#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க
நேத்திக்கு ஒரு பேய் படம் பாக்க நைட் ஷோ போயிருந்தேன்...!!
அப்பவே சொன்னானுங்க பசங்க... அந்த படத்த போயி, அதுவும் நைட்டுல... தனியா... வேணாம்டான்னு...
ஷோ முடிஞ்சப்ப நைட்டு ஒரு 1.15 மணி இருக்கும்...
செம திகிலான பேய் படம்...
அரண்டு போய் தியேட்டர விட்டு உடம்பெல்லாம் வேர்த்து, விறுவிறுத்து வெளியே வந்து நின்னேன்.
படம் முடிஞ்சதும் வந்து pickup பண்றேன்னு சொன்ன ஆட்டோவ இன்னும் காணோம்.
ஆட்டோ ட்ரைவருக்கு ஃபோன் போட்டா... "சார், டயர் பஞ்சர்... ஒட்டிகிட்டு இருக்கேன்... லேட்டாகும்... நீங்க வேற ஒரு ஆட்டோல வீட்டுக்கு போய்டுங்கன்னு சொன்னார்."
ரொம்ப நேரம் வெய்ட் பண்ணியும் வேற ஆட்டோ கெடைக்கல...
மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பிச்சேன்...
பேய் படம் பார்த்த எபெக்ட், ஒரே பீதியா இருந்துச்சு. கும்முன்னு இருட்டு வேற, கரண்ட்டும் இல்ல...
என் அடிமனசு திக் திக்ன்னு ஒரு கலக்கு கலக்குச்சு...
திடீர்னு அந்த இருட்டுல லைட்டே போடாம ஒரு பஸ் வந்துச்சு. அது என் ஏரியாவுக்கு போற வண்டி மாதிரி தெரிஞ்சது...
வண்டி ரொம்ப மெதுவா சத்தமில்லாமல் ஊர்ந்து வந்துச்சு...
கை காட்டியும் அது நிக்கல... மெதுவா வந்துட்டே இருந்தது.
பேய் படம் பாத்த effect என் மனசுலேருந்து மறையல...
யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிட்டேன்...
டிரைவர் மாத்திரம் உட்காந்திருந்தார்...
சுத்தி முத்தி பாத்தா, வண்டியில நான் மட்டும்தான். 3வது சீட்ல பம்மி உக்காந்துட்டேன்...
என்ஜின் சத்தம் கேக்கல...
கண்டக்டர், பாசன்ஜர்ஸ் யாரும் இல்ல...
ஆனா வண்டி மெதுவாக ஊர்ந்துகிட்டே இருந்துச்சு...
என் ஹார்ட்டு படக் படக்னு அடிச்சுக் கிட்டே இருக்கு...
நடக்கறதெல்லாம் ஒருவேளை நாம பாத்த பேய் படத்தோட பார்ட் 2 வா இருக்குமோன்னு எனக்கு ரொம்பவே பயம் வர ஆரம்பிச்சிருச்சு...
என்னோட குலதெய்வம், ஊர் தெய்வம், உலக தெய்வம் அத்தனை தெய்வத்தையும் ஒரு நிமிஷம் நினைச்சு...
நான் மட்டும் இன்னைக்கி ராத்திரி முழுசா வீடு போய் சேர்ந்துட்டா கால்நடையா கோயிலுக்கு வந்து மொட்டை அடிக்கிறேன்னு, திருப்பதிக்கு வேண்டிகிட்டே இருக்குறப்ப...
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம்...
டிர்ர்ர்ர்ர்... டுர்டுர்டுர்ர்ர் னு இஞ்சின் ஸ்டார்ட் ஆயிடுச்சு...
பஸ்ஸுக்குள்ள, வெளில ஹெட்லைட் எல்லாமே எரிய ஆரம்பிச்சிடுச்சு...
தட தடன்னு கண்டக்டரும் சுமார் 25 பயணிகளும் வண்டிக்குள்ள ஏறினாங்க...
உள்ள உக்காந்து இருந்த என்னை பாத்து கேட்டாங்க பாருங்க... "எருமை மாடு, எருமை மாடு... வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உசுர குடுத்து தள்ளிகிட்டிருக்கோம்...!!
நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துட்டியே...
அறிவு இருக்கா உனக்குன்னு...?!"


