பஹ்ரைனில் பிறந்த அலி அல்-அவதி என்ற இளைஞரை உலகம் பெரிதாக அறியாது. ஆனால் அவரிடம் இருந்த ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பரவியது. அந்த புகைப்படத்தில் கஃபாவைச் சுற்றி நீரில் நீந்தும் நபர் வேறு யாருமல்ல அவரே.
1941 ஆம் ஆண்டு மக்காவில் ஒரு வாரம் இடைவிடாது பலத்த மழை பெய்தது. அதன் விளைவாக மஸ்ஜிதுல் ஹராம்
வெள்ளத்தில் மூழ்கியது. தவாஃப் செய்யும் மதாஃப் பகுதி ஒன்றரை மீட்டர் உயரம் வரை நீரால் நிரம்பி, ஹஜருல் அஸ்வத் கல் கூட நீரில் மூழ்கியது.
அந்த சமயத்தில் இளைஞராக இருந்த அலி அல்-அவதி, கஃபாவை நீந்தி தவாஃப் செய்ய முடிவு செய்தார். மழையின் கடைசி நாளில் தம் சகோதரர், நண்பர்கள் மற்றும் ஆசிரியருடன் மஸ்ஜிதுல் ஹராம்
சென்றபோது இந்த எண்ணம் அவருக்கு தோன்றியது.
தண்ணீரால் சூழப்பட்ட கஃபாவின் அற்புதமான காட்சியைப் பார்த்த
அல்-அவதி, வழக்கத்துக்கு மாறாக நீச்சல் அடித்து தவாஃப் செய்ய நினைத்தார். உடனே தமது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் நீரில் இறங்கி, கஃபாவைச் சுற்றி ஏழு முறை நீந்தி தவாஃப் செய்தார்.
அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இன்று வரலாற்றில் அரிய நினைவாக மாறியுள்ளது.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


