Fahmi
ShareChat
click to see wallet page
@fahmieditz
கலிஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) இன்று நாம் பார்க்கவிருப்பது "ஐந்தாவது நேர்வழி நின்ற கலிஃபா" என்று போற்றப்படும் **உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)** அவர்களைப் பற்றி. ஒரு மாபெரும் பேரரசின் அரசராக இருந்தும், அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை உலகிற்கே பாடம். ### நற்காரியங்களும் பாராட்டுக்குரிய விஷயங்களும்: * **பொதுச்சொத்து பாதுகாப்பு:** அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தனது குடும்பத்தினரிடம் இருந்த அநியாயமான சொத்துக்களைப் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்தார். தன் மனைவி அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்களைக் கூட ஏழைகளுக்காக அரசு கருவூலத்திற்குக் கொடுக்கச் சொன்னார். * **நீதி தவறாத ஆட்சி:** ஒருமுறை இரவு நேரத்தில் அரசுப் பணிகளைச் செய்யும்போது அரசு வழங்கிய விளக்கை எரித்தார். பணி முடிந்து சொந்த விஷயங்களைப் பேசத் தொடங்கியதும், அந்த விளக்கை அணைத்துவிட்டு தனது சொந்தப் பணத்தில் வாங்கிய விளக்கை ஏற்றினார். "அரசு விளக்கு மக்களின் வரிப்பணத்தில் எரிவது, அதை எனது தனிப்பட்ட விஷயத்திற்குப் பயன்படுத்தக் கூடாது" என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தார். * **வறுமையற்ற தேசம்:** இவரது இரண்டரை ஆண்டு கால ஆட்சியில், ஸகாத் (தர்மம்) வாங்க ஆளே இல்லாத அளவிற்கு வறுமையை ஒழித்தார். விலங்குகளுக்குக் கூட உணவு கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அவரது வாழ்வு கற்றுத் தரும் பாடம்: **"பொது வாழ்வில் நேர்மை இருந்தால் வறுமையை வேரோடு அழிக்கலாம்."** நேர்மையின் சிகரம் - கலிஃபா உமர் (ரஹ்)!** ⚖️👑 அரசுப் பதவி என்பது அதிகாரம் செய்வதற்கு அல்ல, அது ஒரு பொறுப்பு என்பதை வாழ்ந்து காட்டியவர் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்). ஒரு நாட்டின் அரசர், இருட்டில் அமர்ந்து தன் சொந்தப் பணத்தில் விளக்கேற்றித் தனிப்பட்ட வேலைகளைச் செய்தாரென்றால், அந்த நேர்மை இன்று நமக்கு எவ்வளவு அவசியம்? பொதுச்சொத்தைப் பாதுகாப்போம்! நேர்மையுடன் வாழ்வோம்! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - 4- (  4- ( - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *குடும்ப அமைப்பின் அவசியம்* (4) *விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படை* குடும்பம் என்ற அமைப்பு இருப்பதால் தான் மனித குலம் பெருகியிருக்கிறது. மனித குலம் பெருகியிருப்பதால் தான், மனித வளங்களும் முன்னேற்றங்களும் வளர்ந்திருக்கின்றன. மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டிற்கு ஆபத்து என்று சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தால் தான் நாம் இன்று அனுபவிக்கின்ற பல்வேறு நவீன வசதிகளைப் பெற்றிருக்கிறோம். பேருந்து என்ற கனரக வாகனம் மக்கள் தொகை பெருக்கத்தினால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதன் தனக்கு இலாபம் கிடைப்பதற்காகத் தான் கண்டுபிடிக்கிறான். ஊருக்கு பத்துப் பேர் மட்டும் இருந்தால் எப்படி நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்க முடியும். பேருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்குத் தோன்றியிருக்காது. அதே போன்று இப்போது மைக்கில் பேசுகிறோம் எனில் அதிகமான மக்கள் தொகை இருப்பதால் தான். பத்துப் பேர் மட்டும் இருந்தால் மைக் வைத்துப் பேசுவதற்கு எந்தத் தேவையும் ஏற்படாது. அப்படி தேவைப்படவில்லை என்ற போது மைக்கைக் கண்டுபிடிப்பதால் என்ன இலாபம்? இந்தப் பேச்சை பதிவு செய்யத் தேவையில்லை. அதை ஒளிபரப்பத் தேவையில்லை. இப்படியே ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். எனவே இன்றைய உலகில் மனிதன் பயன்படுத்துகிற அனைத்து வசதிகளும் குடும்ப அமைப்பு என்று இருப்பதால் தான் கிடைத்திருக்கிறது. குடும்ப அமைப்பு என்று இல்லையென்றால் இன்று நாம் பயன்படுத்துகிற மனித வளம், அறிவியல் வளர்ச்சி பெருகியிருக்காது. *அன்பும் தியாகமும்* குடும்பத்தில் மற்ற உறவு முறைகளை விலக்கிவிட்டு ஆராய்ந்தால், கணவன், மனைவி என்ற கட்டுப்பாடுகளில் உடல் ரீதியான தொடர்புகள் ஏற்படுவதால், அவர்களுக்கு மத்தியில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. மற்றதை விட உடல் ரீதியாக ஒளிவு மறைவு இல்லாததால் ஒருவர் மீது மற்றவர் அதிமான ஈர்ப்புடையவராகி விடுகிறார்கள். மனைவிக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கணவனும் அந்தப் பிரச்சனையைக் களைவதில் முனைப்பு காட்டுகிறான். அதேபோன்று கணவனுக்கு எதாவது உடல் நலக்குறைவு எனில் மனைவி கண்விழித்து அவனைக் காக்கிறாள். இதற்கெல்லாம் காரணம் குடும்பம் என்ற அமைப்பு இருப்பதால் தான். குடும்பம் இல்லாதவர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாகத் தான் இருப்பார்கள். ஆனால் குடும்பம் என்ற அமைப்பில் உள்ளவர்கள் அனைவருமே தியாகம் செய்பவர்களாக இருப்பார்கள். அண்ணனுக்கு ஒரு தேவையிருந்தும், அதை தம்பிக்காக விட்டுக் கொடுப்பார். இது ஒரு தியாகம் தான். மனைவி என்பவள் நன்றாகச் சமைத்து, கணவனுக்கு வயிறு முட்டக் கொடுத்துவிட்டு, தான் சாப்பிட்டதைப் போன்று நடித்துக் கொள்வாள். தாய் தான் இந்த தியாகத்தில் முதல் இடம் வகிப்பாள். தான் பசியோடு இருந்தாலும் தன் பிள்ளையை நன்றாகக் கவனிப்பாள். இப்படி ஒழுங்கான குடும்பமாக இருந்தால் தாய்க்குத் தந்தையும், தந்தைக்குப் பிள்ளையும், பிள்ளைக்குப் பெற்றோர்களும், மனைவிக்குக் கணவனும், கணவனுக்கு மனைவியும், அண்ணனுக்குத் தம்பியும், தம்பிக்கு அண்ணனும் என ஒருவருக்கொருவர் தனது தேவைகளையும் விருப்பங்களையும் பிறருக்காக விட்டுக் கொடுத்து, அனுசரித்து, தியாகம் செய்வதைப் பார்க்க முடிகிறது. சிலர் இப்படி குடும்பத்திற்காகச் செலவு செய்வதையும் சுயநலம் என்பார்கள். இது தவறான விமர்சனமாகும். ஒருவன் குடும்பத்திற்கும் சொந்த பந்தங்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்காமல் தான் மட்டும் வைத்துக் கொண்டால் தான் சுயநலம் என்று கூறலாம். தான் சார்ந்த குடும்பத்தினருக்குச் செலவு செய்தால் அதை சுயநலம் என்று விமர்சிப்பது நியாயமில்லை. இஸ்லாம் கூறும் குடும்ப அமைப்பில் ஒவ்வொருவனும் தன்னுடைய உறவினர்களுக்காகச் செலவு செய்ய ஆரம்பித்தாலே உலகில் பிச்சைக்காரர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். எனவே இதைச் சுயநலம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமாகும். ஒருவன் இலட்சாதிபதியாக, கோடீஸ்வரனாக ஆவதற்கு முயற்சி செய்கிறான் எனில் சுயநலத்திற்காக இல்லை. தனது மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் போன்ற சொந்த பந்தங்களுக்காகவும் தான் உழைக்கிறான். எனவே ஒருசில கஞ்சர்களைத் தவிர மற்ற அனைவருமே குடும்ப அமைப்பிற்காகத் தான் உழைக்கிறார்கள், வாழ்கிறார்கள். இதை சுயநலம் என்று சொல்லக்கூடாது. சுய தொழில்கள் அல்லது பிறரிடம் கூலி வேலைகள் செய்வதும் இன்னும் சிலர் தனது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி இளமையைத் தொலைத்துக் கொண்டு வெளிநாடுகளில் சிரமப்படுவதும் தனது குடும்பமாக இருக்கிற தாய், தந்தை மற்றும் மனைவி மக்களுக்குத் தான் என்பதை நாம் உணர வேண்டும். இன்னும் சொல்வதாக இருப்பின், வெளிநாட்டிற்குச் சென்று கஷ்டப்படுவதே தியாகம் தான். ஒருவன் தன் வயிற்றுக்கு மட்டும் சாப்பிடுவதற்காக உழைக்க வேண்டுமெனில், உள்நாட்டில் மாதத்தில் பத்து நாட்கள் வேலை பார்த்தால் போதும். வெளிநாட்டைப் பொறுத்தளவுக்கு மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் உழைத்தாலே போதுமானதாகும். ஆனால் மாதம் முழுவதும் உழைக்கக் காரணம், நம்முடைய தாய், தந்தையர்களும் மனைவி மக்களும், குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அதற்கு மேலும் அல்லாஹ் நமக்குத் தந்தால் உற்றார் உறவினர்களுக்கும் ஊருக்கும் சமூகத்திற்கும் உலகத்திற்கும் உதவுவதற்குத் தான். ஆக, குடும்பம் என்ற அமைப்பை விட்டு வெளியேறிவனுக்கு சுயநலத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது. அவர்களது எண்ணங்களில், எனது உடல், எனது சுகம், எனது ஆசைகளை நிறைவேற்றும் அளவுக்குக் கஷ்டப்படுவது என்பது மட்டுமே நிறைந்திருக்கும். அதனால் தான் இத்தகையவர்கள் எந்த தியாகத்தையும் செய்யாதவர்களாகவும் சமூக அக்கறை இல்லாதவர்களாகவும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். சமூக ரீதியாகக் கிடைக்கிற நன்மைகள் போக, கணவன் மனைவி என்று வாழும் குடும்ப அமைப்பில் அவ்விருவரும் சரியாகப் புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் குடும்பவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது ஒழுங்கான இல்லற வாழ்க்கை இருந்தால் அது நிச்சயமாக சரியான பலனைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. தாம்பத்தியத்தின் நன்மைகள்
*பெருநாள் ஆடைகளை தெரிவு செய்யும் போது மார்க்கம் கூறும் ஒழுங்கை கடைபிடியுங்கள் 🩵✨* பெண்மியம் பேசும் அழகிய அழியா காவியம்! *அவளுக்கும் அவள் ஆடையணிகளனுக்கும் இடையிலான பந்தமே! ♥️✨* பெண்களே, உங்கள் ஆடை உங்களை அடையாளப்படுத்தவல்ல, உன்னை மறைப்பதாக இருக்க வேண்டும்,.. *உன் பர்தாவை சரி செய்துக்கொள் , முடி தெரியா வண்ணம் 🖤✨* உன் மார்பகம் தெரியாமல் பெரிதாய் முன்புறம் மறைத்துக்கொள்! *உன் கழுத்து தெரிய உன் முடியை உயர்த்திகட்டி அணிவதற்கு என்ன பெயர் வைக்கலாம் 💔😢* முகமூடி யாம், அதன் இடை கருவிழி வேல் போலல்லவா பிறரை ஈர்க்கிறது🤥🙃 ஏன் சகோதரிகளே! *ஆடைகளை இறுக்கமாக அணிய வேண்டாம்* உடல் வடிவம் தெரியாமல் பெரிதாய் அணியுங்கள் ♥️✨ `மாறுங்கள், உங்கள் மனைவியர் பெண்மக்கள், தாய்மார் இவர்களுக்கு கூறுங்கள்,`📌 எத்தணை கண்கள் பாவத்தை சுமக்க, பல வாய்கள் பாவத்தை பேச நீங்கள் காரணமாகி விட வேண்டாம்! *அன்னை பாத்திமாவின் தோட்டத்தில் உனக்கு ஒரு இடம் வேண்டாமா? 🥹✨* சிறந்ததை அணியுங்கள்! அல்லாஹ் மறுமையில் கண்ணியப்படுத்துவான் நிச்சயம், பிழைக்கு தண்டனை உண்டு, பயந்து கொள்ளுங்கள், #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் வீட்டு பெண்களுக்கு கூறுங்கள்...
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ShareChat
🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹 *திருக்குர்ஆனில் ஆண்பாலான ஆயத்துகளே உள்ளன பெண்பாலான ஆயத்துக்கள் இல்லையே...என* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *நபியவர்களிடம் கேட்கப்பட்ட அழகானகேள்விக்கு...* *இறைவன்இறக்கிய இனியவசனம்..!* 🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹🌹🩷🌹 ஒருநாள் அகிலத்தின் பேரருள் *அண்ணல்நபி ஸல்லல்லாஹூ* அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது... திருமறை குர்ஆன் ஷரீஃபில் எல்லா ஆயத்துக்களும் ஆண்களைக் குறித்தே சொல்லக் கூடியதாகவே இருக்கிறது. உதாரணமாக.. يا إيها الذين امنوا "ஈமான் கொண்டவர்களே!" என்று அல்லாஹ் கூறுகிறான். "இது ஆண் பெண் எல்லோரையும் குறிக்கிறது. மேலும் அரபி இலக்கணப்படி இது ஆண்பாலுக்குரியது.." "அல்லாஹ் பெண்களை மட்டும் குறித்து சொல்வதில்லையே ஏன்...?" "அல்லாஹ் ஆண்களைத் தான் அதிகமாக நேசிக்கிறானோ..?" மேலும் "நாம் செய்யும் வணக்கத்தை அல்லாஹ் ஏற்காமல் போய்விடுவானோ?" என்றகவலையில் பலவிதமான கருத்துக்களைப்பரிமாறி பேசிக்கொண்டனர். அன்றைய நாள் நபியவர்களுக்கு *அன்னைஉம்முசலமா* ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் தங்கும்முறை *அண்ணல்நபி ஸல்லல்லாஹூ* அலைஹிவஸல்லம் அவர்களுக்கு உணவு பரிமாறும் போது *அன்னைஉம்முசலமா* ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் "யாரசூலல்லாஹ்! குர்ஆனில் அனைத்து ஆயத்துக்களும் ஆண்களைக் குறிக்கின்ற ஆண்பாலாகவே இருக்கிறதே.." "பெண்களை மட்டும் குறித்து வரக் கூடிய பிரத்தியேகமான வார்த்தைகள் இல்லையே ஏன்..?" என்று கேட்டதும் *"மாநபி ஸல்லல்லாஹூ* அலைஹி வஸல்லம் அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தவர்களாக." "உம்முசலமா! நீ ஓர் அழகான கேள்வியைக் கேட்டு இருக்கிறாய்..!" "அல்லாஹ்வுடைய வேதம் சம்பந்தமாக நீ கேட்டதால் இதற்கு அல்லாஹ் தான் பதில் சொல்ல வேண்டும்." என சொன்னார்கள். அப்போது தான் அல்லாஹ் கீழ்கண்ட ஆயத்தை இறக்கினான்... اِنَّ الْمُسْلِمِیْنَ وَالْمُسْلِمٰتِ நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; وَالْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; وَالْقٰنِتِیْنَ وَالْقٰنِتٰتِ இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; وَالصّٰدِقِیْنَ وَالصّٰدِقٰتِ உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; وَالصّٰبِرِیْنَ وَالصّٰبِرٰتِ பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; وَالْخٰشِعِیْنَ وَالْخٰشِعٰتِ *(அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்;* وَالْمُتَصَدِّقِیْنَ وَالْمُتَصَدِّقٰتِ தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; وَالصَّآىِٕمِیْنَ وَالصّٰٓىِٕمٰتِ நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; وَالْحٰفِظِیْنَ فُرُوْجَهُمْ தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; وَالْحٰفِظٰتِ وَالذّٰكِرِیْنَ اللّٰهَ كَثِیْرًا وَّالذّٰكِرٰتِ ۙ *அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம்செய்யும் ஆண்களும்,பெண்களும்;* اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِیْمًا ۟ ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் (அல்குர்ஆன் 33:35)
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - The Last And Final Prophet Of ALLAH} HAZRAT MUHAMMAD Said இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்களின் பொன்மொழி شنامذے چ دسمین یرخآ ےوسٹلا ٢٠٢٦ييربا ٢٠ نيسشالا Monday 20 April 20261 02 Dhul Qadah al-Haram 1447 قلاوذ ٠٢ I" zel> ARABIC ەللا لوسر لاق هلوم ةريره يبأ نع ایَنْغَأ ُْنُكَت َکَلُةَللا َمَسَقاَمِب َضْراَو రాడ] (٢٣٥ يذمرت ) TAMIL அல்லாஹ் உனக்கு அளித்தவற்றில் திருப்தியுடன்  அப்பொழுது நீ மனிதர்களில் மிகப்பெரிய இரு, செல்வந்தனாக இருப்பாய். URDU ءوہر یضاررپ ساےہایسکاسطع ھچوج ںیسہت ندسٹلا گؤابح نّبرادلامەدایز ےبس ںیسم ںوگول متوت ENGLSH Be Content With What Allah Has Given You; And You Will Become The Richest Among People. The Last And Final Prophet Of ALLAH} HAZRAT MUHAMMAD Said இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்களின் பொன்மொழி شنامذے چ دسمین یرخآ ےوسٹلا ٢٠٢٦ييربا ٢٠ نيسشالا Monday 20 April 20261 02 Dhul Qadah al-Haram 1447 قلاوذ ٠٢ I" zel> ARABIC ەللا لوسر لاق هلوم ةريره يبأ نع ایَنْغَأ ُْنُكَت َکَلُةَللا َمَسَقاَمِب َضْراَو రాడ] (٢٣٥ يذمرت ) TAMIL அல்லாஹ் உனக்கு அளித்தவற்றில் திருப்தியுடன்  அப்பொழுது நீ மனிதர்களில் மிகப்பெரிய இரு, செல்வந்தனாக இருப்பாய். URDU ءوہر یضاررپ ساےہایسکاسطع ھچوج ںیسہت ندسٹلا گؤابح نّبرادلامەدایز ےبس ںیسم ںوگول متوت ENGLSH Be Content With What Allah Has Given You; And You Will Become The Richest Among People. - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் தூங்கும் முன் தூங்கும் முன் اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314 ------------------- வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின் اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ அல்லாஹும்ம ஃகலக்(த்)த நஃப்ஸீ, வஅந்(த்)த தவப்ஃபாஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ஃபஹ்ஃபள்ஹா, வஇன் அமத்தஹா ஃபஃக்ஃபிர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆஃபியா பொருள்: இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் நான் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 4887 ------------------- தூங்குவதற்கு முன் ஆய(த்)துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக் கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா ஃபிஸ்ஸமாவா(த்)தி வமா ஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபவு இந்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபைன ஐதீஹிம் வமா ஃகல்ஃபஹும் வலாய�
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அஃபூவு ல(க்)க பினிஃமதி(க்)க அலய்ய, வஅஃபூவு ல(க்)க பிதன்பீ ஃபக்ஃபிர்லீஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த பொருள்: இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306.
_புரிதல் அற்ற உறவுகளுடன்_ _உரையாடல் வைத்துக் கொள்ளாதீர்கள்_ 😐 _மேலும் உரையாடல் வேண்டும் எனில்_ _அளவு கடந்த உரிமைகள்_ _எடுத்துக் கொள்ளாதீர்கள்_ 🚧 _அப்படி எடுத்துக் கொண்டால்_ _நீங்கள் மனதில் பட்டதையே_ _கொட்டிக் கொள்வீர்கள்_ 💧 _அவர்கள் மனதில் பட்டதையே_ _நினைத்துக் கொள்வார்கள்_ 🥀 *உன்னுடைய நோக்கம் சுத்தமானதெனில்* *பிறரின் புரிதல்களை கொண்டு* *கலங்கி விடாதே* 🤍 *நபி ﷺ அவர்கள் கூறினார்கள்* *"செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணியதே கிடைக்கும்."* _- புகாரி, முஸ்லிம்_ *உன்னுடைய நிய்யத் எது என்பதை அல்லாஹ் அறிந்தவன்* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் _அல்ஹம்துலில்லாஹ்_
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - இரு பக்கமும் கூர்மையான கத்தியை பிடிக்க கவனமாக வேண்டும் 09 அதுபோல எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும் ! ٦٥ L F 1 இரு பக்கமும் கூர்மையான கத்தியை பிடிக்க கவனமாக வேண்டும் 09 அதுபோல எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும் ! ٦٥ L F 1 - ShareChat
*உன்னுடைய இறைவன்..* *உன் சுவாசத்தின் சத்தத்தையும் செவியுறுகிறான்..* *உன்னை மறந்து விட்டான் என்று எண்ணுகிறாயா?...* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *பொறுமையாக இரு.. உன்னுடைய நேரம் இன்னும் வரவில்லை..*
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ^০| '೬ದ್ವಿ) ಎಛ اّمّنِإو ಜಟಟ; ತಿತ್ತ ه اًَّیِسَن َكَّبَر َناَك اَمَوول ^০| '೬ದ್ವಿ) ಎಛ اّمّنِإو ಜಟಟ; ತಿತ್ತ ه اًَّیِسَن َكَّبَر َناَك اَمَوول - ShareChat
*இது சாதாரணமாக ஒரு வாசகமல்ல, நம்முடைய வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஓர் அழைப்பு..* குர்ஆன் என்பது ஒரு நூல் மட்டும் இல்லை – அது நம்மை சுவர்க்கத்திற்கு அழைத்து செல்லும் ஒரு வழிகாட்டும் ஒளி. ஒவ்வொரு ஹுரூஃபும் (எழுத்துக்களும்) நமக்கு நன்மையைத் தரும், ஒவ்வொரு ஓதுதலும் நம்மை இறைவனுக்கு அருகாமையாக்கும். இந்த உலகத்தில் சிந்திக்க வழிகாட்டும் இந்த வார்த்தைகள், மறுமை நாளில் நம்மை காப்பாற்றி பரிந்துரை செய்யும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். 🤍 *மனதில் வைத்துக்கொள்ளுங்கள்,* *நாம் அனைவரும் ஒருநாள் அல்லாஹ்வுக்கு முன் நிற்கப்போகிறோம். அந்த நேரத்தில் நம்முடைய நண்பனாக நம்மைக் காப்பாற்ற வரக்கூடியது – குர்ஆன் தான்.* அதனால் இன்று ஒரு பக்கம் ஓத , மனனம் செய்ய ஆரம்பிக்கலாம். தினமும் ஓர் அத்தியாயம், அல்லது சில வசனங்களேனும்… அதிலிருந்து நம்மை நாம் மாற்றிக் கொள்ளலாம். #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - றைத்தூதர் =) அவர்கள் கூறினார்கள் குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம் ) பரிந்துரை செய்யும் ஸஹீஹ் முஸ்லிம் 1470 றைத்தூதர் =) அவர்கள் கூறினார்கள் குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம் ) பரிந்துரை செய்யும் ஸஹீஹ் முஸ்லிம் 1470 - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *மாநபியின்* *மணிமொழிகள்* 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 *"ஒருவர் மாநபி ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். அதற்கு மாநபி ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்கள், 'கோபத்தைக் கைவிடு' என்று அருளினார்கள். அவர் 'அறிவுரை கூறுங்கள்' என பலமுறை கேட்டபோதும்,* *மாநபி* *ஸெய்யதினா* *முஹம்மது* *முஸ்தபா* *ரஸுலுல்லாஹி* *ஸல்லல்லாஹ் *அலைஹிவஸல்லம்* *அன்னவர்கள்* ' *கோபத்தைக்* *கைவிடு* ' *என்றே* *அருளினார்கள்* ! 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 அறிவிப்பளர் :- _ஸெய்யதினா_ _அபூ_ _ஹுரைரா_ _ரலிஅல்லாஹு_ _தாலா_ _அன்ஹு_ _அவர்கள்_ ✨✨✨✨✨✨✨✨ *நூல்:- புகாரி 6116*