ShareChat
click to see wallet page
search
அவர்கள் பாவம்தான், வாழ்ந்துவிடும் சாமார்த்தியமில்லாமல்தானே நம் மீது பொறாமைப்படுகிறார்கள், பிரபஞ்சம் அவர்கள் மேல் எந்த கோபமுமில்லாமல் வாழக் கற்றுத்தரும். அவர்கள் கற்றுக்கொள்ளும்வரை பதற்றமாகத்தானே இருப்பார்கள்,பகிர்ந்துண்டு வாழ்கின்ற சூழலில் அவர்கள் இல்லாமல் போனதே காரணம். இருப்பினும் பிரபஞ்ச சமநிலையை அவர்கள் உணர்ந்துவிட்ட பிறகு நம் எதிரே வருகின்ற போது நம்மைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்ப்பார்கள். நிச்சயம் அந்த புன்னகையில் நச்சுத்தன்மை இருக்காதென நம்புகின்றேன்.அதனால்தான் சொல்கின்றேன்,அவர்கள் பாவம்தான். #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்