ShareChat
click to see wallet page
search
*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்* ~ ஆசிரியர் அருட்தந்தை மெத்தோடியஸ் அவர்கள் பாகம்-10 8-வது காட்சி அன்று பெப்ருவரி மாதம் 24-ம் நாள். புதன்கிழமை. 26 பெர்னதெத் வழக்கம்போல் காலையில் கெபிக்கு வந்தாள். முழந்தாளிலிருந்து தரையில் குனிந்து வணங்கி "அருள் நிறைந்த மரியாயே" என்று செபமாலை செபிக்கத் தொடங்கியதும் பரவசமானாள். அவள் மூகத்தில் சுவலை படர்ந்தது. அழுதாள். கண்ணீர்த் துளிகள் சுன்னத்தில் வழிந்தோடின. திடீரென எழுந்து, ‘தவம்! தவம்! தவம்! தபசு செய்ய வேண்டும் என்று அன்னை நம்மைக் கேட்கிறார்கள்" என்று கூட்டத்தைப் பார்த்துச்சொன்னாள். 9-வது காட்சி அன்று பெப்ருவரி மாதம் 25-ம் நாள், வியாழக்கிழமை, வழக்கம்போல் காலையில் பெர்னதெத் குகைக்கு வந்தாள். செபித்தாள், பரவசமானாள். திடீரென எழுந்தாள். குகையின் அருகில் சென்றாள். குகையை உற்றுப் பார்த்துக் கொண்டே "சரி"! என்று கூறி தலையசைத்து விட்டு, திறந்த வெளிக்கு ஓடினாள், பின் திகைத்து நின்றாள். குகையை உற்றுப் பார்த்தாள். அன்னை வேறு இடத்தைக் காட்டியதால் அந்த இடத்திற்குச் சென்று அங்கே இருந்த சிறு பள்ளத்தில் முழந்தாளிட்டபடி மண்ணைத் தோண்டினாள். உடனே நீர் சுரந்து ஊற்றெடுத்துப் பாய்ந்தது. சகதியுடன் கலந்த அத்தண்ணீரை இரு கைகளாலும் அள்ளி முகத்தைக் கழுவினாள். அருகில் உள்ள புல்லைப் பறித்து மென்றாள். நாற்பத்தைந்து நிமிடங்கள் இது நடந்தது, கூட்டத்தில் இருந்த கடவுளை நம்பாத நாஸ்திகன் ஒருவன் “என்ன முட்டாள்தனமான செயல்! இந்த 20-ம் நூற்றாண்டிலும் மூட்டாள்தனமான இச்செயல்களை எப்படி சகிக்க முடியும்?” என்று கத்தினான், மறுநாள் அதே இடத்திற்கு அந்த நாஸ்திகன் வந்து பார்த்திருந்தால் வீறிட்டுப் பாய்ந்து வரும் சுத்தமான ஊற்று நீரைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பான். 150 ஆண்டுகளாகியும். இன்று வரை வற்றாமல் அந்தச் சுனைநீர் ஊற்றெடுத்துப் பாய்கிறது. ஒரு நாளைக்கு 25,000 கேலன் தண்ணீர் தங்குதடையின்றிச் சுரந்து பாய்கிறது. இப்புதுமைத் தண்ணீரைப் பயன்படுத்துவோரில் பலர் நோய் நீங்கி பூரண குணம் பெறுகின்றனர். இந்தத் தண்ணீரை திருப்பயணிகள் உலகமெங்கும் எடுத்துச் செல்கின்றனர். இன்று காட்சி நடைபெறவில்லை பெப்ருவரி மாதம் 26-ம் நாள். வெள்ளிக்கிழமை, அன்று பெர்னதெத்துக்கு அன்னை காட்சிதரவில்லை. அன்னை மசாபியேல் குகையில் காட்சி கொடுத்ததின் நிலையான அடையாளமாக இருக்கப்போகிற நீர் ஊற்றின் மீது மக்கள் கவனத்தைச் செலுத்தும் படியாகவும், அவரைத் தேடி வரும் மக்களுக்கெல்லாம் சர்வேசுரனிடமிருந்து அருளைப் பெற்றுத் தரும் “வரப்பிரசாதத்தின் மத்தியஸ்தியான (Mediatrix of grace) பரிசுத்த கன்னிமரியாயின் பிரசன்னம் இங்கு இருப்பதை சுட்டிக் காட்டவும் இன்று காட்சி தரவில்லை என்கிறாள் பெர்னதெத் தொடர்ந்து இனைந்திருங்கள்..... ஆமென். #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - M M - ShareChat