ShareChat
click to see wallet page
search
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்* "நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது. அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது". (திருப்பாடல் 111: 1-2. 5-6. 9,10c) அனைத்துலகின் ஆண்டவரே! உமது செயல்கள் அனைத்தும் உயர்ந்தவை. உமது உடன்படிக்கையை நீர் என்றென்றும் நினைவில் கொள்கிறீர். உமது திருப்பெயர் தூயது. அஞ்சுதற்கு உரியது. ஆண்டவரே! நீர் எம் வாழ்வில் செய்த அற்புதங்களுக்கு, நான் என்றென்றும் நெஞ்சார நன்றி செலுத்துவேன். இறைவா! இவ்வுலகில் அழிந்து போகும் செல்வத்துக்காக, என் வாழ்வில் முக்கியத்துவம் அளித்த, கடந்த கால தருணங்களுக்காக, நான் மனம் வருந்தி உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறேன். மனமிரங்கி என்னை மன்னித்தருளும் அப்பா. நீர் தரும் நிலைவாழ்வு ஒன்றே, என்றென்றும் நிலையானது என்ற உண்மையை, நான் என்றும் உணர்ந்து, உலக நாட்டங்களில் இருந்து முற்றிலும் விலகி, எப்பொழுதும் உம்மை மட்டுமே நான் இறுகப் பற்றிக்கொள்ள அருள் புரிவீராக. இயேசுவே! இனி நான் உமது வருகையை, தினம் தினம் ஆவலோடு எதிர்கொள்ளக்கூடிய, முன்மதியுள்ள பெண்டிரின் மனநிலையை எனக்குத் தந்தருளும். இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற ...(1) அருள் நிறைந்த....(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*
✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் - ShareChat