#🌻🌻காலை வணக்கம்🌻🌻 *இன்றைய தலைப்புச் செய்திகள்!* 🗞️🗞️
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு சென்னை வருகை. இன்று புதுச்சேரியிலும், அடுத்த 2 நாட்கள் தமிழ்நாட்டிலும் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறது.
> கன்னியாகுமரி இலங்கை மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்ட 90 புதிய குடியிருப்புகள் திறப்பு. இன்று நடைபெறும் அரசு விழாவில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த வரிகள் உயர்த்தப்படும் என்ற எடப்பாடி பேட்டியால் மக்கள் அதிர்ச்சி. காலையில் கருணைத் தொகை.. மாலையில் உதவித் தொகை என மாற்றம்.
> புதிய கட்சியை தொடங்கி, கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார் வி.கே.சசிகலா. இனியும் மௌனமாக இருந்தால் மக்கள் மன்னிக்க மட்டார்கள் என உருக்கம்
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என அமித்ஷாவே கூறினார். ஓ.பன்னீர்செல்வம் பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
> சென்னை புறநகர் ரயில்கள் குறைப்பு குறித்து ரயில்வே உரிய தகவல் வழங்கவில்லை என அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு. முன்கூட்டியே தகவல் அளித்திருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க முடியும் என விளக்கம்
அகமதாபாத் மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு ரூ.1,067 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல். சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் தொடர்ந்து வஞ்சிப்பதாகக் குற்றச்சாட்டு
. #காட்சி ஒன்று செய்தி இரண்டு. #ரெங்கா! #renga-vamba!


