💞 நபிமொழி!
ஒரு அடியான் ஸஜ்தாவில் இருக்கும் போது அவனுடைய இறைவனுக்கு மிக அருகில் இருப்பான். எனவே ஸஜ்தாச் செய்யும் போது பிரார்த்தனைகளை அதிகப்படுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். [முஸ்லிம் #🕋யா அல்லாஹ்
💞 அல்ஹம்துலில்லாஹ்!
தான் விரும்பக் கூடிய குழந்தையை ஒரு தந்தை எப்பொழுதும் கைவிடுவதில்லை!
தான் விரும்பக்கூடிய குழந்தையை ஒரு தாய் எப்பொழுதும் கைவிடுவதில்லை!
தான் விரும்பக் கூடிய மாணவனை ஒரு ஆசிரியர் எப்பொழுதும் கைவிடுவதில்லை!
மனிதர்களின் நேசத்தை விட இறைவனின் நேசம் மேலானது!
இறைவனின் நேசத்தை பெற்றவர்கள் பாக்கியவான்கள்!
அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால்!
அல்லாஹ் ஒரு அடிமையை விரும்பினால்!
அல்லாஹ் அவன் படைத்த படைப்புகளில் ஒரு மனிதனை அல்லாஹ் நேசித்தால்!
எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் அல்லாஹ் அந்த அடியானை
கை விடமாட்டான்!
எல்லையில்லாத அன்பு, அழியாத அன்பு, நிலையான அன்பு, அல்லாஹ்வின் பேரன்பு மட்டுமே! #🕋யா அல்லாஹ்
💞 அழகிய நினைவூட்டல்!
மனிதர்களின் நேசத்தை விட இறைவனின் நேசம் மேலானது!
இறைவனின் நேசத்தை பெற்றவர்கள் பாக்கியசாலிகள்!
யா அல்லாஹ்!
நீ நேசிக்க கூடிய மனிதர்களாக
எங்களையும் ஆக்கி அருள் புரிவாயாக யா ரஹ்மானே!
அல்லாஹ்வின் அன்பை பெற ஓத வேண்டிய அழகிய துஆ
اللَّهُمَّ إنِّي أسْألُكَ حُبَّكَ ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ ، وَالعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ ، اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أحَبَّ إلَيَّ مِنْ نَفْسِي ، وأهْلِي ، وَمِنَ الماءِ البارِدِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஹுப்பக வஹுப்ப மன் யுஹிப்புக வல் அமலல்லதீ யுபல்லிஙீனீ ஹுப்பக அல்லாஹும்மஜ்அல் ஹுப்பக அஹப்ப இலய்ய மின் நஃப்ஸீ, வஅஹ்லீ, வமினல் மாயில் பாரிதீ
யா அல்லாஹ்!
உன்னுடைய அன்பையும்,
உன்னை நேசிப்பவர்களின் அன்பையும் , உன் அன்பின் பக்கம் என்னைச் சேர்ப்பிக்கும் செயலையும் , நான் உன்னிடம் கேட்கிறேன்!
யா அல்லாஹ்!
உன் அன்பை என் உயிரை விட
என் குடும்பத்தாரை விட ,
குளிர்ந்த நீரை விட எனக்கு பிரியமானதாக ஆக்கி வைப்பாயாக!
(நூல் : ரியாளுஸ் ஸாலிஹீன் : 1490) #🕋யா அல்லாஹ்
💞 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ருடைய சுன்னத் தொழுகைக்குப் பின் கேட்ட துஆ!!
யா அல்லாஹ்!
உனது பேரருளை ரஹ்மத்தைக் கேட்கிறேன்!
அதன் மூலம் எனது உள்ளம் நல்வழி பெறவேண்டும்!
அந்த கருணையினால் சிதறுண்ட என் காரியங்கள் ஒன்று சேரவேண்டும்!
கேடடைந்த என் விஷயங்கள் ஒழுங்கு படுத்தப்படவேண்டும்!
வழிகேடு தடுக்கப்பட வேண்டும்
எனது தீன் மார்க்கம் செம்மையுற வேண்டும்!
எனது கடன்கள் நிறைவேற வேண்டும்!
எனது கண்முன் இல்லாத என் குடும்பம் ,பொருட்கள் பாதுகாப்பு பெறவேண்டும்!
என் முன்னால் இருப்பவைகள் உயர்வு பெறவேண்டும்!
எனது முகம் பிரகாசத்தால் வெண்மையாக வேண்டும்!
அந்த ரஹ்மத்தால் எனது அமல்கள் தூய்மையடைய வேண்டும்!
அதன் மூலம் எனது உள்ளத்தில் நேர்வழி உதிக்கவேண்டும்!
நான் விரும்பியவைகள் எனக்கு திரும்ப கிடைக்கவேண்டும்!
அந்த அளவற்ற உனது கருணையினால் அனைத்து தீயவைகளிலிருந்தும் நான் பாதுகாப்பு பெறவேண்டும்!
யா அல்லாஹ்!
உண்மையான ஈமானையும்,
குப்ரின் பால் திரும்பாத நம்பிக்கையையும், கொடுப்பாயாக!
இம்மையிலும்,மறுமையிலும் உன்னுடைய கண்ணியமான சிறப்பை அடையச்செய்யும் ரஹ்மத்தையும் எனக்குஅளிப்பாயாக!
உனது தீர்ப்புகளில் வெற்றியயையும்!
ஷஹீதீன்கள் பெறும் விருந்தோம்பலையும்!
நல்வாய்ப்பைப் பெற்றவர்களின் நல்வாழ்க்கையையும்!
நபிமார்களின் நல்நேசத்தையும்!
விரோதிகளுக்கெதிராக உதவியையும் உன்னிடம வேண்டுகிறேன்!
யா அல்லாஹ்!
எனது தேவைகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன!
என்னுடைய சிந்தனை குறைவுடையதாக இருக்கிறது!
எனது அமல்கள் பலவீனமாக இருக்கிறது!
உனது கருணையின் பால் நான் தேவையுடையவனாக இருக்கிறேன்!
காரியங்களை நிறைவேற்றுபவனே!
நெஞ்சங்களுக்கு நலமளிப்பவனே!
நீ கடல்களுக்கு இடையே தடுப்புகள் அமைத்ததுபோல்
எனக்கும் நரகவேதனைகளுக்குமிடையே !
எனக்கும் கப்ரின் குழப்பங்களுக்கிடையே!
எனக்கும் அழிவால் ஓலமிடுவதற்குமிடையே தடுப்பை ஏற்படுத்துவாயாக #🕋யா அல்லாஹ்
💞 இறை நம்பிக்கையாளர்களுக்கு
இறைவன் கூறும் அழகிய ஆறுதல் வார்த்தைகள்..!
💞தனிமையில் இருக்கும் போது!
நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் 57 : 4
💞சோதிக்கப் படுவதாக உணரும் போது!
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை
அல்குர்ஆன் 2 : 286
💞பொறுமையை இழக்கும் போது!
(பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள் அல்குர்ஆன் 39 : 10
💞கைவிடப்பட்டதாக உணரும் போது!
உம்முடைய இறைவன் உம்மைக்
கை விடவுமில்லை அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. அல்குர்ஆன் 93:3
💞துன்பத்தில் இருக்கும் போது!
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
அல்குர்ஆன் 94 : 6
💞எனக்கென எதுவும் இல்லை என்று என்னும் போது!
உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான் அப்பொழுது நீர் திருப்தியடைவீர் 93 : 5
💞கவலையில் இருக்கும் போது!
கவலைப்படாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்
அல்குர்ஆன் 9 : 40 #🕋யா அல்லாஹ்
💞 அல்லாஹ் மாபெரும் கருணையாளன்!
நாம் எதிர்பார்க்காத ஒன்றை!
நாம் எதிர்பார்க்காத முறையில்!
நாம் எதிர்பார்க்காத நேரத்தில்!
நாம் எதிர்பார்க்காத விதத்தில்!
செயல்படுத்தும் ஆற்றலுள்ளவன்!
அல்லாஹ் ஒருவன் மட்டுமே ☝️
நாம் அவனிடமே அடைக்கலம் ஆகுவோம்
அவன் அளவற்ற அருளாளன்!
நிகரற்ற அன்புடையோன்! #🕋யா அல்லாஹ்













