💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201
யா அல்லாஹ்!
எங்களுக்கு நலன்களுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
உன் பாதுகாப்பிற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
ஆரோக்கியத்திற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
உன் அருட்கொடைகளுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
பரக்கத்தினுடைய வாசல்களை திறந்துவிடுவாயாக!
ஆற்றலுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
பேரன்பிற்கான வாசல்களைத் திறந்து
விடுவாயாக!
ரஹ்மத்தினுடைய வாசல்களைத்
திறந்துவிடுவாயாக!
ரிஜ்குடைய வாசல்களைத்
திறந்துவிடுவாயாக!
கல்விஞானத்திற்கான
வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
உன்னுடைய மன்னிப்பிற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
சொர்க்கத்திற்கு என்னை
அழைத்துச் செல்லும் வாசல்களைத்
திறந்துவிடுவாயாக!
யா அர்ஹமர் ராஹீமீன்!
யா அல்லாஹ்!
எங்களை இவ்வுலகத்தில் கண்ணியத்தோடு வாழ வைப்பாயாக மறுமையில் மன்னிப்போடு உன் சொர்க்கத்தில் எங்களை வாழ வைப்பாயாக யா ரஹ்மானே!
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும்
கேட்ட துஆ வைக் கேட்கிறோம்
ஏற்றுக்கொள்வாயாக யா ரஹ்மானே
لا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، لَهُ المُلْكُ ، وَلَهُ الحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ ، وَلاَ يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு
லா ஷரீக்க வஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
அல்லாஹும்ம லா மானிஅعலிமா அعஃத்தைத்த வலா முعஉத்தி லிமா
மன அத்த வலா யன்ஃபع உ தல் ஜத்தி மின்கல் ஜத்து.
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை.அவனுக்கு இணையானவன் யாருமில்லை
ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது
அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்
யா அல்லாஹ்!
நீ கொடுத்ததைத்
தடுப்பவர் யாருமில்லை.
நீ தடுத்ததைக் கொடுப்பவரும் யாருமில்லை
எந்த செல்வந்தனின் செல்வமும் உன்னிடம் எந்தப் பலனும் அளிக்காது
யா அல்லாஹ் எங்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவாயாக!
ஆமீன்.
#🕋யா அல்லாஹ்
💞யா அல்லாஹ்!
பலாய் முஸீபத்களை விட்டும்!
கடும் தீராத நோய்நொடிகளை
விட்டும்!
அகால மரணத்தை விட்டும்!
உலகின் கேவலத்தை விட்டும்!
எதிரிகளின் சூழ்ச்சிகளை விட்டும்!
பிறரிடம் கையேந்துவதை விட்டும்!
ஈமானுடையத் தன்மையை
இழப்பதை விட்டும்!
இறைவா உனக்கு மாற்றமாக
நடப்பதை விட்டும்!
நரக வேதனையை விட்டும்!
மண்ணறையின் வேதனையை விட்டும்!
வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை வேதனையை விட்டும்!
தஜ்ஜாலின் சோதனையை விட்டும்!
இன்னும் எங்களுக்கு ஏற்படும்
பல இடையூறுகளை விட்டும்!
எம்மையும் எம் குடும்பத்தினரையும்
எம் சமூகத்தையும் எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக!
யா ரஹ்மானே!
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!
#📗குர்ஆன் பொன்மொழிகள்
💞 நபிமொழி!
ஒரு அடியான் ஸஜ்தாவில் இருக்கும் போது அவனுடைய இறைவனுக்கு மிக அருகில் இருப்பான். எனவே ஸஜ்தாச் செய்யும் போது பிரார்த்தனைகளை அதிகப்படுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். [முஸ்லிம்
#📗குர்ஆன் பொன்மொழிகள்
💞 நபிமொழி!
சொர்க்கத்தின் கருவூலம்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் மீது போர் தொடுத்த போது அல்லது அவர்கள் கைபரை நோக்கிச் சென்று திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், ”அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன். லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று குரல்களை உயர்த்திக் கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ அல்லது இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே! நீங்கள் அழைக்கின்றீர்கள். அவன் உங்களுடனே! இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு. ”லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் – அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவத்திலிருந்து விலகவோ! நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது” என்று கூறுவதைக் கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். ”அப்துல்லாஹ் பின் கைஸே!” என்று அழைத்தார்கள். ”கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் பதிலளித்தேன். ”உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்” என்று சொன்னார்கள். ”சரி! அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று நான் கூறினேன். ”லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி)
நூல் : புகாரி 4202
#📗குர்ஆன் பொன்மொழிகள்
💞 அல்ஹம்துலில்லாஹ்!
எங்கள் இறைவா!
திக்ரு செய்யக்கூடிய நாவையும் உன்னை நினைக்கின்ற உள்ளத்தையும் கொடுத்த படைத்த இறைவனே உனது அருட்கொடைகளுக்கு நன்றி!
யா ரஹ்மானே!
#🕋யா அல்லாஹ்












![🕌இஸ்லாம் - 00 உனது அருள் எஙகளுக்கு வாசலை திறந்து வைப்பாயாசு ரஹ்மானே யா Gyisha] 00 உனது அருள் எஙகளுக்கு வாசலை திறந்து வைப்பாயாசு ரஹ்மானே யா Gyisha] - ShareChat 🕌இஸ்லாம் - 00 உனது அருள் எஙகளுக்கு வாசலை திறந்து வைப்பாயாசு ரஹ்மானே யா Gyisha] 00 உனது அருள் எஙகளுக்கு வாசலை திறந்து வைப்பாயாசு ரஹ்மானே யா Gyisha] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_139360_2e0d9f46_1770568137289_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=289_sc.jpg)
