அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி…
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்…
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு…
உயிருக்கு உயிரால் உனையிடுவேன்… மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து…
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்…
தூக்கத்தில் மார்பில் வேர்க்கின்ற போது…
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்… பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக…
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்…
தேவதை குளித்த துளிகளை அள்ளித்…
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்… அன்பே அன்பே கொல்லாதே…
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே…
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே… அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே… #ஷேர்
01:23

