💞நபிமொழி!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய கரத்தை பிடித்து கூறினார்கள் முஆதே!
அல்லாஹ்வின் மீது ஆணையாக!
நிச்சயமாக நான் உம்மை நேசிக்கிறேன்!
முஆதே! உமக்கு நான் ஒரு உபதேசம் செய்கிறேன்! ஒவ்வொரு தொழுகைக்கு பின்னூம்!
அல்லாஹூம்மா அஇன்னி அலா திக்ரி(க்)க வஷு(க்)ரிக்க வஹுஸ்னி
இபாத(த்)திக!
யா அல்லாஹ்
உன்னை நினைவு கூறுவதற்கும்!
உனக்கு நன்றி செலுத்துவதற்கும்!
உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக!
எனக் கூறுவதை நீர் விட்டு விடாதீர்!
அறிவிப்பாளர்: முஆத் ரளியல்லாஹு அன்ஹு அபூதாவூத் 1522 ஸஹுஹ் #🕌இஸ்லாம்


