💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ்!
தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்கை மழையாகப் பொழிவாயாக!
நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையாக பொழிவாயாக!
பாவமன்னிப்புத் தேடுவோரின் மீது உனது மன்னிப்பை மழையாகப் பொழிவாயாக!
அநீதி இழைக்கப்படுவோரின் மீது உனது உதவியை மழையென பொழிவாயாக!
யா அல்லாஹ்!
நீ விலகியவைகளிலிருந்து நீ ஆகுமாக்கியதைக் கொண்டு எங்களுக்கு போதுமாக்குவயாக!
உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்திலிருந்தும் எங்களை தேவையற்றவர்களாக ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!
நாங்கள் கவலை துயரம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறோம்!
இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் ஆகியவற்றிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் !
கடனின் பெருக்கத்திலிருந்தும் மனிதர்களின் ஆதிக்கத்திலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறோம்!
💞யா அல்லாஹ்!
துன்பம் ஏற்படுத்தாத இன்பத்தை உன்னிடம் கேட்கின்றோம்!
பற்றாக்குறை ஏற்படுத்தாத தன்னிறைவை உன்னிடம் கேட்கிறோம்!
அச்சம் ஏற்படுத்தாத பாதுகாப்பை
உன்னிடம் கேட்கிறோம்!
கஷ்டம் ஏற்படுத்தாத மனமகிழ்ச்சியை உன்னிடம் கேட்கிறோம்!
வறுமையை ஏற்படுத்தாத செல்வத்தை உன்னிடம் கேட்கிறோம்!
யா ரஹ்மானே!
💞எங்கள் இறைவா!
பசி உள்ள இடத்தில் அன்பையும்!
தவறு உள்ள இடத்தில் மன்னிப்பையும்!
பிளவு உள்ள இடத்தில் ஒற்றுமையையும்!
பிழை உள்ள இடத்தின் திருத்தத்தையும்!
ஐயம் உள்ள இடத்தில் பற்றுதலையும்!
விரக்தி உள்ள இடத்தில் சாந்தியையும்!
இருள் உள்ள இடத்தில் ஒளியையும்!
வறுமை உள்ள இடத்தில் செல்வத்தையும்!
தீமைகள் உள்ள இடத்தில் நன்மைகளையும்!
நோய் உள்ள இடத்தில் ஆரோக்கியத்தையும்!
நீ எங்கள்அனைவருக்கும் பரிபூரணமாக வழங்கி அருள் புரிவாயக!
யா ரஹ்மான்!
💞யா அல்லாஹ்!
வானங்கள், பூமியுடைய கருவூலங்கள் உன்னிடமே இருப்பதாக சொன்ன என் ரப்பே! அல்லாஹ்வே!
உன்னுடைய கல்விஞானத்தின் கருவூலத்தை
உன்னுடைய நேர்வழிக்கான கருவூலத்தை!
உன்னுடைய அருட்கொடைகளின் கருவூலத்தை !
உன்னுடைய நல்வாய்ப்புகளின்
கருவூலத்தை!
உன்னுடைய ஆரோக்கியத்திற்கான கருவூலத்தை!
எங்களுக்குத் திறந்து விடுவாயாக!
யா ரஹ்மானே!
நீ மாபெரும் கொடையான்!
ஆமீன்
#📗குர்ஆன் பொன்மொழிகள்


