ShareChat
click to see wallet page
search
சர்க்கரை நோயாளிகள் அனைவரும் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரைநோய் வந்துவிட்டால், மறுபடி அதை இல்லாமல் செய்வதோ, முழுமையாக குணப்படுத்துவதோ சாத்தியமில்லை. எந்த மருந்தாலும் அதைச் செய்ய முடியாது. ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மட்டும்தான் சாத்தியம். கொய்யா இலையைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஒரு மூலிகைக் குடிநீராக எடுத்துக்கொள்வதில் சில நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது. இதில் உள்ள துவர்ப்புச் சுவை மற்றும் 'பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்' (Phytonutrients) காரணமாக சில மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. மருத்துவ குணங்கள் இருப்பதாலேயே இதனை சர்க்கரை நோய்க்கான ஒரு முழுமையான மருந்தாகக் கருதி, எடுத்துக்கொள்வது தவறானது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், அன்றாடம் ஆவாரை குடிநீர், மருதம்பட்டை குடிநீர் அல்லது மூலிகை டீ சூப் போன்றவை குடிப்பதைப் போல இதையும் ஒரு துணைப் பொருளாக எடுத்துக்கொள்ளலாமே தவிர, இது மட்டுமே சர்க்கரைநோய்க்கான முழுமையான மருந்தாகாது. மருத்துவ குணங்கள் இருப்பதாலேயே இதனை சர்க்கரை நோய்க்கான ஒரு முழுமையான மருந்தாகக் கருதி, எடுத்துக்கொள்வது தவறானது.Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா? கொய்யா இலையில் உள்ள துவர்ப்புத் தன்மை காரணமாக சர்க்கரையின் அளவு ஓரளவுக்குக் குறைய வாய்ப்புள்ளதே தவிர, இது நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் என்று சொல்ல முடியாது. எனவே, இதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருள்களில் ஒன்றாக மட்டுமே பார்க்க வேண்டும். மற்றபடி, யாராவது இதை மட்டும் குடித்தால் போதும், சர்க்கரை நோய் சரியாகிவிடும் என்று சொன்னால், அது தவறான வழிகாட்டுதலாகவே இருக்கும். கொய்யா இலைக் குடிநீர் என்றில்லை, இதுபோன்ற மருத்துவ அறிவுரைகளை மருத்துவர் அல்லாதவர்கள் உங்களுக்குச் சொல்லும்போது, அவற்றை அப்படியே நம்பிப் பின்பற்ற வேண்டாம். #💊சர்க்கரை நோய் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹
💊சர்க்கரை நோய் - கொய்யா இலை சேர்த்துக் கொதிக்க வைத்த நீர். சர்க்கரைநோயின் தீவிரம் குறைக்குமா? கொய்யா இலை சேர்த்துக் கொதிக்க வைத்த நீர். சர்க்கரைநோயின் தீவிரம் குறைக்குமா? - ShareChat