💞 குடும்பத்திற்கான அழகிய துஆ!
யா அல்லாஹ்!
நீ எங்களுக்கு அளித்த சிறந்த அருட்கொடைகளில் எங்கள் குடும்பமும் ஒன்று!
அதற்காக உன்னைப் புகழ்கிறோம் நன்றி செலுத்துகிறோம்!
யா அல்லாஹ்!
எங்கள் குடும்பத்தினரை உன்னிடத்தில் ஒப்படைக்கின்றோம்!
அவர்களை கொடிய நோய்கள் அணுகாமல் காப்பாயாக!
நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளைத் தருவாயாக!
கெடுதி நினைப்போர்களின் கெடுதியில் இருந்தும், பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும் அவர்களைக் காப்பாயாக!
எங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பையும் பாசத்தையும் உருவாக்குவாயாக!
நேர்வழியில் நடத்தாட்டுவாயாக!
நேர்வழியில் நடப்பவர்களுடன் இணந்திருக்கச் செய்வாயாக!
அவர்கள் உன்னை தொழுபவர்களாக திக்ரு செய்பவர்களாக என்றென்றும் உன் வழியில் நடப்பவர்களாக ஆக்குவாயாக!
எதிர் பாராத விபத்திலிருந்தும் துர் மரணத்திலிருந்தும் அவர்களைக் காப்பாயாக!
இம்மை மறுமைக்கான கல்வியறிவு பெற்றவர்களாக கற்றலின் படி செயல்படுபவர்களாக அவர்களை உருவாக்குவாயாக!
அவர்களுடைய தேவையை நிறைவேற்றுவாயாக!!
பசி, பட்டினி, துக்கம், கவலை, வறுமை பற்றாக்குறை போன்றவைகளிலிருந்து அவர்களைப் பாது காப்பாயாக!
குடும்பத்தினர் அனைவரும் இம்மை மறுமைக்கான அனைத்து நலனும் பெற்று வாழ தவ்ஃபீக் செய்வாயாக!
யா அல்லாஹ்!
உன்னையல்லால் யாரிடமும் எதற்காகவும் கையேந்தாத நிலையை அவர்களுக்கு உருவாக்குவாயாக!
எங்களை சொர்க்கத்தில் ஒன்றிணைப்பாயாக!
எங்கள் இரட்சகனே!
எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
ஆமீன்!
ஆமீன்!
ஆமீன்! #🕋யா அல்லாஹ்
💞 அழகிய நினைவூட்டல்!
தஹஜ்ஜத்!
ஃபர்ளு தொழுகைக்கும், தஹஜ்ஜத் தொழுகைக்கும் உள்ள வேறுபாடு!
1.ஃபர்ளு தொழுகைக்காக மனிதர்கள் அழைப்பு(பாங்கு) விடுக்கிறார்கள்!
ஆனால் தஹஜ்ஜத் தொழுகைக்காக அல்லாஹ்வே அழைப்பு விடுக்கிறான்!
2. ஃபர்ளு தொழுகையின் அழைப்பை எல்லோரும் கேட்கிறார்கள்!
ஆனால் தஹஜ்ஜத் தொழுகையில் அல்லாஹ்வின் அழைப்பை நற்பாக்கியவான்கள் மட்டுமே கேட்கிறார்கள்!
3.ஃபர்ளு தொழுகையை அதிகமானோர் நிறைவேற்றுகிறார்கள்!
ஆனால் தஹஜ்ஜத் தொழுகையை அல்லாஹ்வின் பிரத்தியோக அடியார்கள் மட்டுமே நிறைவேற்றுகிறார்கள்!
4.தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்!
_*حي علي الصلاة*_
என்று ஃபர்ளு தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஆனால் தஹஜ்ஜத் தொழுகை
தொழக்கூடியவர்களுக்கு
அல்லாஹ் கூறுகிறான்!
என்னிடத்தில் யாரேனும் கேட்பவர்கள்
இருக்கிறார்களா அவருக்கு நான் கொடுக்கின்றேன் என்று அல்லாஹ் அழைப்பு விடுக்கிறான்.
ஆகையால் வரும் நாட்களில் உயிர் உள்ளவரை இன் ஷா அல்லாஹ் தஹஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றுவோம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோம்!
இறை பொருத்ததை பெறுவோம்!
ஒரு மனிதனின் முதல் வெற்றியே அதிகாலை நேர இபாதத் ஆகும்!
யா அல்லாஹ்!
எங்கள் வாழ்நாளில் இறுதி நாள் வரை தஹஜ்ஜத் தொழக்கூடிய பாக்கியத்தை
எங்களுக்கு தந்தருள்வாயாக
யா ரஹ்மானே!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்! #🕌இஸ்லாம்
💞 அழகிய நினைவூட்டல்!
துஆ!
தன்னிடம் கேட்கும் அடியானை அல்லாஹ் நேசிக்கிறான்!
துஆ!
தன்னிடம் கேட்கும் அடியானை வெறும் கையுடன் அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான்!
துஆ!
துஆவை விட சிறந்த அமல் அல்லாஹ்விடத்தில் வேறு எதுவும் இல்லை!
துஆ!
விதியையும் மாற்றும் தகுதி துஆவிற்கு உள்ளது!
துஆ!
எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள் எதை எதிர்பார்த்தாலும் அல்லாஹ்விடமே எதிர்பாருங்கள்!
துஆ!
ஆயிரம் பேரிடம் உதவி கேட்டாலும் உதவி செய்வப்போவது அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்! #🕋யா அல்லாஹ்
💞 நபிமொழி!
வளமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை பாத்திமா (ரலி)அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அழகிய துஆ!
يا أول الأولين ويا آخر الآخرين
ويا ذا القوَّةِ المَتين
ويا راحِم المساكين و يا أرحَم الرَّاحِمين #🕌இஸ்லாம்
💞அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது
ஒருவர் அல்லாஹ்விடம் மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
திர்மிதீ 2572
யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக!
!யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக!
யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக!
யா அல்லாஹ் நரகத்தை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ் நரகத்தை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ் நரகத்தை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
ஆமீன்!
ஆமீன்!
ஆமீன் யாரப்பல் ஆலமீன்! #📗குர்ஆன் பொன்மொழிகள்
💞நபிமொழி!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய கரத்தை பிடித்து கூறினார்கள் முஆதே!
அல்லாஹ்வின் மீது ஆணையாக!
நிச்சயமாக நான் உம்மை நேசிக்கிறேன்!
முஆதே! உமக்கு நான் ஒரு உபதேசம் செய்கிறேன்! ஒவ்வொரு தொழுகைக்கு பின்னூம்!
அல்லாஹூம்மா அஇன்னி அலா திக்ரி(க்)க வஷு(க்)ரிக்க வஹுஸ்னி
இபாத(த்)திக!
யா அல்லாஹ்
உன்னை நினைவு கூறுவதற்கும்!
உனக்கு நன்றி செலுத்துவதற்கும்!
உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக!
எனக் கூறுவதை நீர் விட்டு விடாதீர்!
அறிவிப்பாளர்: முஆத் ரளியல்லாஹு அன்ஹு அபூதாவூத் 1522 ஸஹுஹ் #🕌இஸ்லாம்
💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து
வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
❤️ யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வத்தில் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமீன்...
❤️ரப்பனா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார் .
யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் வேதனையை விட்டுப் பாதுகாப்பாயாக.
❤️வகினா அதாபல் கப்ர்
மண்ணறையின் வேதனையைவிட்டுக் காத்தருள்வாயாக!
❤️வகினா அதாபல் ஹஷ்ர்
இறுதிநாளின் வேதனையைவிட்டுக் காத்தருள்வாயாக!
❤️வகினா அதாபல் fபக்ர்
வறுமையின் தண்டனையைவிட்டுக் காத்தருள்வாயாக!
❤️வகினா அதாபல் கர்ள்
கடன் தொல்லையை விட்டுக் காத்தருள்வாயாக!
❤️வகினா அதாபல் மர்ள்
நோய்களின் தண்டனையைவிட்டுக் காத்தருள்வாயாக!
❤️வகினா அதாபல் ஆfபாத்
பேராபத்துகளின் தண்டனையைவிட்டுக் காத்தருள்வாயாக!
❤️வகினா அதாபல் சக்ராத்
மரண அவஸ்தையைவிட்டுக் காத்தருள்வாயாக!
❤️வகினா அதாபல் fபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்
தஜ்ஜாலின் வழிகேட்டிலிருந்து காத்தருள்வாயாக!
எங்கள் இறைவா!
நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.
யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக.
யா ரஹ்மானே! #🕋யா அல்லாஹ்
💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ்
யா அவ்வலில் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வத்தில் மத்தின்
யா ராஹிமல் மஸாக்கீன
யா அர்ஹமர்ராஹிமீன்..!
யா பத்தாஹ் ...!!
வெற்றி அளிப்பவனே
உன்னை அடைவதில் எங்களுக்கு வெற்றியை தருவாயாக..!!
யா ரஹ்மானே..!!
நீ மன்னிக்கக் கூடியவன் மன்னிப்பை விரும்பக் கூடியவன் எங்கள் அனைவருடைய பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்...!
நற்செயல்கள் நல்ல அமல்கள் செய்யக்கூடிய பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!!
எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் துஆக்களை கபூல் செய்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!
உனது பொருத்தம் பெறக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!!
யா அல்லாஹ்...!!
மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் என்ற தடாகத்தில் தண்ணீரை எம்பெருமானார் கண்மணி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் தந்து ,,அருந்தக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!!
யா அல்லாஹ்...!!
எங்கள் அஃமால் நாமா என்னும் பட்டோலையை எங்கள் வலது கரத்தில் தந்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!!
எங்களை ஜஹன்னம் என்ற கொடிய நரகத்தில் இருந்து தூரமாக்கி வைத்தருள் ரஹ்மானே..!!
யா அல்லாஹ்...!
எங்களை ஜன்னத்துல் ஃபிர்தோஸ் என்ற சொர்க்கத்தில் நுழைய செய்தருள் யா ஹைய்யூ யா கைய்யூமே...!!
யா அல்லாஹ்..!
நாங்கள் ரய்யான் என்ற சிறப்பு நுழைவுவாயிலாக சொர்க்கம் செல்ல துணை செய் யா ரஹீமே...!!
யா அல்லாஹ்...!
எங்களுக்கு தவ்பா கேட்க தெரியவில்லை ரஹ்மானே !
உன்னிடம் கை ஏந்தி நிற்கிறோம் ரஹ்மானே!
யா அல்லாஹ்...!!
எங்களை பொருந்திக் கொள் ரஹ்மானே!
உன்னிடம் மிஸ்கினாக பிச்சை கேட்கிறோம் ரஹ்மானே !
யா அல்லாஹ்..!
எங்கள் பாவங்களின் காரணமாக எங்களை நரகத்தில் தள்ளிவிடாதே ரஹ்மானே !
யா அல்லாஹ்...!
உனது கோபத்தை முந்திக் கொண்ட ரஹ்மத்தின் பொருட்டால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு ரஹ்மானே...!
யா அல்லாஹ்...!!
உன்னிடம் அழுது கேட்கிறோம் ரஹ்மானே எங்களுடைய பாவங்களை மன்னித்து விடு யா ஜப்பாரே !
யா அல்லாஹ்...!!
நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து பாவத்தையும் மன்னித்தருள்,,
யா அர்ஹமர்ராஹிமீன்
யா ரஹ்மானே...!!
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் #🕌இஸ்லாம்













