💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ்
யா அவ்வலில் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வத்தில் மத்தின்
யா ராஹிமல் மஸாக்கீன
யா அர்ஹமர்ராஹிமீன்..!
யா பத்தாஹ் ...!!
வெற்றி அளிப்பவனே
உன்னை அடைவதில் எங்களுக்கு வெற்றியை தருவாயாக..!!
யா ரஹ்மானே..!!
நீ மன்னிக்கக் கூடியவன் மன்னிப்பை விரும்பக் கூடியவன் எங்கள் அனைவருடைய பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்...!
நற்செயல்கள் நல்ல அமல்கள் செய்யக்கூடிய பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!!
எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் துஆக்களை கபூல் செய்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!
உனது பொருத்தம் பெறக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!!
யா அல்லாஹ்...!!
மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் என்ற தடாகத்தில் தண்ணீரை எம்பெருமானார் கண்மணி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் தந்து ,,அருந்தக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!!
யா அல்லாஹ்...!!
எங்கள் அஃமால் நாமா என்னும் பட்டோலையை எங்கள் வலது கரத்தில் தந்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!!
எங்களை ஜஹன்னம் என்ற கொடிய நரகத்தில் இருந்து தூரமாக்கி வைத்தருள் ரஹ்மானே..!!
யா அல்லாஹ்...!
எங்களை ஜன்னத்துல் ஃபிர்தோஸ் என்ற சொர்க்கத்தில் நுழைய செய்தருள் யா ஹைய்யூ யா கைய்யூமே...!!
யா அல்லாஹ்..!
நாங்கள் ரய்யான் என்ற சிறப்பு நுழைவுவாயிலாக சொர்க்கம் செல்ல துணை செய் யா ரஹீமே...!!
யா அல்லாஹ்...!
எங்களுக்கு தவ்பா கேட்க தெரியவில்லை ரஹ்மானே !
உன்னிடம் கை ஏந்தி நிற்கிறோம் ரஹ்மானே!
யா அல்லாஹ்...!!
எங்களை பொருந்திக் கொள் ரஹ்மானே!
உன்னிடம் மிஸ்கினாக பிச்சை கேட்கிறோம் ரஹ்மானே !
யா அல்லாஹ்..!
எங்கள் பாவங்களின் காரணமாக எங்களை நரகத்தில் தள்ளிவிடாதே ரஹ்மானே !
யா அல்லாஹ்...!
உனது கோபத்தை முந்திக் கொண்ட ரஹ்மத்தின் பொருட்டால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு ரஹ்மானே...!
யா அல்லாஹ்...!!
உன்னிடம் அழுது கேட்கிறோம் ரஹ்மானே எங்களுடைய பாவங்களை மன்னித்து விடு யா ஜப்பாரே !
யா அல்லாஹ்...!!
நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து பாவத்தையும் மன்னித்தருள்,,
யா அர்ஹமர்ராஹிமீன்
யா ரஹ்மானே...!!
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் #🕌இஸ்லாம்
💞மழை வேண்டி துஆ!
اللَّهُمَّ أَغِثْنَا
اللَّهُمَّ أَغِثْنَا
اللَّهُمَّ أَغِثْنَا
அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா!
அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா!
அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா!
யா அல்லாஹ் மழை பொழிய செய்வாயாக!
யா அல்லாஹ் மழை பொழிய செய்வாயாக!
யா அல்லாஹ் மழை பொழிய செய்வாயாக!
ஆதாரம்,: ஸஹீஹுல் புகாரி 1014 #🕋யா அல்லாஹ்
💞 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சிய துஆ!
அல்லாஹ்வே!
புகழெல்லாம் உனக்கே உரித்தானது!
நீ விரித்ததை மடக்குபவர் யாருமில்லை!
நீ மடக்கியதை விரிப்பவர் யாருமில்லை!
நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்ட யாருமில்லை!
நீ நேர்வழி காட்டியவரை வழி கெடுப்பவர் யாருமில்லை!
நீ தடுத்ததை கொடுப்பவர் யாருமில்லை!
நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை!
நீ தூரமாக்கியதை நெருக்கமாக்கி வைப்பவர் யாருமில்லை!
நீ நெருக்கமாக்கியதை தூரமாக்குபவர் யாருமில்லை!
அல்லாஹ்வே!
உனது வளங்களை!
உனது கருணையை!
உனது அருட்கொடையை!
உனது ரிஜ்குகளை எங்களுக்கு விசாலாமாக்கி அருள் புரிவாயாக!
அல்லாஹ்வே!
நீங்காத, விலகிவிடாத , நிரந்தரமான அருட்கொடைகளை எங்களுக்கு வழங்குவாயாக!
அல்லாஹ்வே!
நெருக்கடியான நேரத்தில் உனது நல்லுதவியையும்!
அச்சப்படும் நேரத்தில் உனது பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன்!
அல்லாஹ்வே!
நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும்!
நீ கொடுக்காமல் தடுத்துக் கொண்டவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்!
அல்லாஹ்வே!
ஈமானை எங்களுக்கு பிரியாமானதாக ஆக்குவாயாக!
அந்த ஈமானை எங்கள் உள்ளங்களில் அழகாக ஆக்குவாயாக!
இறை நிராகரிப்பை, உன்கட்டளைக்கு மாறு செய்வதை, உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருப்பதை எங்களுக்கு வெறுப்பாக்கிவைப்பாயாக!
எங்களை நேர்வழி பெற்றவர்களில் ஆக்கி விடுவாயாக!
அல்லாஹ்வே!
எங்களை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக!
முஸ்லிமாகவே வாழ வைப்பாயாக!
நஷ்டமடையாதவர்களாக, சோதனைகளுக்கு ஆளாகதவர்களாக, எங்களை நல்லோர்களுடன் சேர்த்துவைப்பாயாக!
உண்மையான இரட்சகனே!
ஆமீன்!
ஆமீன்!
ஆமீன்!
(அஹ்மத்) #🕋யா அல்லாஹ்
💞 நபிமொழி!
ஒரு அடியான் ஸஜ்தாவில் இருக்கும் போது அவனுடைய இறைவனுக்கு மிக அருகில் இருப்பான். எனவே ஸஜ்தாச் செய்யும் போது பிரார்த்தனைகளை அதிகப்படுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். [முஸ்லிம் #🕋யா அல்லாஹ்
💞 அல்ஹம்துலில்லாஹ்!
தான் விரும்பக் கூடிய குழந்தையை ஒரு தந்தை எப்பொழுதும் கைவிடுவதில்லை!
தான் விரும்பக்கூடிய குழந்தையை ஒரு தாய் எப்பொழுதும் கைவிடுவதில்லை!
தான் விரும்பக் கூடிய மாணவனை ஒரு ஆசிரியர் எப்பொழுதும் கைவிடுவதில்லை!
மனிதர்களின் நேசத்தை விட இறைவனின் நேசம் மேலானது!
இறைவனின் நேசத்தை பெற்றவர்கள் பாக்கியவான்கள்!
அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால்!
அல்லாஹ் ஒரு அடிமையை விரும்பினால்!
அல்லாஹ் அவன் படைத்த படைப்புகளில் ஒரு மனிதனை அல்லாஹ் நேசித்தால்!
எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் அல்லாஹ் அந்த அடியானை
கை விடமாட்டான்!
எல்லையில்லாத அன்பு, அழியாத அன்பு, நிலையான அன்பு, அல்லாஹ்வின் பேரன்பு மட்டுமே! #🕋யா அல்லாஹ்
💞 அழகிய நினைவூட்டல்!
மனிதர்களின் நேசத்தை விட இறைவனின் நேசம் மேலானது!
இறைவனின் நேசத்தை பெற்றவர்கள் பாக்கியசாலிகள்!
யா அல்லாஹ்!
நீ நேசிக்க கூடிய மனிதர்களாக
எங்களையும் ஆக்கி அருள் புரிவாயாக யா ரஹ்மானே!
அல்லாஹ்வின் அன்பை பெற ஓத வேண்டிய அழகிய துஆ
اللَّهُمَّ إنِّي أسْألُكَ حُبَّكَ ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ ، وَالعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ ، اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أحَبَّ إلَيَّ مِنْ نَفْسِي ، وأهْلِي ، وَمِنَ الماءِ البارِدِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஹுப்பக வஹுப்ப மன் யுஹிப்புக வல் அமலல்லதீ யுபல்லிஙீனீ ஹுப்பக அல்லாஹும்மஜ்அல் ஹுப்பக அஹப்ப இலய்ய மின் நஃப்ஸீ, வஅஹ்லீ, வமினல் மாயில் பாரிதீ
யா அல்லாஹ்!
உன்னுடைய அன்பையும்,
உன்னை நேசிப்பவர்களின் அன்பையும் , உன் அன்பின் பக்கம் என்னைச் சேர்ப்பிக்கும் செயலையும் , நான் உன்னிடம் கேட்கிறேன்!
யா அல்லாஹ்!
உன் அன்பை என் உயிரை விட
என் குடும்பத்தாரை விட ,
குளிர்ந்த நீரை விட எனக்கு பிரியமானதாக ஆக்கி வைப்பாயாக!
(நூல் : ரியாளுஸ் ஸாலிஹீன் : 1490) #🕋யா அல்லாஹ்
💞 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ருடைய சுன்னத் தொழுகைக்குப் பின் கேட்ட துஆ!!
யா அல்லாஹ்!
உனது பேரருளை ரஹ்மத்தைக் கேட்கிறேன்!
அதன் மூலம் எனது உள்ளம் நல்வழி பெறவேண்டும்!
அந்த கருணையினால் சிதறுண்ட என் காரியங்கள் ஒன்று சேரவேண்டும்!
கேடடைந்த என் விஷயங்கள் ஒழுங்கு படுத்தப்படவேண்டும்!
வழிகேடு தடுக்கப்பட வேண்டும்
எனது தீன் மார்க்கம் செம்மையுற வேண்டும்!
எனது கடன்கள் நிறைவேற வேண்டும்!
எனது கண்முன் இல்லாத என் குடும்பம் ,பொருட்கள் பாதுகாப்பு பெறவேண்டும்!
என் முன்னால் இருப்பவைகள் உயர்வு பெறவேண்டும்!
எனது முகம் பிரகாசத்தால் வெண்மையாக வேண்டும்!
அந்த ரஹ்மத்தால் எனது அமல்கள் தூய்மையடைய வேண்டும்!
அதன் மூலம் எனது உள்ளத்தில் நேர்வழி உதிக்கவேண்டும்!
நான் விரும்பியவைகள் எனக்கு திரும்ப கிடைக்கவேண்டும்!
அந்த அளவற்ற உனது கருணையினால் அனைத்து தீயவைகளிலிருந்தும் நான் பாதுகாப்பு பெறவேண்டும்!
யா அல்லாஹ்!
உண்மையான ஈமானையும்,
குப்ரின் பால் திரும்பாத நம்பிக்கையையும், கொடுப்பாயாக!
இம்மையிலும்,மறுமையிலும் உன்னுடைய கண்ணியமான சிறப்பை அடையச்செய்யும் ரஹ்மத்தையும் எனக்குஅளிப்பாயாக!
உனது தீர்ப்புகளில் வெற்றியயையும்!
ஷஹீதீன்கள் பெறும் விருந்தோம்பலையும்!
நல்வாய்ப்பைப் பெற்றவர்களின் நல்வாழ்க்கையையும்!
நபிமார்களின் நல்நேசத்தையும்!
விரோதிகளுக்கெதிராக உதவியையும் உன்னிடம வேண்டுகிறேன்!
யா அல்லாஹ்!
எனது தேவைகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன!
என்னுடைய சிந்தனை குறைவுடையதாக இருக்கிறது!
எனது அமல்கள் பலவீனமாக இருக்கிறது!
உனது கருணையின் பால் நான் தேவையுடையவனாக இருக்கிறேன்!
காரியங்களை நிறைவேற்றுபவனே!
நெஞ்சங்களுக்கு நலமளிப்பவனே!
நீ கடல்களுக்கு இடையே தடுப்புகள் அமைத்ததுபோல்
எனக்கும் நரகவேதனைகளுக்குமிடையே !
எனக்கும் கப்ரின் குழப்பங்களுக்கிடையே!
எனக்கும் அழிவால் ஓலமிடுவதற்குமிடையே தடுப்பை ஏற்படுத்துவாயாக #🕋யா அல்லாஹ்













