❤️அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அதிக நன்மைகள் பெற்றுத் தரக்கூடிய சிறந்த 10 திக்ருகள்!
❤️1) சுப்ஹானல்லாஹ்
பொருள்: அல்லாஹ் தூயவன்!
சிறப்பு: ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன!
நூல் : முஸ்லிம் 5230
❤️ 2) அல்ஹம்துலில்லாஹ்
பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
சிறப்பு: (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.
நூல் : - முஸ்லிம் 381
❤️ 3) அல்லாஹு அக்பர்
பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்!
சிறப்பு: ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்!
நூல் : முஸ்லிம் 1302
❤️4) சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி
பொருள்: அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது.
நூல்: - முஸ்லிம் 381
சிறப்பு: வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டதாகும்!
❤️5) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி
பொருள்: அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்!
சிறப்பு: கடலின் நுரை அளவிற்கு (அதிகமாக) பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் மன்னிக்கப்படும்.
நூல்: - புஹாரி 6405
❤️6) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்
பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்!
சிறப்பு: நன்மை தீமை நிறுக்கப்படும் மீஸான் என்னும் தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை.
நூல்: - புஹாரி 7563
❤️7) அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா
பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.
சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன!
நூல்: - முஸ்லிம் 1052
❤️8) அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி
பொருள்: (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது)
சிறப்பு: 12 வானவர்கள் இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்ல போட்டி போடும் அளவிற்கு நன்மை அதிகம்
நூல் : முஸ்லிம் 1051
❤️9) லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (100 முறை)
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்.
சிறப்பு: 10 அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.
மேலும், 100 நன்மைகள் எழுதப்படும். 100 தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் இருக்கும்.
நூல்: - புஹாரி 3293
❤️10) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி ( 3 முறை)
பொருள்:(அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)
நூல்: முஸ்லிம் : 5272.
நூல்:முஸ்லிம் : 1051
இந்தப் பத்து திக்ருகளை நாம் அதிகமாக ஓதி அல்லாஹ்விடம் அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்!
இன் ஷா அல்லாஹ்! #🕋யா அல்லாஹ்
💞சிறப்பான இந்த ரமளான் நோன்பு
நாட்களில் கேட்க வேண்டிய அழகிய நீண்ட துஆ!
யா ரஹ்மானே!
எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக!
யா ரஹ்மானே!
எங்களது கணவன், மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரிகள், உற்றார் உறவினர்கள், உலக முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக!
யா ரஹ்மானே!
எங்களது உறவுகளை கொண்டோ, செல்வத்தை கொண்டோ, எங்களை சோதித்து விடாதே!
யா ரஹ்மானே!
பொய், புறம், கோபம், பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
யா ரஹ்மானே!
எங்களது சொல்லாலோ, செயலாலோ, பிறருக்கு கஷ்டம் கொடுத்திருந்தால்
அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக!
யா ரஹ்மானே!
நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ,அறிந்தோ,அறியாமலோ , வேண்டுமென்றோ,திட்டமிட்டோ,
மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ,பகிரங்கமாகவோ,
சிறிதோ,பெரிதோ,எப்பேற்பட்ட
பாவங்களை செய்திருந்தாலும்
உனது கருணை பார்வையால்
மன்னித்து,மேலும் பாவங்கள்
செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை
பாதுகாப்பாயாக!
யா ரஹ்மானே!
ரமளான் உடைய அருட்கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்கு நிறைவாக தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக!
யா ரஹ்மானே!
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக! மேலும் ஹலாலான ரிஸ்கை தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
எங்களது உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் ஹலாலானதகா தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
எங்களுக்கும், எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக!
யா ரஹ்மானே!
நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை நீயே பாதுகாப்பாயாக!
யா ரஹ்மானே!
எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும், வேதனையிலிருந்தும், விபத்துகளிலிருந்தும், விஷஜந்துக்களிலிருந்தும்,
அபாயங்களிலிருந்தும்,
இயற்கை சீரழிவிளிருந்தும்,
ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்டஊசலாட்டங்களிலிருந்தும்,
வறுமையிலிருந்தும்,
கடனிலிருந்தும்,
பலாய்முஸீபத்துகளிலிருந்தும்,
எதிர்பாராதமரணத்திலிருந்தும்,
கண் திருஷ்டியிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக!
யா ரஹ்மானே!
எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக!
யா ரஹ்மானே!
முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!
யா ரஹ்மானே!
பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழச்செய்வாயாக!
யா ரஹ்மானே!
இஸ்லாமிய சட்டத்தின்படி முழுமையான வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!
யா ரஹ்மானே!
முழுமையான பர்தா முறையில் பெண்களை வாழச்செய்வாயாக!
யா ரஹ்மானே!
இறையச்சத்தை பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
உள்ளங்களை புரட்டக் கூடியவனே எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக, கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து எங்களை தனிமைப்படுத்தி விடாதே!
யா ரஹ்மானே!
மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும், மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து எங்களது எதிரிகளை தோற்கடிப்பாயாக!
யா ரஹ்மானே!
எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக, உனக்கு பிரியமானவர்களாக மாற்றுவாயாக!
யா ரஹ்மானே!
உன்னுடைய பிரியத்தை எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!
யா ரஹ்மானே!
தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
யா ரஹ்மானே!
மரண வேதனையிலிருந்தும், கப்ரின் அதாபிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக!
யா ரஹ்மானே!
முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!
யா ரஹ்மானே!
கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
யா ரஹ்மானே!
கியாமத் நாளின் இழிவுகளை விட்டு மூமீனான ஆண், பெண் அனைவரையும் பாதுகாப்பாயாக!
யா ரஹ்மானே!
கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!
யா ரஹ்மானே!
கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
மறுமையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக!
யா ரஹ்மானே!
எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!
யா ரஹ்மானே!
ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!
யா ரஹ்மானே!
மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக!
யா ரஹ்மானே!
மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!
யா ரஹ்மானே!
உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக!
யா ரஹ்மானே!
உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர , சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத் வழங்குவாயாக!
யா ரஹ்மானே!
யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக!
யா ரஹ்மானே!
உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக!
ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் #🕋யா அல்லாஹ்
🌙 இன்று இரவு இந்த துஆவை ஓதுங்கள்! 🤲✨
அல்ஹம்துலில்லாஹில்லதி அத்அமனா வஸகானா வஜஅலனா முஸ்லிமீன்.
(الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ)
பொருள்:
"எங்களுக்கு உணவளித்து, நீர் புகட்டி, எங்களை முஸ்லிம்களாக (கீழ்ப்படிந்தவர்களாக) ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்." 🍎💧🌙
இந்த துஆவின் மகத்துவம் என்ன? (The Power of This Dua)
நம்மில் பலர் இரவு உணவை முடித்திருப்போம் அல்லது சாப்பிடத் தயாராக இருப்போம். நம் தட்டில் இருக்கும் ஒவ்வொரு பருக்கையிலும் நம் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும்போது, அல்லாஹ் நமக்கு கண்ணியமான உணவை வழங்கியிருக்கிறான்.
1. உணவின் மதிப்பு (The Value of Food): 🍎
"அத்அமனா" (நமக்கு உணவளித்தான்) - இந்த ஒரு வார்த்தையில் எவ்வளவு பெரிய நிம்மதி இருக்கிறது? பசியால் வாடும் வயிறுக்குத் தெரியும் உணவின் அருமை. அந்த பசியை போக்கிய இறைவனுக்கு நாம் சொல்லும் முதல் நன்றிக் கடன் தான் இந்த துஆ.
2. தாகத்தைத் தீர்க்கும் தண்ணீர் (The Blessing of Water): 💧
"வஸகானா" (நமக்கு நீர் புகட்டினான்) - உணவு இல்லாமல் கூட சில நாட்கள் இருந்துவிடலாம், ஆனால் நீர் இன்றி உயிர் வாழ முடியாது. சுத்தமான குடிநீர் கிடைப்பதே இந்த காலத்தில் ஒரு பெரும் பாக்கியம். அந்த தாகத்தைத் தீர்த்து, நம் உடலுக்கு புத்துயிர் அளித்த அந்த ரஹ்மானுக்கு நாம் செய்யும் கைமாறு புகழாரம் மட்டுமே.
3. ஆகச்சிறந்த பாக்கியம்: ஈமான் (The Gift of Faith): 🌙
இந்த துஆவின் மிக முக்கியமான பகுதி "வஜஅலனா முஸ்லிமீன்" (எங்களை முஸ்லிம்களாக ஆக்கினான்). உணவு, நீர் இவை அனைத்தையும் விட மேலானது 'ஈமான்' எனும் நம்பிக்கை. ஒரு மனிதனுக்கு உலகமே கிடைத்து, ஈமான் இல்லை என்றால் அவன் ஏழை. ஆனால், ஒன்றும் இல்லாமல் ஈமான் மட்டும் இருந்தால் அவன் தான் உலகிலேயே செல்வந்தன். நம்மை ஒரு முஸ்லிமாகப் பிறக்கச் செய்து, நேர்வழியில் நடக்க வைத்தது அல்லாஹ் நமக்குத் தந்த மிகப்பெரிய பொக்கிஷம்.
ஏன் நாம் இதை ஒவ்வொரு இரவும் சொல்ல வேண்டும்?
நிறைய பேர் சாப்பிட்டு முடித்ததும் கை கழுவிவிட்டு அப்படியே எழுந்து விடுவோம். ஆனால், இந்த சின்னஞ்சிறு துஆவை ஓதுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்:
நன்றி உணர்வு (Gratitude): நாம் சாப்பிடும் உணவு ஹலாலான முறையில் கிடைக்கவும், அது நம் உடலில் நற்செயல்களாக மாறவும் இது உதவுகிறது.
இறைவனின் திருப்தி: தன் அடியான் சாப்பிட்டுவிட்டு தன்னை புகழும்போது இறைவன் மகிழ்ச்சி அடைகிறான்.
பணிவு (Humility): "நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தேன்" என்ற அகந்தையை நீக்கி, "எல்லாம் அவனுடையது" என்ற பணிவை இது தருகிறது.
#islam #prayer #allah #reels #dua #Quran #🕋யா அல்லாஹ்













