💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ்!
தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்கை மழையாகப் பொழிவாயாக!
நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையாக பொழிவாயாக!
பாவமன்னிப்புத் தேடுவோரின் மீது உனது மன்னிப்பை மழையாகப் பொழிவாயாக!
அநீதி இழைக்கப்படுவோரின் மீது உனது உதவியை மழையென பொழிவாயாக!
யா அல்லாஹ்!
நீ விலகியவைகளிலிருந்து நீ ஆகுமாக்கியதைக் கொண்டு எங்களுக்கு போதுமாக்குவயாக!
உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்திலிருந்தும் எங்களை தேவையற்றவர்களாக ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!
நாங்கள் கவலை துயரம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறோம்!
இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் ஆகியவற்றிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் !
கடனின் பெருக்கத்திலிருந்தும் மனிதர்களின் ஆதிக்கத்திலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறோம்!
💞யா அல்லாஹ்!
துன்பம் ஏற்படுத்தாத இன்பத்தை உன்னிடம் கேட்கின்றோம்!
பற்றாக்குறை ஏற்படுத்தாத தன்னிறைவை உன்னிடம் கேட்கிறோம்!
அச்சம் ஏற்படுத்தாத பாதுகாப்பை
உன்னிடம் கேட்கிறோம்!
கஷ்டம் ஏற்படுத்தாத மனமகிழ்ச்சியை உன்னிடம் கேட்கிறோம்!
வறுமையை ஏற்படுத்தாத செல்வத்தை உன்னிடம் கேட்கிறோம்!
யா ரஹ்மானே!
💞எங்கள் இறைவா!
பசி உள்ள இடத்தில் அன்பையும்!
தவறு உள்ள இடத்தில் மன்னிப்பையும்!
பிளவு உள்ள இடத்தில் ஒற்றுமையையும்!
பிழை உள்ள இடத்தின் திருத்தத்தையும்!
ஐயம் உள்ள இடத்தில் பற்றுதலையும்!
விரக்தி உள்ள இடத்தில் சாந்தியையும்!
இருள் உள்ள இடத்தில் ஒளியையும்!
வறுமை உள்ள இடத்தில் செல்வத்தையும்!
தீமைகள் உள்ள இடத்தில் நன்மைகளையும்!
நோய் உள்ள இடத்தில் ஆரோக்கியத்தையும்!
நீ எங்கள்அனைவருக்கும் பரிபூரணமாக வழங்கி அருள் புரிவாயக!
யா ரஹ்மான்!
💞யா அல்லாஹ்!
வானங்கள், பூமியுடைய கருவூலங்கள் உன்னிடமே இருப்பதாக சொன்ன என் ரப்பே! அல்லாஹ்வே!
உன்னுடைய கல்விஞானத்தின் கருவூலத்தை
உன்னுடைய நேர்வழிக்கான கருவூலத்தை!
உன்னுடைய அருட்கொடைகளின் கருவூலத்தை !
உன்னுடைய நல்வாய்ப்புகளின்
கருவூலத்தை!
உன்னுடைய ஆரோக்கியத்திற்கான கருவூலத்தை!
எங்களுக்குத் திறந்து விடுவாயாக!
யா ரஹ்மானே!
நீ மாபெரும் கொடையான்!
ஆமீன்
#📗குர்ஆன் பொன்மொழிகள்
💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ்
யா அவ்வலில் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வத்தில் மத்தின்
யா ராஹிமல் மஸாக்கீன
யா அர்ஹமர்ராஹிமீன்..!
யா பத்தாஹ் ...!!
வெற்றி அளிப்பவனே
உன்னை அடைவதில் எங்களுக்கு வெற்றியை தருவாயாக..!!
யா ரஹ்மானே..!!
நீ மன்னிக்கக் கூடியவன் மன்னிப்பை விரும்பக் கூடியவன் எங்கள் அனைவருடைய பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்...!
நற்செயல்கள் நல்ல அமல்கள் செய்யக்கூடிய பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!!
எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் துஆக்களை கபூல் செய்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!
உனது பொருத்தம் பெறக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!!
யா அல்லாஹ்...!!
மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் என்ற தடாகத்தில் தண்ணீரை எம்பெருமானார் கண்மணி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் தந்து ,,அருந்தக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!!
யா அல்லாஹ்...!!
எங்கள் அஃமால் நாமா என்னும் பட்டோலையை எங்கள் வலது கரத்தில் தந்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!!
எங்களை ஜஹன்னம் என்ற கொடிய நரகத்தில் இருந்து தூரமாக்கி வைத்தருள் ரஹ்மானே..!!
யா அல்லாஹ்...!
எங்களை ஜன்னத்துல் ஃபிர்தோஸ் என்ற சொர்க்கத்தில் நுழைய செய்தருள் யா ஹைய்யூ யா கைய்யூமே...!!
யா அல்லாஹ்..!
நாங்கள் ரய்யான் என்ற சிறப்பு நுழைவுவாயிலாக சொர்க்கம் செல்ல துணை செய் யா ரஹீமே...!!
யா அல்லாஹ்...!
எங்களுக்கு தவ்பா கேட்க தெரியவில்லை ரஹ்மானே !
உன்னிடம் கை ஏந்தி நிற்கிறோம் ரஹ்மானே!
யா அல்லாஹ்...!!
எங்களை பொருந்திக் கொள் ரஹ்மானே!
உன்னிடம் மிஸ்கினாக பிச்சை கேட்கிறோம் ரஹ்மானே !
யா அல்லாஹ்..!
எங்கள் பாவங்களின் காரணமாக எங்களை நரகத்தில் தள்ளிவிடாதே ரஹ்மானே !
யா அல்லாஹ்...!
உனது கோபத்தை முந்திக் கொண்ட ரஹ்மத்தின் பொருட்டால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு ரஹ்மானே...!
யா அல்லாஹ்...!!
உன்னிடம் அழுது கேட்கிறோம் ரஹ்மானே எங்களுடைய பாவங்களை மன்னித்து விடு யா ஜப்பாரே !
யா அல்லாஹ்...!!
நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து பாவத்தையும் மன்னித்தருள்,,
யா அர்ஹமர்ராஹிமீன்
யா ரஹ்மானே...!!
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் #🕋யா அல்லாஹ்
💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ்!
நீ மன்னிக்கக் கூடியவன் மன்னிப்பை விரும்பக் கூடியவன் எங்களை மன்னித்துவிடு
யா அல்லாஹ்!
இந்த முபாரக்கான ரமலான் மாதத்தில் நீ யாரையெல்லாம் மன்னித்தாயோ அந்தக் கூட்டத்தில் எங்களையும் சேர்த்து விடு!
யா அல்லாஹ்!
நீ யாருக்கெல்லாம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு வழங்கினாயோ அந்தக் கூட்டத்தில் எங்களையும் சேர்த்துவிடு!
யா அல்லாஹ்!
நீ யாருக்கெல்லாம் சொர்க்கத்தை வழங்கினாயோ அந்த சொர்க்கத்தின் கூட்டத்தாரில் எங்கள் பெயரையும் எழுதி விடு!
யா அல்லாஹ்!
இந்த ரமலான் மாதம் எங்களைக் கடந்து போகும் போது நன்மைகளையும்
அருட் கொடைகளையும், பரக்கத்தையும், அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, அபிவிருத்தி ஆரோக்கியம், உனது ரஹ்மத், உனது நேசம், உனது கருணை, இவை அனைத்தையும் எங்களுக்கு வழங்கி அருள் புரிவாயாக யா ரஹ்மானே!
யா அல்லாஹ்!
இந்த ரமலான் மாதம் முழுவதும் நாங்கள் செய்த அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக் கொண்டு அளவே இல்லாத நற்கூலி எங்களுக்கு வழங்கி விடு!
யா அல்லாஹ்!
இந்த ரமலான் மாதம் உனது திரு பொருத்தத்தோடு எங்களுக்கு நிறைவேற்றிக் கொடு யா ரஹ்மானே!
யா ரஹ்மானே!
இன்னும் நாங்கள் பல ரமலான் நோன்புகளை நோற்க எங்களுக்கு
நீ அருள் புரிவாயாக! !யா ரஹ்மானே!
யா அல்லாஹ்!
எங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கு இறைவா! எங்கள் வாழ்நாள் இறுதிநாள் வரை நாங்கள் தொடர்ந்து நல் அமல்கள் செய்திட எங்களுக்கு நீ அருள் செய்திடு யா ரஹ்மானே!
யா அல்லாஹ்!
எங்களுக்கு அளவில்லாத செல்வத்தையும் பயன் தரும் கல்வியையும் எங்களுக்கு வழங்கு அதை கொண்டு நாங்களும் பயனடைய வேண்டும் பிறருக்கு கொடுத்து உதவுகின்ற உள்ளத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக!
யா அல்லாஹ்!
நோய் நொடி இல்லாத உடலை வழங்கு! நாங்கள் வாழும் காலம் எல்லாம் உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி கூறுவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எங்களுக்கு நீ அருள் செய்திடு
யா ரஹ்மானே!
யா அல்லாஹ்!
கடன் இல்லாத வாழ்வையும்,
கடன் இல்லாத மரணத்தையும் கலிமாவோடு மரணிக்க கூடிய
நற் பாக்கியத்தை உனது உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் ஒரு உயர்ந்த அந்தஸ்தை எங்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் நாங்கள் நேசித்தவர்களுக்கும் வழங்கி விடு
யா ரஹ்மானே!
யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி கேட்கிறோம் நீ கருணையாளர்களுக்கு எல்லாம் மாபெரும் கருணையாளன்!
யா அல்லாஹ்?
எங்களுடைய ஹலாலான அனைத்து துஆக்களையும் அழகிய முறையில் நிறைவேற்று! யா ரஹ்மான!
ஆமீன்!
#🕋யா அல்லாஹ்
💞 வெற்றிக்கான துஆ!
اللهم اجعلنا مفلحين
அல்லாஹும்மஜஅல்னா முஃப்லிஹுன்!
யா அல்லாஹ்!
எங்களை வெற்றியாளர்களுடன் ஒன்றிணைப்பாயாக! #🕌இஸ்லாம்
💞 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ருடைய சுன்னத் தொழுகைக்குப் பின் கேட்ட துஆ!
யா அல்லாஹ்!
உனது பேரருளை ரஹ்மத்தைக் கேட்கிறேன்!
அதன் மூலம் எனது உள்ளம் நல்வழி பெறவேண்டும்!
அந்த கருணையினால் சிதறுண்ட என் காரியங்கள் ஒன்று சேரவேண்டும்!
கேடடைந்த என் விஷயங்கள் ஒழுங்கு படுத்தப்படவேண்டும்!
வழிகேடு தடுக்கப்பட வேண்டும்
எனது தீன் மார்க்கம் செம்மையுற வேண்டும்!
எனது கடன்கள் நிறைவேற வேண்டும்!
எனது கண்முன் இல்லாத என் குடும்பம் ,பொருட்கள் பாதுகாப்பு பெறவேண்டும்!
என் முன்னால் இருப்பவைகள் உயர்வு பெறவேண்டும்!
எனது முகம் பிரகாசத்தால் வெண்மையாக வேண்டும்!
அந்த ரஹ்மத்தால் எனது அமல்கள் தூய்மையடைய வேண்டும்!
அதன் மூலம் எனது உள்ளத்தில் நேர்வழி உதிக்கவேண்டும்!
நான் விரும்பியவைகள் எனக்கு திரும்ப கிடைக்கவேண்டும்!
அந்த அளவற்ற உனது கருணையினால் அனைத்து தீயவைகளிலிருந்தும் நான் பாதுகாப்பு பெறவேண்டும்!
யா அல்லாஹ்!
உண்மையான ஈமானையும்,
குப்ரின் பால் திரும்பாத நம்பிக்கையையும், கொடுப்பாயாக!
இம்மையிலும்,மறுமையிலும் உன்னுடைய கண்ணியமான சிறப்பை அடையச்செய்யும் ரஹ்மத்தையும் எனக்குஅளிப்பாயாக!
உனது தீர்ப்புகளில் வெற்றியயையும்!
ஷஹீதீன்கள் பெறும் விருந்தோம்பலையும்!
நல்வாய்ப்பைப் பெற்றவர்களின் நல்வாழ்க்கையையும்!
நபிமார்களின் நல்நேசத்தையும்!
விரோதிகளுக்கெதிராக உதவியையும் உன்னிடம வேண்டுகிறேன்!
யா அல்லாஹ்!
எனது தேவைகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன!
என்னுடைய சிந்தனை குறைவுடையதாக இருக்கிறது!
எனது அமல்கள் பலவீனமாக இருக்கிறது!
உனது கருணையின் பால் நான் தேவையுடையவனாக இருக்கிறேன்!
காரியங்களை நிறைவேற்றுபவனே!
நெஞ்சங்களுக்கு நலமளிப்பவனே!
நீ கடல்களுக்கு இடையே தடுப்புகள் அமைத்ததுபோல்
எனக்கும் நரகவேதனைகளுக்குமிடையே !
எனக்கும் கப்ரின் குழப்பங்களுக்கிடையே!
எனக்கும் அழிவால் ஓலமிடுவதற்குமிடையே தடுப்பை ஏற்படுத்துவாயாக! #🕋யா அல்லாஹ்
💞அல்ஹம்துலில்லாஹ்! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ் !
உன் ரஹ்மத் இறங்கும் இம்மாதத்தில்
எங்களின் எந்தப்பாவத்தையும்
மன்னிக்காமல் விட்டுவிடாதே!
எந்தக் கவலையையும் மகிழ்ச்சியாக மாற்றாமல் விட்டுவிடாதே!
எந்தக் கடனையையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே !
இவ்வுலக ,மறுஉலகதேவைகள் எதையும் முழுமையாக்காமல் விட்டுவிடாதே!
எங்களின் அகிலத்தின் பாதுகாவலனே
உனக்கே புகழனைத்தும்!
உன்னை மட்டுமே வணங்குகிறோம்
உன் முன்னால் மட்டுமே ஸஜ்தா செய்து பிரார்த்திக்கிறோம்!
எங்களின் பிரார்த்தனையை
ஏற்றுக்கொள்வாயாக!
யா ரஹ்மானே!
ஆமீன் #🕋யா அல்லாஹ்
💞 நபிமொழி !
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்!
ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது
ஒருவர் அல்லாஹ்விடம் மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி
திர்மிதி 2572
💞யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக!
!யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக!
யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக!
💞யா அல்லாஹ் எங்களை நரகத்தை விட்டும் பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ் எங்களை நரகத்தை விட்டும் பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ் எங்களை நரகத்தை விட்டும் பாதுகாப்பாயாக!
ஆமீன்!
ஆமீன்!
ஆமீன் யாரப்பல் ஆலமீன்!
!
#🕋யா அல்லாஹ்









![🕋யா அல்லாஹ் - அல்லாஹீி [ லைலத்துல் கதர்ீ இரவை அா கூடய பாக்கியத்தை எறிகளுக்கு தந்துவிடு8 [oimb6u] Wm "@yisha | அல்லாஹீி [ லைலத்துல் கதர்ீ இரவை அா கூடய பாக்கியத்தை எறிகளுக்கு தந்துவிடு8 [oimb6u] Wm "@yisha | - ShareChat 🕋யா அல்லாஹ் - அல்லாஹீி [ லைலத்துல் கதர்ீ இரவை அா கூடய பாக்கியத்தை எறிகளுக்கு தந்துவிடு8 [oimb6u] Wm "@yisha | அல்லாஹீி [ லைலத்துல் கதர்ீ இரவை அா கூடய பாக்கியத்தை எறிகளுக்கு தந்துவிடு8 [oimb6u] Wm "@yisha | - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_300481_d73ca9f_1773061297245_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=245_sc.jpg)



