#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
[[[[[[[[[[[[[[[[ **** ]]]]]]]]]]]]]]]]
*இஷ்கேஅவ்லியா*
*தொடர்=983*
[[[[[[[[[[[[[[[[ **** ]]]]]]]]]]]]]]]]
🌹🩵🌹🩵🌹🩵🌹🩵🌹🌹🩵🌹🩵🌹🩵🌹🩵🌹
*உடல்ஊனமுற்ற கருப்பு இனத்தைச்சேர்ந்த.. ஒருமாமேதையின் மகத்தான உபதேசம்..!*
🌹🩵🌹🩵🌹🩵🌹🩵🌹🌹🩵🌹🩵🌹🩵🌹🩵🌹
மாமேதை அல்லாமா
عطا ابن ابي رباح
*அதா இப்னு அபீ ரபாஹ்*
ரஹ்மதுல்லாஹி
அலைஹி அவர்கள்
கருப்பினத்தைச்
சேர்ந்தவர்கள்.
இவர்கள்
பிறவியிலேயே
கட்டையாகவும்,
தட்டையான மூக்குடையவராகவும்
ஒரு கண் குருடாக,
ஒரு கை, ஒரு கால் ஊனமுற்றவராக இருந்தார்கள்.
ஆனால் இவர்கள்
ரயீஸுல் முஃபஸ்ஸிரீன்
*இப்னு அப்பாஸ் (ரலி),*
*அப்துல்லாஹிப்னு ஜுபைர்(ரலி),*
*ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)*
ஆகிய பெரும் பெரும்
ஸஹாபாக்களிடம்
குர்ஆன் ஹதீஸ் கலையைக் கற்ற
மாபெரும் மார்க்க மேதையாவார்கள்.
இவர்கள்மொத்தம்
70 ஹஜ்ஜுகள் செய்து இருக்கிறார்கள்.!
இம்மாமேதையிடம்
என்ன கேள்வி கேட்டாலும் உடனே பதில் சொல்லி விடுவார்கள்.
"எல்லோருக்கும் ஈமான்
ஒரே மாதிரிதான் இருக்கும் கூடாது குறையாது என சிலர் சொல்கிறார்களே..?"
என ஒருவர் கேட்டபோது
*அதாஇப்னு அபீரபாஹா(ரஹ்)*
அவர்கள்
وَالَّذِیْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًی وَّاٰتٰىهُمْ تَقْوٰىهُمْ ۟
எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) *அதிகப்படுத்தி,* அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்
என்ற (47:17)
இந்த ஆயத்திற்கு
என்ன பதில்
சொல்வார்கள்.? என்றார்கள்.
رِجَالٌ ۙ لَّا تُلْهِیْهِمْ تِجَارَةٌ وَّلَا بَیْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَاِیْتَآءِ الزَّكٰوةِ یَخَافُوْنَ یَوْمًا تَتَقَلَّبُ فِیْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۟ۗۙ
நல்லவர்களை
வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தடுக்காது என்றால் என்ன? என்று ஒருவர் கேட்டபோது
அல்லாஹ் கடமையாக்கிய எல்லா கடமைகளையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவார்கள் அதில் கவனக்குறைவாக இருக்க மாட்டார்கள். என்று விளக்கம் சொன்னார்கள்.
*முஹம்மத் இப்னு ஸவ்கா* என்பவர்
எனக்கு உபதேசம்
செய்யுங்கள். என்றார்.
"சகோதரரே!
நமது முன்னோர்கள்
திக்ர்செய்தல்,
குர்ஆன் ஓதுதல்,
நன்மையை ஏவி
தீமையைத் தடுத்தல்,
நல்ல பேச்சுக்களைப்
பேசுதல் போன்ற நற்காரிங்களைசெய்து
வீணானகாரியங்களில்
வீண்பேச்சுகளில்
ஈடுபடாமல் வாழ்ந்தார்கள்.!"
ஆனால்
"நீங்களோ, எவ்வளவு
வீண் பேச்சுக்களைப்
பேசுகிறீர்கள்.?"
وَاِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَ ۟ۙ
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். 82:11
كِرَامًا كَاتِبِیْنَ ۟ۙ
(அவர்கள் கிராமன் காத்திபீன் என்ற) கண்ணியம் மிகுந்த எழுத்தாளர்கள். 82:12
یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ ۟
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
82:13
اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில்
இருப்பார்கள்.82:14
وَاِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍ ۟ۚۖ
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
என்ற வசனத்தையும்..
மேலும் "எந்த ஒரு வார்த்தை உங்கள் வாயிலிருந்து வந்தாலும்...
அது உடனே
எழுதப் படுகிறது என்கிற கீழ்க்கண்ட
வசனத்தையும்
நீங்கள்
பார்த்ததில்லையா.?"
اِذْ یَتَلَقَّی الْمُتَلَقِّیٰنِ عَنِ الْیَمِیْنِ
وَعَنِ الشِّمَالِ قَعِیْدٌ ۟
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
50:18
مَا یَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَیْهِ رَقِیْبٌ عَتِیْدٌ ۟
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை
50:19
ஆக
"நாளை மறுமையில்
அஃமால்நாமா எனும்
நன்மைதீமைகளின்
புத்தகத்தை
உங்கள் கையில்
கொடுக்கப்படும் போது.."
"தீன் துன்யாவுக்கு பிரயோஜனமில்லாத
நீங்கள் செய்த பாவகாரியங்கள்
பட்டோலையில் இருக்குமே...?"
அதனால்
"அல்லாஹ்வின்
கடும்கோபத்துக்கு
ஆளாக நேரிடுமே
எனநீங்கள்பயப்பட
வேண்டாமா..?" என்பதாக அறிவுரை கூறி
அனுப்பினார்கள்.
By
மவ்லவி
*U.அபூதாஹிர் ஃபைஜிபாகவி*
அல்மதீனா பள்ளிவாசல்
கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டம்
செல்:9443061063


