💞 அல்லாஹ் மாபெரும் கருணையாளன்!
நாம் எதிர்பார்க்காத ஒன்றை!
நாம் எதிர்பார்க்காத முறையில்!
நாம் எதிர்பார்க்காத நேரத்தில்!
நாம் எதிர்பார்க்காத விதத்தில்!
செயல்படுத்தும் ஆற்றலுள்ளவன்!
அல்லாஹ் ஒருவன் மட்டுமே ☝️
நாம் அவனிடமே அடைக்கலம் ஆகுவோம்
அவன் அளவற்ற அருளாளன்!
நிகரற்ற அன்புடையோன்! #🕋யா அல்லாஹ்
💞யா அல்லாஹ்!
எந்த பிள்ளைகளின் நற்செயலால் பெற்றோர்கள் சுவனம் செல்வார்களோ அப்படிப்பட்ட பிள்ளைகளாக எங்கள் பிள்ளைகளையும் ஆக்கி அருள்வாயாக
யா ரஹ்மானே!
#🕋யா அல்லாஹ்
💞அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சிய நலன்கள்!
யா அல்லாஹ்!
கோரிக்கைகளில் சிறந்ததை!,
துஆக்களில் சிறந்ததை!
உயர்ந்த வெற்றியை!
நேர்த்தியான அமலை!
மேலான நற் கூலியை!
நல்வாழ்வை, நல்மரணத்தை உன்னிடம் வேண்டுகிறேன்!
என்னை உறுதியோடு நிற்கச் செய்வாயாக!
எனது நன்மையின் தட்டையைக் கனமாக்குவாயாக!
எனது ஈமானை வலுவாக்குவாயாக!
எனது பதவியை உயர்த்துவாயாக!
எனது தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக!
என் பிழையைப் பொறுத்தருள்வாயாக!
உன்னிடம் சுவனத்தின்
உயர்பதவிகளைக் கேட்கிறேன்!
யா அல்லாஹ்!
நான் உன்னிடம் நல்லதொடக்கத்தையும்,
அதனுடைய நல்ல முடிவுகளையும்,
அவற்றை ஒன்று திரட்டி தருபவைகளையும்
அவற்றில் ஆரம்பமானதையும்,
அவற்றின் இறுதியையும், புறத்துள்ளவற்றையும், அகத்தில் உள்ளவற்றையும் கேட்கிறேன்!
உன்னிடம் சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்!
யா அல்லாஹ்!
உறுப்புகளால் புரியும் காரியங்களின் நலன்களையும்!
இதயத்தால் எண்ணும் செயல்களின் நலன்களையும்!
நான் செய்யும் மற்ற அமல்களின் நலன்களையும்!
என் செயல்களின் நலன்களையும்!
அகத்திலுள்ளவற்றின் நலன்களையும்!
புறத்திலுள்ளவற்றின் நலன்களையும்!
சுவனத்தின் உயர்பதவிகளையும் கேட்கிறேன்!
யா அல்லாஹ்!
உன்னிடம் என் பெயரை உயர்த்தும் படியும்,
என் பாவச்சுமைகளை என் முதுகிலிருந்து இறக்கிவிடுவதையும்,
என் விவகாரங்களை சீர்படுத்துவதையும்,
என் இதயத்தைத் தூய்மையாக்குவதையும்,
என் கற்பொழுக்கத்தை பாதுகாப்பதையும்,
என் கப்ரை ஒளியாக்குவதையும் உன்னிடம் வேண்டுகிறேன்!
மேலும், சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்!
யா அல்லாஹ்!
நான் உன்னிடம்
என் செவி,
என் பார்வை,
என் உயிர்,
என் உடல்,
என் குணம்,
என் குடும்பம்,
என் செல்வம்,
என் வாழ்வு,
என் மரணம்,
என் செயல் இவையனைத்திலும்
நீ பரக்கத் செய்ய வேண்டும் என்று கேட்கிறேன்!
மேலும், சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்.(ஹாகிம்)
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹபிஹி அஜ்மயீன்.
வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன். #🕋யா அல்லாஹ்
💞நபிமொழி!
நபி ஸல் அவர்கள் கேட்ட துஆ!
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَائَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மின் ஸவாலி நிஃமதி(க்)க வதஹவ்வுலி ஆபி[F]ய(த்)தி(க்)க வபு[F]ஜாஅதி நிக்ம(த்)தி(க்)க வஜமீஇ ஸகதி(க்)க
இறைவா!
உனது அருள் நீங்குவதை விட்டும்,
உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!
ஆதாரம்: முஸ்லிம்-5289 (4922)
#🕋யா அல்லாஹ்
💞 பாவ மன்னிப்பு கோருவதில்
தலையான துஆ!
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்!
❤️அரபு மொழியில்!
اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
❤️அரபு தமிழ்!
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அஃபூவு ல(க்)க பினிஃமதி(க்)க அலய்ய, வஅஃபூவு ல(க்)க பிதன்பீ ஃபக்ஃபிர்லீஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த
❤️ தமிழ் பொருள்!
இறைவா!
நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
ஆதாரம்: புகாரி #🕋யா அல்லாஹ்
💞 அழகிய நினைவூட்டல்!
துஆ!
தன்னிடம் கேட்கும் அடியானை அல்லாஹ் நேசிக்கிறான்!
துஆ!
தன்னிடம் கேட்கும் அடியானை வெறும் கையுடன் அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான்!
துஆ!
துஆவை விட சிறந்த அமல் அல்லாஹ்விடத்தில் வேறு எதுவும் இல்லை!
துஆ!
விதியையும் மாற்றும் தகுதி துஆவிற்கு உள்ளது!
துஆ!
எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள் எதை எதிர்பார்த்தாலும் அல்லாஹ்விடமே எதிர்பாருங்கள்!
துஆ!
ஆயிரம் பேரிடம் உதவி கேட்டாலும் உதவி செய்வப்போவது அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்!
#🕋யா அல்லாஹ்






![🕋யா அல்லாஹ் - இல்லாஹ் UU(ా பரக்கத்தை கூடியவனே வழங்கக் 9600]6|60 எங்கள் எங்கள் உபையில் எங்கள் வாழ்வாதாரத்தில் எங்கள் வீட் டில் எங்கள் அன்பில் எங்கள் தீனில் எங்கள் இபாதத்தில் எங்கள் வாழ்வில் எங்கள் மரணத்தில் பரக்கத்தை எங்களுக்கு வழங்குவாயாக ரஹ்மானே Gilu UI இல்லாஹ் UU(ా பரக்கத்தை கூடியவனே வழங்கக் 9600]6|60 எங்கள் எங்கள் உபையில் எங்கள் வாழ்வாதாரத்தில் எங்கள் வீட் டில் எங்கள் அன்பில் எங்கள் தீனில் எங்கள் இபாதத்தில் எங்கள் வாழ்வில் எங்கள் மரணத்தில் பரக்கத்தை எங்களுக்கு வழங்குவாயாக ரஹ்மானே Gilu UI - ShareChat 🕋யா அல்லாஹ் - இல்லாஹ் UU(ా பரக்கத்தை கூடியவனே வழங்கக் 9600]6|60 எங்கள் எங்கள் உபையில் எங்கள் வாழ்வாதாரத்தில் எங்கள் வீட் டில் எங்கள் அன்பில் எங்கள் தீனில் எங்கள் இபாதத்தில் எங்கள் வாழ்வில் எங்கள் மரணத்தில் பரக்கத்தை எங்களுக்கு வழங்குவாயாக ரஹ்மானே Gilu UI இல்லாஹ் UU(ా பரக்கத்தை கூடியவனே வழங்கக் 9600]6|60 எங்கள் எங்கள் உபையில் எங்கள் வாழ்வாதாரத்தில் எங்கள் வீட் டில் எங்கள் அன்பில் எங்கள் தீனில் எங்கள் இபாதத்தில் எங்கள் வாழ்வில் எங்கள் மரணத்தில் பரக்கத்தை எங்களுக்கு வழங்குவாயாக ரஹ்மானே Gilu UI - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_847635_2a80d745_1775779846012_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=012_sc.jpg)






