வீட்டுக்கு தூண் இல்லாம கூட இருக்கலாம்.. ஆனால் ஒரு பெண்ணுக்கு துணை இல்லாமல் இருக்க கூடாது..
ஆண்களுக்கு எப்படி என்று தெரியாது ஆனால் பெண்களுக்கு கண்டிப்பாக ஒரு #ஆண் துணை வேண்டும்...
நம் ஆதரவற்று இருக்கும்போது அண்ணன் தம்பி நான் இருக்கிறேன் என்று சொல்வார்கள் ஆனால் அவர்களின் மனைவியின் பிடியில் அண்ணன் தம்பி இருப்பார்கள் மனைவி என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவர்களும் கேட்பார்கள்.
எனக்கு வேலை எதுவும் இல்லை நியூஸ் பேப்பரில் வரும் வேலை வாய்ப்புகளை பார்த்து எழுதி போடுவேன்.. எனக்கு பதில் லெட்டர் வரும் போஸ்ட் மேன் தருவார்..
நான் நிறைய வேலைவாய்ப்புகளை பார்த்து எழுதி போட்டு இருந்ததால் எனக்கு அடிக்கடி லெட்டர் வரும்.. போஸ்ட் மேன் வந்து தருவார். இதை பார்த்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள்.
போஸ்ட்மனுக்கும் எனக்கும் தகாத உறவு இருக்கு என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்..
உள்ளூர்கார்கள் தானே என்று எதார்த்தமாக பேசினால் கூட இரவு எத்தனை மணிக்கு தூங்குவாய் என்று கேட்கிறார்கள்.
பாதையில் போறவர்கள் வாரவர்கள் எல்லாம் வீட்டில் கதவு திறந்து இருக்கா என்று பார்த்துக் கொண்டு போவார்கள்...
வயது வித்தியாசம் இல்லாமல்..
எல்லா இடங்களிலும் வேகமாக செல்லும் வண்டிகள் என் வீட்டு அருகில் வரும் போதும் மட்டும் மெதுவாக செல்லும். வேகத்தடையும்மில்லை..
மளிகை கடைக்கு போனா கூட நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கோங்க என்று சொல்வார்கள்...
அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று.
வெளியூர் போக வேண்டும் என்று பஸ்க்காக காத்திருந்தேன் நானும் அங்கதான் போறேன் உங்களை அந்த இடத்தில் இறக்கி விடுகிறேன் என்று ஆட்டோ அருகில் வந்து நிற்கிறது..
இன்னும் வெளியே சொல்ல முடியாது நிறைய இருக்கிறது அது அப்படியே இருக்கட்டும்...
எல்லா பெண்களுக்கும் நான் சொல்வது ஒன்று கண்டிப்பாக ஒரு துணையுடன் இருங்கள் அவர் கருப்போ சிகப்போ உயரமோ குட்டையோ பரவாயில்லை ஆனால் ஒரு ஆண் #துணை கண்டிப்பாக அவசியம்.....
#😔தனிமை வாழ்க்கை 😓


