள் படுத்தாமல் கொஞ்சம் தள்ளுங்க ... என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ??? ... இப்படியே வேடிக்கை பார்த்துகிட்டு இருப்பீங்களா ??? .... யாராவது தூக்குங்க ...
ஏம்மா ! நீ சின்ன பொண்ணு ... முதல்ல இங்க இருந்து போ .... உங்க அப்பா அம்மா எங்க ??? .. இது ஆக்சிடென்ட் கேஸ் ...
சின்ன பொண்ணா ....
பெரிய பொண்ணா ... முதல்ல ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்க ...
ஒரு மனிதாபிமானம் அடிப்படையில ...
அந்த பொண்ணு சொல்றதும் சரிதானே ... சீக்கிரம் யாராவது போன் பண்ணுங்க ...
அதேசமயம் தலையில் அடிபட்ட நிலையில் மிகுந்த ரத்தத்துடன் இருப்பதைக் கண்டவளோ ..
எதைப் பற்றியும் யோசிக்காமல் தடைகளை மீறி உள்ளே செல்ல ...
பாப்பா என்ன பண்ற ??? ... வெளிய வா ... ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணியாச்சு ...
அண்ணா ... இவருக்கு ரொம்ப ரத்தம் போகுது ... இத தடுத்தாவனும் இல்லனா ! உயிர் போயிரும் ... என்று சொல்லிக்கொண்டு எதைப் பற்றியும் பொருள்படுத்தாமல் தான் தாவணியை கிழித்து கட்டு போட்ட அவளோ ...
அதேசமயம் மைத்ரேயி என்ற ஒரு குரல் மட்டும் கேட்க ...
அப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் ... ஒரு நிமிடம் திகைத்த மைத்ரேயோ ... தன் கையில் இருந்த பொம்மையும் தவற விட்டுவிட்டு ... அங்கிருந்து வெகு விரைவாக நகர்ந்து விட ...
அதே சமயம் அங்கே ஆம்புலன்ஸும் வந்தது ...
அம்மா ...
உனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது இல்ல .... பைத்தியமா டி பிடிச்சிருக்கு ... யாரு என்னன்னு கூட தெரியாது ... அவனுக்கு போய் ...
அம்மா அப்பா
என்ன சொல்லி இருக்காங்க ... உதவிங்கிறது தெரிஞ்சவங்களுக்கு மட்டும் செய்றது இல்லம்மா ... அது யாருக்கு நாளும் செய்யலாம் ... ஒரு மனிதாபிமானம் அடிப்படையில் ...
இத மட்டும் நல்லா பேசு படிப்பு சுத்தம் ஏறல ... சரி அத விட்டா நல்ல பாடுவேன்னு சொன்னாங்க அது சுத்தம் ... அப்புறம் டான்ஸ் எல்லாத்தையும் ஜீரோ ... உனக்கு என்னடி வரும் ... ஒரு மண்ணும் வராது ... உனக்கு தெரிஞ்சது மட்டும் செய் ... அது நல்லதா கெட்டதா என்று பார்க்காதே ... உன்னோட தம்பி தங்கச்சி இருக்காங்களே அவங்க எப்படி இருக்காங்கன்னு பார்த்தல்ல ... அம்மா பேச்சு கேட்டு ..
இந்த ஜென்மத்துல நீ எதுக்கும் லாக்கி கிடையாது ... உன்னல்லாம் என்ன பண்றதுன்னு கூட எனக்கு தெரியல ..
அம்மா ...
பேசாத ... மரியாதையா கார்ல ஏறு ...
சிறிது நேரத்தில் ...
அக்கா அம்மா பேச்சை கேளுங்க அக்கா ... அம்மா நம்ம நல்லதுக்காக தானே சொல்லுவாங்க ... இப்படி பண்ண எப்படி ??? ...
ஏண்டி இவ கிட்ட பேசுற ??? ...
இவ ஒன்னுத்துக்கும் லாக்கி கிடையாது ... வா லக்கி நம்ம போகலாம் ...
அண்ணா அக்கா ...
பாத்தியா ... இன்னும் கொஞ்ச நாள்ல உன்னை யாரும் மதிக்க மாட்டாங்க ...
நான் சொல்றதை கேளு ??? ...
அம்மா ஒரு உயிரை காப்பாத்துறது தப்பாம ... நான் போலனா அந்த உயிர் போயிருக்கும் ...
யாரு டி அவ இப்படி துடிக்கிற ...
இந்த வயதிலேயே உனக்கு ஆம்பள சுகம் கேக்குதா .. அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்கு ... அதுவரைக்கும் கொஞ்சம் அடங்கி இரு ... நானே உனக்கு எவன் தலையிலயாவது கட்டி வைக்கிற ...
உனக்கு ஒன்னே ஒன்னு பண்ணனும்னா ... அது தான் பண்ணனும் ... நீ எதுக்கும் லக்கி கிடையாது ... அவங்க சொன்னது தான் கரெக்ட் ... என்று சொல்லிவிட்டு சென்றுவிட ...
அம்மா .... நான் எதுக்கும் லக்கி கிடையாதா ... அப்பா நீங்க இருந்தா இவங்க இப்படி பேசுவாங்களா ??? ...
எதுக்கு அப்பா என்ன விட்டு போனீங்க ??? ... என்ன எதுக்கு இப்படி பண்றாங்க ??? ..
ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் ...
சென்னை எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்
மாநகரம் ..
அதில் ஒருவன் இயற்கை காட்சி ரசித்தபடி தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருக்க ....
அதேசமயம் மவுண்ட் ரோட்டில்
உள்ள TNGO காலணியில் இருக்கும் அடம்பாக்கத்தில் உள்ள மிகப்பெரிய வீட்டில் பக்தி பாடல்களை ஒலிக்க விட ..
This is real place ...
இதில் இருக்கும் இடங்கள் எல்லாம் உண்மை கதைக்காக வெறும் கற்பனையே ...
ஒரு சில வினாடிகளில் ...
ராவணா எப்படா கல்யாணம் பண்ணிக்க போற ??? .... ம்ம் ... என்று சொல்லிக் கொண்டே திருநீரை வைத்துவிட
அம்மா .... தேடிக்கிட்டு இருக்கேன் ... என்னோட சீதையை ...
ஆ .... என்னடா சொன்ன ??? ...
ஒன்னும் இல்லமா ... ஈவினிங் மீட் பண்ணலாம் ... என்று சொல்லிவிட்டு அதி வேகமாக
டி நகரில் இருக்கும் துணி கடைக்கு சென்று கொண்டே இருக்க ... அப்பொழுது ஒருத்தியின் குரல் மட்டும் அவன் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது ...
ஆனால் ! அவள் யார் என்று அறியவில்லையே ... இப்பொழுதும் ...
அவன் இந்த ஐந்து வருடத்தில் ... எட்டாத உயரம் இல்லை ... அவன் செய்யாத தொழிலும் இல்லை ...
அனைத்தும் இந்த சிறு வயதில் ...
அதேசமயம் ...
மதுரையில் உள்ள மாட்டுத்தாவணியில் உள்ள பெரிய வீட்டில் ... இடுப்பில் உள்ள சேலையை சொருவிக் கொண்டு .... ஒருத்தி பம்பரமாக சுழன்று கொண்டிருக்க ...
சிறிது நேரத்தில் ...
அம்மா நாங்க காலேஜ் போயிட்டு வரோம் ... பாய் மா பாய் ...
சரி கண்ணுங்களா நீங்க போயிட்டு வாங்க ...
அம்மா வேலை எல்லாம் செஞ்சுட்டேன் அடுத்து என்ன வேலை இருக்கு ...
நல்லா கேட்ட போ ... இதெல்லாம் யார் செய்வா ??? ...
மறந்துட்டேன்...
எல்லாத்தையும் நானே சொல்லிக் கொடுக்கணும் ... ஏழு கழுதை வயசாயிடுச்சு ... அடுத்த வீட்டுக்கு போகணுமே ... அந்த அறிவு கூட இல்ல ...
அம்மா செய்ற மா ... எதுக்கு என்னை திட்டுறீங்க ..
இத மட்டும் சொல்லு ..
இங்க பாருடி உனக்கு நான் ஒரு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கேன் ... நான் சொல்றதுக்கு மட்டும் தலையாட்டினா போதும் ...
தேவையில்லாம பேசி எனக்கு வம்பு இழுத்து வச்சுட்டு போயிடாத என்று சொல்லி விட்டு செல்ல ...
அதையெல்லாம் ஒரு வெற்று புன்னகையோடு அங்கிருந்து சென்ற விட ...
இப்போதெல்லாம் சில நேரங்களில் இவள் இப்படி தான் ... அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது ... ஒரு சில நேரங்களில் ஊமை ஆகி விடலாம் என்று ...
அவளின் சந்தோஷம் என்றால் ... அவளின் சிறு வயது தோழி மட்டுமே ... எப்பொழுதும் போல் தன்னை பார்ப்பது ... இன்றும் அப்படித்தான் ...
என்னடி எல்லா வேலையும் முடிச்சிட்டியா ...
இல்லடி கீதா .. என்னைக்கு வேலை முடிஞ்சுது சீக்கிரமா ...
அதுவும் சரிதான் ...
இப்போ எத்தனை மாசம் ...
அதுவா அஞ்சு மாசமாகுது ...
வயிறு பெருசாவே இல்லையே !!! ...
இனிதான் பெருசாகும் ...
உன்னோட காலேஜ் லைஃப் எல்லாம் எப்படி போகுது ...
உனக்கே தெரியும் இல்ல ....
ஒரு பக்கம் படிப்பு ஒரு பக்கம் குடும்பம் ... இப்படி இருக்கு ...
ஒரு வழிய ஸ்மூத்த கொண்டு போறேன் ... சரி நீ எப்ப கல்யாணம் பண்ணிக்க போற ...
அதுவா அம்மா இஷ்டம் ...
ம்ம் .. உன்னால ஒரு முடிவு கூட தனியா எடுக்க முடியல இல்ல ...
ஏண்டி இப்படி உனக்கு மட்டும் ...
இப்படி நடக்குது ...
என்ன பண்றது ??? ...
அது தெரிஞ்சும் ஏன் கேக்குற ??? ..
ஒன்னு சொல்லனும்னா ...
அவங்களுக்கு நான் எதுக்கும்
லாக்கி கிடையாது ...
எனக்கு தெரியும் ... நீ எப்படிப்பட்ட பொண்ணுன்னு ... ஆனா ! ஒரு நாள் இவங்களுக்கும் புரியும் ...
வேணாம் டி ... யாருக்கும் நான் புரிய வேண்டாம் ... அவங்களுக்கு நான் முட்டாளாக இருக்கேன் ... என்கிட்ட படிப்பு இல்லல்ல ...
லூசாடி உன்னோட பேமிலி ...
ஏய் ! அப்படி சொல்லாத ... அவங்க என்னைக்கு இருந்தாலும் என்னோட குடும்பம் .. அவங்க பேசுறதெல்லாம் நான் காதிலேயே வாங்கிறதில்ல ..
அவங்க என்ன பேசும் போது அவங்க சந்தோஷமா இருக்காங்க அது போதும் எனக்கு ...
எப்ப தியாகி ... உன்ன மாதிரி எல்லாம் யாரும் இருக்க முடியாது .. உன்ன கஷ்டப்படுத்தற அவங்கள ... கூட ஒரு வார்த்தை பேச மாட்டேங்கிற ... என்ன பொண்ணு டி நீ ...
தெரியல .. நான் நானா இருக்கேன் எனக்கு நடிக்க தெரியல ...
இந்த உலகம் ஃபுல்லா நடிச்சுக்கிட்டு இருக்காங்க ... என்னால அப்படி இருக்க முடியல ... அதுதானா செஞ்ச தப்பு ... நானும் நடிச்சிருந்தா அவங்க என்ன இப்படி பேசிருக்க மாட்டாங்க ..
எனக்கு நடிக்க வரலடி ..
கண்டிப்பா உனக்கு ஏத்தவாறு தாண்டி கிடைப்பார் ... நீ கல்யாணம் பண்ணிட்டு போற இடத்துல நல்லா இருக்கணும் ... அதுதான் என்னோட ஆசை ...
நாளை ...
ராவணா இதுக்கு மேல முடியாது நான் சொல்ற பொண்ணு கழுத்துல நீ தாலி கட்டணும் ...
நம்பின் ஆசை நிறைவேறுமா ??? ...
கலங்கமில்லாமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் இவள் இனி வாழ்க்கை எப்படி இருக்குமோ இவளுக்கு ??? ...
ராவணன் தூக்கி செல்ல வருவானா ??? ...
காத்திருங்கள் அடுத்த பதிவில் ??? ...
ராவணனின் அடிமை
இவளே மைத்ரேயி ...
தொடரும் ...
இந்த ஸ்டோரி இதுல கண்டினியூ பண்ணவா
"ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி", - பிரதிலிபியில் படிக்க :,
https://pratilipi.app.link/5oSc5Me5C1b #💝இதயத்தின் துடிப்பு நீ #Audio story #story #love #pratilipi stories
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
இதுலயும் படிக்கலாம் ...


