பிரான்மலை கொடுங்குன்றநாதர் ஆலயம்...
தேவாரம் பாடல் பெற்ற இத்திருத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி ஊருக்கு அருகில் அமைந்துள்ளது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குறிஞ்சி நிலத்தில் அமைந்த கோயில் என்பதால் இத்திருக்கோயிலில் தேன், திணைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த பொருள்களை நெய்வேத்யமாக படைக்கின்றனர். மற்ற சிவன் கோவில்களில் போல் சன்னதியின் எதிரில் நந்தி இக்கோவிலில் கிடையாது
அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடன காட்சி காட்டியதாக ஐதீகம்.
இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் மலையை தூரத்தில் இருந்து கண்ட பொழுது இம்மலையே சிவனாக காட்சி தந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அத்தலத்தில் தன் கால் படக்கூடாது எனக்கூறி தூரத்தில் நின்றே எம் பிரான் மலை என சொல்லி பதிகம் பாடினார். எனவேதான் இத்தலம் எம்பிரான்மலை என பெயர் பெற்று பிற்காலத்தில் பிரான்மலை என மறுவியது.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் ஆட்சி செய்த தலம் இது. இக்கோயிலில் உள்ள பெரிய மணியின் ஒலியானது 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சப்தமாக ஒலிக்கக் கூடியது.
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை 🥹🥹
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏கோவில்