மேம்பாலத்தில் உயிர் துடித்த நொடிகள்
கங்கையாற்றின் சீறிப்பாயும் நீரின் மேல் அமைந்த மேம்பாலத்தின் கைப்பிடிச் சுவரில் நின்றபடி, ஒரு பெண் தனது குழந்தையுடன் குதிக்கத் தயாராக இருந்துள்ளார். அந்த நொடிகளில் சிறிய தவறும் இருவரின் உயிரையும் பறித்திருக்கும்.
உடனடி நடவடிக்கையில் அதிகாரியின் துணிச்சல்
அந்த வழியாக பணிக்குச் சென்றுகொண்டிருந்த டயல் 112 அவசரப்பிரிவு உதவி ஆய்வாளர் சிக்கந்தர் குமார் இதைக் கவனித்ததும் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். அவர் மிகச் சாமர்த்தியமாக பேச்சு கொடுத்து அந்தப் பெண்ணின் கவனத்தைத் திசைதிருப்பினார்.
வெளிநாட்டில் வேலை பார்த்த கணவன்! மருமகளின் அறைக்கு வந்த மாமியார்! கட்டிலுக்கு அடியில் கண்ட பேரதிர்ச்சி! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
37 வினாடிகளில் உயிர்காக்கும் போராட்டம்
பெண் நிலைதடுமாறி குதிக்க முயன்ற தருணத்தில், மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று உயிர்காக்கும் நடவடிக்கை மேற்கொண்டு தாய் மற்றும் குழந்தையை பாதுகாப்பாக இழுத்தார். இந்தச் சம்பவம் வெறும் 37 வினாடிகளில் நடந்தது.
இந்த வீர காவல் அதிகாரியின் செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தப் பெண் ஏன் இப்படியொரு விபரீத முடிவை எடுத்தார் என்பது தெரியாத போதிலும், சரியான நேரத்தில் நடந்த இந்த மீட்பு சம்பவம் இரு உயிர்களுக்கும் புதிய வாழ்க்கையை அளித்துள்ளது. #📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠


