ShareChat
click to see wallet page
search
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றின் வடக்கரையில் அமையப் பெற்றுள்ள மிகவும் அற்புதமான தலம் அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில் ஆகும் பொதுவாக பெருமாள் ஒரு சங்கு ஒரு சக்கரத்துடன் காட்சி தருவார் இங்குள்ள பெருமாள் இரண்டு சங்கு இரண்டு சக்கரங்களுடன் எட்டு கரங்களோடு மகாவிஷ்ணுவாக காட்சி தருகிறார் செல்வம் மற்றும் ஆற்றல் இரண்டையும் ஒன்று சேர வழங்கும் ஒப்பற்ற கோலம் இது கருடாழ்வாரின் தோள் மீது அமைந்த நிலையில் அன்னைஅலர்மேலு மங்கையுடன் சுவாமி காட்சி தருகிறார் கருடனின் வலது கையில் சுவாமியின் பாதமும் இடது கையில் உள்ள மலரில் தாயாரின் பாதமும் இருப்பது கண் கொள்ளா காட்சி இதனை நித்திய கருட சேவை என்பர் சோழ மன்னன் பராந்தகன் புத்திர பாக்கியம் வேண்டி வழிபட்ட தலம் இன்றும் குழந்தை வரம் வேண்டி இங்கு வந்து மனம் உருகி வேண்டிக் கொண்டால் புருஷோத்தமனின் அருளால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம் ஏகபத்தினி விரதம் என்ற பெயருக்கு ஏற்ப சுவாமி ஒருதாயார் மட்டும் இங்கு அருள் புரிகிறார் புதுமண தம்பதிகள் இங்கு வந்து வணங்கினால் வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கொருவர் பிரியாமல் அன்போடும் பண்போடும் வாழ்வார்கள் என்பது ஐதீகம் பொருளாதாரம் நெருக்கடி மற்றும் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த அஷ்டபுயங்கர் பெருமாளை வழிபட தரித்திரம் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை #பக்தி
பக்தி - reddiyur aanmisam இரட்டைசங்குமற்றும் ரட்டைசக்கரத்துடன் @ கூடியபெருமாள் புத்திரப்பேறு அருளும் புருஷோத்தமர்! reddiyur aanmisam இரட்டைசங்குமற்றும் ரட்டைசக்கரத்துடன் @ கூடியபெருமாள் புத்திரப்பேறு அருளும் புருஷோத்தமர்! - ShareChat