💞 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சிய துஆ!
அல்லாஹ்வே!
புகழெல்லாம் உனக்கே உரித்தானது!
நீ விரித்ததை மடக்குபவர் யாருமில்லை!
நீ மடக்கியதை விரிப்பவர் யாருமில்லை!
நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்ட யாருமில்லை!
நீ நேர்வழி காட்டியவரை வழி கெடுப்பவர் யாருமில்லை!
நீ தடுத்ததை கொடுப்பவர் யாருமில்லை!
நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை!
நீ தூரமாக்கியதை நெருக்கமாக்கி வைப்பவர் யாருமில்லை!
நீ நெருக்கமாக்கியதை தூரமாக்குபவர் யாருமில்லை!
அல்லாஹ்வே!
உனது வளங்களை!
உனது கருணையை!
உனது அருட்கொடையை!
உனது ரிஜ்குகளை எங்களுக்கு விசாலாமாக்கி அருள் புரிவாயாக!
அல்லாஹ்வே!
நீங்காத, விலகிவிடாத , நிரந்தரமான அருட்கொடைகளை எங்களுக்கு வழங்குவாயாக!
அல்லாஹ்வே!
நெருக்கடியான நேரத்தில் உனது நல்லுதவியையும்!
அச்சப்படும் நேரத்தில் உனது பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன்!
அல்லாஹ்வே!
நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும்!
நீ கொடுக்காமல் தடுத்துக் கொண்டவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்!
அல்லாஹ்வே!
ஈமானை எங்களுக்கு பிரியாமானதாக ஆக்குவாயாக!
அந்த ஈமானை எங்கள் உள்ளங்களில் அழகாக ஆக்குவாயாக!
இறை நிராகரிப்பை, உன்கட்டளைக்கு மாறு செய்வதை, உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருப்பதை எங்களுக்கு வெறுப்பாக்கிவைப்பாயாக!
எங்களை நேர்வழி பெற்றவர்களில் ஆக்கி விடுவாயாக!
அல்லாஹ்வே!
எங்களை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக!
முஸ்லிமாகவே வாழ வைப்பாயாக!
நஷ்டமடையாதவர்களாக, சோதனைகளுக்கு ஆளாகதவர்களாக, எங்களை நல்லோர்களுடன் சேர்த்துவைப்பாயாக!
உண்மையான இரட்சகனே!
ஆமீன்!
ஆமீன்!
ஆமீன்!
(அஹ்மத்) #🤲துஆக்கள்🕋 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️
💞தஹஜ்ஜத் தொழுகை!
❤️கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 2157
❤️ ஸலாமைப் பரப்புங்கள் ஏழைகளுக்கு உணவளியுங்கள்! மக்கள் தூங்கும் போது தொழுங்கள்! (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதீ 2409
❤️ நாம் கேட்பது கிடைக்கும் நேரம் இது!
நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 1259
وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا
❤️ இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக.
(இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், மகாமம் மஹ்முதா என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.
(அல்குர்ஆன் 17:79)
اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا
❤️ நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.
(அல்குர்ஆன் 73:6) #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️
💞 அல்ஹம்துலில்லாஹ்!
ஆயிரம் பேரிடம் உதவி கேட்டாலும் உதவி செய்வப்போவது அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்!
எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள் எதை எதிர்பார்த்தாலும் அல்லாஹ்விடமே எதிர்பாருங்கள்! #🕌இஸ்லாம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ்
💞யா அல்லாஹ்!
புகழ் அனைத்தும் உனக்கே: முறையிடப்படுதல் உன்னிடமே:
நிவர்த்தி வேண்டுதலும் உன்னிடமே: உதவி தேடப்படுபவன் நீயே:
நன்மை புரிய சக்தியும் தீமையை விட்டு நீங்க உறுதியும் அல்லாஹ்வைக் கொண்டேயன்றி இல்லை.
அவனைப் போற்றிப் புகழுகிறோம்!
யா அல்லாஹ்!
இருள் மூடிய இரவிலும், ஒளி பெற்ற பகலிலும் இம்மையிலும், மறுமையிலும் எம் தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சலவாத்தை பொழிவாயாக!
اللهم افتح لنا أبواب الخير وأبواب البركة وأبواب النعمة وأبواب القوة وأبواب الصحة وأبواب السلامة وأبواب الجنة. اللهم افتح علينا أبواب التوبة وأبواب العلم والحكمة . اللهم ألف بين قلوبنا كما ألفت بين قلوب الأنبياء والمرسلين وألف بين قلوبنا كما ألفت بين قلوب المهاجرين والأنصار. اللهم طول اعمارناا وصحح أجسادنا ونور قلوبنا وثبت إيماننا وأحسن أخلاقنا وحصل مقاصدنا برحمتك يا أرحم الراحمين
கருணையாளனே அல்லாஹ்வே!
நலன்களில் வாயில்களை!
வளங்களின் வாயில்களை!
அருட்கொடைகளின் வாயில்களை!
ஆற்றலின் வாயில்களை!
ஆரோக்கியத்தின்
வாயில்களை!
சொர்க்கத்தின் வாயில்களை!
எங்களுக்குத் திறந்துவிடுவாயாக!
அல்லாஹ்வே!
எங்களுக்குத் தவ்பாவின் வாயில்களை!
கல்வி, மதிநுட்பங்களின் வாயில்களை
திறந்து விடுவாயாக!
இரட்சகனே!
நபிமார்கள் முர்ஸலீன்களின் உள்ளங்களை அன்பால் இணைத்ததைப் போன்று எங்கள் உள்ளங்களையும் இணைப்பாயாக!
முஹாஜிரீன்கள், அன்சாரிகளின் உள்ளங்களை இணைத்ததைப் போன்று எங்கள் உள்ளங்களையும் இணைப்பாயாக!
அல்லாஹ்வே! எங்களின் வாழ்நாட்களை நீட்டித்தருவாயாக!
எங்களின் உடல்களில் ஆரோக்கியத்தை நல்குவாயாக!
எங்கள் உள்ளங்களைப் பிரகாசிக்கச் செய்வாயாக!
எங்கள் ஈமானை உறுதிப்படுத்துவாயாக!
எங்கள் குணங்களை அழகாக்குவாயாக!
எங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவாயாக!
யா அர்ஹமர்ராஹிமீன்
ஆமீன் #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕌இஸ்லாம்
💞 அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ்! யாஅல்லாஹ்!யாஅல்லாஹ்!
உன்னுடைய திருப்தியான கண் கொண்டு எங்களைப் பார்ப்பாயாக!
அப்பார்வையினால் எங்களின் பாவங்கள் அழிக்கப்படவேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் உள்ளங்கள் பரிசுத்தமடைய வேண்டும்!
அப்பார்வையினால் நரகநெருப்பிலிருந்து எங்கள் கழுத்துகள் விடுவிக்கப்பட வேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் உள்ளங்கள் விரிவடைய வேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் முகங்களில் ஒளி வீச வேண்டும்!
அப்பார்வையினால் எங்களின் நோய்கள் குணமாக வேண்டும்!
அப்பார்வையினால்் எங்களின் பலவீனங்கள் வெற்றிகொள்ளப்பட வேண்டும்!
அப்பார்வையினால் உடைபட்டவைகள் ஒன்றிணைய வேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் கவலைகள் நீங்கவேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் இம்மை, மறுமைக்கான தேவைகள் நிறைவேற வேண்டும்.!
அப்பார்வையினால் எங்கள்
வணக்க வழிபாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் காரியங்கள் அனைத்தும் இனிதே முடியவேண்டும்!
அப்பார்வையினால்
உள்ளிருந்தும் வெளியே இருந்தும் வரும் ஆபத்துகள் நீங்க வேண்டும்!
அப்பார்வையினால்
இம்மை மறுமைக்கான அனைத்து நலன்களும் எங்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்கவேண்டும்!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்! #🤲துஆக்கள்🕋
💞யா அல்லாஹ்!
யா அவ்வலில் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வத்தில் மத்தின்
யா ராஹிமல் மஸாக்கீன
யா அர்ஹமர்ராஹிமீன்..!
யா பத்தாஹ் ...!!
வெற்றி அளிப்பவனே
உன்னை அடைவதில் எங்களுக்கு வெற்றியை தருவாயாக..!!
யா ரஹ்மானே..!!
நீ மன்னிக்கக் கூடியவன் மன்னிப்பை விரும்பக் கூடியவன் எங்கள் அனைவருடைய பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்...!
நற்செயல்கள் நல்ல அமல்கள் செய்யக்கூடிய பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!!
எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் துஆக்களை கபூல் செய்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!
உனது பொருத்தம் பெறக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!!
யா அல்லாஹ்...!!
மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் என்ற தடாகத்தில் தண்ணீரை எம்பெருமானார் கண்மணி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் தந்து ,,அருந்தக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!!
யா அல்லாஹ்...!!
எங்கள் அஃமால் நாமா என்னும் பட்டோலையை எங்கள் வலது கரத்தில் தந்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!!
எங்களை ஜஹன்னம் என்ற கொடிய நரகத்தில் இருந்து தூரமாக்கி வைத்தருள் ரஹ்மானே..!!
யா அல்லாஹ்...!
எங்களை ஜன்னத்துல் ஃபிர்தோஸ் என்ற சொர்க்கத்தில் நுழைய செய்தருள் யா ஹைய்யூ யா கைய்யூமே...!!
யா அல்லாஹ்..!
நாங்கள் ரய்யான் என்ற சிறப்பு நுழைவுவாயிலாக சொர்க்கம் செல்ல துணை செய் யா ரஹீமே...!!
யா அல்லாஹ்...!
எங்களுக்கு தவ்பா கேட்க தெரியவில்லை ரஹ்மானே !
உன்னிடம் கை ஏந்தி நிற்கிறோம் ரஹ்மானே!
யா அல்லாஹ்...!!
எங்களை பொருந்திக் கொள் ரஹ்மானே!
உன்னிடம் மிஸ்கினாக பிச்சை கேட்கிறோம் ரஹ்மானே !
யா அல்லாஹ்..!
எங்கள் பாவங்களின் காரணமாக எங்களை நரகத்தில் தள்ளிவிடாதே ரஹ்மானே !
யா அல்லாஹ்...!
உனது கோபத்தை முந்திக் கொண்ட ரஹ்மத்தின் பொருட்டால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு ரஹ்மானே...!
யா அல்லாஹ்...!!
உன்னிடம் அழுது கேட்கிறோம் ரஹ்மானே எங்களுடைய பாவங்களை மன்னித்து விடு யா ஜப்பாரே !
யா அல்லாஹ்...!!
நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து பாவத்தையும் மன்னித்தருள்,,
யா அர்ஹமர்ராஹிமீன்
யா ரஹ்மானே...!!
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🤲துஆக்கள்🕋