Fahmi
ShareChat
click to see wallet page
@fahmieditz
#👌அருமையான ஸ்டேட்டஸ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *தினம் ஒரு நபிமொழி* *தெரிந்து கொள்வோம்* *இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'* *நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு, 'அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வளத்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த' என்று ஓதிக்கொள்.* *(பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பி வைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன். (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில் நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப்பேச்சாக ஆக்கிக்கொள்.* *இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:* *'நான் இவற்றைத் திரும்ப ஓதிக்காட்டுகிறேன்' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். ('நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்' என்பதற்கு பதிலாக) 'நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்' என்று நான் சொல்லிவிட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; 'நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்' என்று சொல்' என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள்.* *நூல் : புகாரி 6311*
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் *தூய்மை பற்றி இஸ்லாம்* (2) *குளித்தல்* உடலில் உள்ள அசுத்தங்களை தூய்மை செய்யும் முறையில் மிக முக்கியமான ஒன்று தான் குளிப்பதாகும். அது சாதாரண குளிப்பாக இருந்தாலும், கடமையான குளிப்பாக இருந்தாலும் சரியே ! *குளிப்பை நிறைவேற்றிய பிறகே தொழுகை :* *நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.* அல்குர்ஆன் :5:6 *குளிப்பு கடமையாக இருக்கும் போது கடைபிடிக்க வேண்டியது* குளிப்பு கடமையாக இருக்கும் போது உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் விரும்பினால் உளுச் செய்வது சிறந்ததாகும். *ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:* *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்.* நூல் : முஸ்லிம் : 513 *அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள், “எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக இருக்கும் நிலையில் (குளிக்காமல்) உறங்கலாமா?” என கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்; உளூ செய்துவிட்டு (உறங்கலாம்.)” என்று பதிலளித்தார்கள்.* நூல் : புகாரி :289 *அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ” உளூ செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங் குங்கள்” என்றார்கள்.* நூல் : புகாரி : 290 *கடமையான குளிப்பின் போது :* *மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இருகைகளையும் கழுவினார்கள்; பிறகு தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து பிறகு அதை (நீரால்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (ச் சிந்தி)னார்கள். பிறகு தம் முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைத்துக்கொள்ள) துண்டு கொடுக்கப் பட்டது. ஆனால் அதன் மூலம் அவர்கள் துடைத்துக் கொள்ளவில்லை.* நூல் : புகாரி : 259 *கை நன்றாகச் சுத்தமாவதற்காகக் கையை தேய்த்துக் கழுவுதல்:* *மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையானக் குளியலைக்) குளிக்கும்போது (முதரில்) தமது மர்மஸ்தலத்தை கையினால் கழுவினார்கள். பிறகு கையைத் தேய்த்து கழுவினார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். குளித்து முடித்து (இறுதியில்) தம்மிரு கால்களையும் கழுவினார்கள்.* நூல் : புகாரி : 260 *ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியரின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப் பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.* *அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், “அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும்” என்று (மீண்டும்) சொன்னார்கள். உடனே நான், “இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்’ என்று -பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச்- சொன்னேன்.* *மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், “தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!” என்றார்கள்.* நூல் : முஸ்லிம் 552 தூய்மை இன்ஷா அல்லாஹ் தொடரும் ….
எங்களுக்கு பாடங்களையும் வாழ்க்கையையும் மிக அற்புதமாகவும் அழகாகவும் லேசான முறையிலும், அனைவருக்கும் விளங்கும் விதமாக கற்றுத் தந்த எங்கள் ஆசிரிய தந்தை....... #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் யா அல்லாஹ்!!! அன்னாரது பாவங்களை மன்னித்து, மறுவுலக வாழ்க்கையை சிறப்பாக்கி தருவாயாக..... ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - வஃபாத் அறிவிப்பு மலேசியா மதரஸா தஹ்ஃபீஸ் அல் ஹீரா தலைமை உஸ்தாத் ஜைனுல் உலூம்  பண்டாரவாடை கல்லூரிஜின்மிஅன் அரபிக் முதல்வர் சசிழனதந்தை( ாள் எங்கள் ஆச َنوعِجاَرِهْيْلِإ اَّنِإَو هِلِلاَّنِإ மௌலானா மௌலவி ஹாஃபிழ் காரி நூருத்தீன் அன்வாரி ஹழ்ரத் அவர்கள் இன்று 26.4.2026 இறைவன் அழைப்பை ஏற்று கொண்டார்கள் அன்னாரின் மக்ஃபிரத்திற்காகவும் மறுமை  வாழ்வு சிறப்பாக வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்  ஜைனகள் பேரவை 0" உலூம் அரபிக்கல்லூரி ஜாபஆ ஜைனுல் தஞ்சாவர் . பண்டாரவாடை , வஃபாத் அறிவிப்பு மலேசியா மதரஸா தஹ்ஃபீஸ் அல் ஹீரா தலைமை உஸ்தாத் ஜைனுல் உலூம்  பண்டாரவாடை கல்லூரிஜின்மிஅன் அரபிக் முதல்வர் சசிழனதந்தை( ாள் எங்கள் ஆச َنوعِجاَرِهْيْلِإ اَّنِإَو هِلِلاَّنِإ மௌலானா மௌலவி ஹாஃபிழ் காரி நூருத்தீன் அன்வாரி ஹழ்ரத் அவர்கள் இன்று 26.4.2026 இறைவன் அழைப்பை ஏற்று கொண்டார்கள் அன்னாரின் மக்ஃபிரத்திற்காகவும் மறுமை  வாழ்வு சிறப்பாக வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்  ஜைனகள் பேரவை 0" உலூம் அரபிக்கல்லூரி ஜாபஆ ஜைனுல் தஞ்சாவர் . பண்டாரவாடை , - ShareChat
🌹*கணவன்–மனைவி இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பது எப்படி?*🌹 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் > *_1. கணவன் மனைவிக்கு மத்தியில் உள்ள உரிமைகள் பேணப்பட வேண்டும்:_* கணவன்-மனைவி இடையே பிரச்சினைகள் உருவாவதற்கும், அந்தப் பிரச்சினைகள் மிகவும் மோசமான நிலைக்கு உயர்வதற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று, *_ஒருவருக்கொருவர் உள்ள உரிமைகள் குறித்து போதிய அறிவு இல்லாததுதான்_* என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாம் இந்த உரிமைகளை தெளிவாக விளக்குகிறது; மேலும், கணவன் மனைவி இருவரும் அந்த உரிமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கட்டாயப்படுத்தியும் உள்ளது. *وَلَهُنَّ مِثْلُ الَّذِىْ عَلَيْهِنَّ بِالْمَعْرُوْفِ‌* _கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. (அல்குர்ஆன் : 2:228)_ இந்த வசனம் கணவன் மனைவி இருவருக்கும் மத்தியில் உள்ள உரிமைகளை நிறைவேற்றுவது கடமை என்று சுட்டிக் காட்டுகிறது. *_இந்த உரிமையை நிறைவேற்றுவதன் மூலமாக குடும்ப வாழ்க்கையில் நிம்மதி பெற முடியும்._*
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - 0 n 9~65 {me 0 n 9~65 {me - ShareChat
*நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.(85:10)* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ِتنِمْؤُمَلَأَو َنیِنِمْؤُمَلا ْاْوْنَتَف َنيِذَلاَّنِإ 5_ ِقیَِرَحَلا ُباَذَعُّمُهَلَوَرَذَهَج ُباَذَعْمُهَلَف ِتنِمْؤُمَلَأَو َنیِنِمْؤُمَلا ْاْوْنَتَف َنيِذَلاَّنِإ 5_ ِقیَِرَحَلا ُباَذَعُّمُهَلَوَرَذَهَج ُباَذَعْمُهَلَف - ShareChat
*யா அல்லாஹ்!* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *எங்கள் பாவங்களையும் எங்கள் பெற்றோர், எங்கள் ஆசிரியர்கள், எங்கள் குடும்பத்தார் எங்கள் நண்பர்கள் மற்றும் அனைத்து முஸ்லிமான ஆண்கள் பெண்கள் பாவங்களையும் மன்னிப்பாயாக!* *யா ரஹ்மான்! உனக்கு செய்யவேண்டிய கடமைகளில் நாங்கள் செய்த அலட்சியத்திற்காக எங்களை தண்டித்து விடாதே.!* *அவைகளை நாங்கள் செய்யாமல் விட்டதால் எங்களுக்குத்தான் நஷ்டமே தவிர உனக்கல்ல.* *அந்தத்தவறும் வேண்டுமென்றே உனக்கு மாறு செய்ய வேண்டும் என்ற திமிரினால் அல்ல. மாறாக எங்கள் நஃப்ஸை கட்டுப்படுத்த முடியாததால் ஏற்பட்ட தவறு..!* *யா அல்லாஹ்! அந்த தவறை மன்னித்து எங்கள் நஃப்ஸை கட்டுப்படுத்தும் சக்தியைக் கொடு!* *என்றென்றும் உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அடியானாக எங்களை வாழ வை.* *வாழ்கின்ற காலமெல்லாம் நல்ல உடல் நலத்துடன் உன்னை வணங்கும் பாக்கியத்தைக் கொடு!* *எங்களை அச்சுறுத்தும் நோய்களிலிருந்து எங்களைக் காப்பாற்று!* *யா அல்லாஹ்! இவ்வுலக வாழ்க்கையை எங்கள் கவலைகளில் பெரிதாகவும்... எங்களது அறிவின் இறுதியாகவும்... எங்கள் ஆசைகளின் கடைசியாகவும்... எங்களை நரகத்தின் பால் சேர்ப்பதாகவும் ஆக்கிவிடாதே!* *எங்களின் மீது இரக்கப்படாத.. உனக்கு அஞ்சாதவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே!* *உன் கருணையினால் இந்த துஆவை ஏற்றுக் கொள்வாயாக!* *ஆமீன்.. ஆமீன்.. யா ரப்பல் ஆலமீன்..!*
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - انبونذب انيلع طلستال مهللا انمحريالو كفاخيالز نیما انبونذب انيلع طلستال مهللا انمحريالو كفاخيالز نیما - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ُهُثاَگَرَبو 4^>)9 le ;_LJ| ِہللا ೭ 6u8551601 , சுமக்காதே 866068606[ அது அல்லாஹ்வுக்குரியது மேலும் வாழ்வாதாரத்தைப் பற்றிய கவலையை சுமக்காதே அது அல்லாஹ்விடமிருந்து வரக் கூடியது எதிர்காலத்தின் கவலைகளை சுமக்காதே அது அல்லாஹ்வின் கையிலுள்ளது சுமந்து செல் அதுதான் ஒரேயொரு கவலையை அல்லாஹ்வின்திருப்பொருத்தத்தை பெறுவது எப்படி என 100 அல்லாஹ் நம்மை பொருந்திக்கொள்வனாக @ ُهُثاَگَرَبو 4^>)9 le ;_LJ| ِہللا ೭ 6u8551601 , சுமக்காதே 866068606[ அது அல்லாஹ்வுக்குரியது மேலும் வாழ்வாதாரத்தைப் பற்றிய கவலையை சுமக்காதே அது அல்லாஹ்விடமிருந்து வரக் கூடியது எதிர்காலத்தின் கவலைகளை சுமக்காதே அது அல்லாஹ்வின் கையிலுள்ளது சுமந்து செல் அதுதான் ஒரேயொரு கவலையை அல்லாஹ்வின்திருப்பொருத்தத்தை பெறுவது எப்படி என 100 அல்லாஹ் நம்மை பொருந்திக்கொள்வனாக @ - ShareChat
கலிஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) இன்று நாம் பார்க்கவிருப்பது "ஐந்தாவது நேர்வழி நின்ற கலிஃபா" என்று போற்றப்படும் **உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)** அவர்களைப் பற்றி. ஒரு மாபெரும் பேரரசின் அரசராக இருந்தும், அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை உலகிற்கே பாடம். ### நற்காரியங்களும் பாராட்டுக்குரிய விஷயங்களும்: * **பொதுச்சொத்து பாதுகாப்பு:** அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தனது குடும்பத்தினரிடம் இருந்த அநியாயமான சொத்துக்களைப் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்தார். தன் மனைவி அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்களைக் கூட ஏழைகளுக்காக அரசு கருவூலத்திற்குக் கொடுக்கச் சொன்னார். * **நீதி தவறாத ஆட்சி:** ஒருமுறை இரவு நேரத்தில் அரசுப் பணிகளைச் செய்யும்போது அரசு வழங்கிய விளக்கை எரித்தார். பணி முடிந்து சொந்த விஷயங்களைப் பேசத் தொடங்கியதும், அந்த விளக்கை அணைத்துவிட்டு தனது சொந்தப் பணத்தில் வாங்கிய விளக்கை ஏற்றினார். "அரசு விளக்கு மக்களின் வரிப்பணத்தில் எரிவது, அதை எனது தனிப்பட்ட விஷயத்திற்குப் பயன்படுத்தக் கூடாது" என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தார். * **வறுமையற்ற தேசம்:** இவரது இரண்டரை ஆண்டு கால ஆட்சியில், ஸகாத் (தர்மம்) வாங்க ஆளே இல்லாத அளவிற்கு வறுமையை ஒழித்தார். விலங்குகளுக்குக் கூட உணவு கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அவரது வாழ்வு கற்றுத் தரும் பாடம்: **"பொது வாழ்வில் நேர்மை இருந்தால் வறுமையை வேரோடு அழிக்கலாம்."** நேர்மையின் சிகரம் - கலிஃபா உமர் (ரஹ்)!** ⚖️👑 அரசுப் பதவி என்பது அதிகாரம் செய்வதற்கு அல்ல, அது ஒரு பொறுப்பு என்பதை வாழ்ந்து காட்டியவர் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்). ஒரு நாட்டின் அரசர், இருட்டில் அமர்ந்து தன் சொந்தப் பணத்தில் விளக்கேற்றித் தனிப்பட்ட வேலைகளைச் செய்தாரென்றால், அந்த நேர்மை இன்று நமக்கு எவ்வளவு அவசியம்? பொதுச்சொத்தைப் பாதுகாப்போம்! நேர்மையுடன் வாழ்வோம்! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - 4- (  4- ( - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *குடும்ப அமைப்பின் அவசியம்* (4) *விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படை* குடும்பம் என்ற அமைப்பு இருப்பதால் தான் மனித குலம் பெருகியிருக்கிறது. மனித குலம் பெருகியிருப்பதால் தான், மனித வளங்களும் முன்னேற்றங்களும் வளர்ந்திருக்கின்றன. மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டிற்கு ஆபத்து என்று சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தால் தான் நாம் இன்று அனுபவிக்கின்ற பல்வேறு நவீன வசதிகளைப் பெற்றிருக்கிறோம். பேருந்து என்ற கனரக வாகனம் மக்கள் தொகை பெருக்கத்தினால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதன் தனக்கு இலாபம் கிடைப்பதற்காகத் தான் கண்டுபிடிக்கிறான். ஊருக்கு பத்துப் பேர் மட்டும் இருந்தால் எப்படி நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்க முடியும். பேருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்குத் தோன்றியிருக்காது. அதே போன்று இப்போது மைக்கில் பேசுகிறோம் எனில் அதிகமான மக்கள் தொகை இருப்பதால் தான். பத்துப் பேர் மட்டும் இருந்தால் மைக் வைத்துப் பேசுவதற்கு எந்தத் தேவையும் ஏற்படாது. அப்படி தேவைப்படவில்லை என்ற போது மைக்கைக் கண்டுபிடிப்பதால் என்ன இலாபம்? இந்தப் பேச்சை பதிவு செய்யத் தேவையில்லை. அதை ஒளிபரப்பத் தேவையில்லை. இப்படியே ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். எனவே இன்றைய உலகில் மனிதன் பயன்படுத்துகிற அனைத்து வசதிகளும் குடும்ப அமைப்பு என்று இருப்பதால் தான் கிடைத்திருக்கிறது. குடும்ப அமைப்பு என்று இல்லையென்றால் இன்று நாம் பயன்படுத்துகிற மனித வளம், அறிவியல் வளர்ச்சி பெருகியிருக்காது. *அன்பும் தியாகமும்* குடும்பத்தில் மற்ற உறவு முறைகளை விலக்கிவிட்டு ஆராய்ந்தால், கணவன், மனைவி என்ற கட்டுப்பாடுகளில் உடல் ரீதியான தொடர்புகள் ஏற்படுவதால், அவர்களுக்கு மத்தியில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. மற்றதை விட உடல் ரீதியாக ஒளிவு மறைவு இல்லாததால் ஒருவர் மீது மற்றவர் அதிமான ஈர்ப்புடையவராகி விடுகிறார்கள். மனைவிக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கணவனும் அந்தப் பிரச்சனையைக் களைவதில் முனைப்பு காட்டுகிறான். அதேபோன்று கணவனுக்கு எதாவது உடல் நலக்குறைவு எனில் மனைவி கண்விழித்து அவனைக் காக்கிறாள். இதற்கெல்லாம் காரணம் குடும்பம் என்ற அமைப்பு இருப்பதால் தான். குடும்பம் இல்லாதவர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாகத் தான் இருப்பார்கள். ஆனால் குடும்பம் என்ற அமைப்பில் உள்ளவர்கள் அனைவருமே தியாகம் செய்பவர்களாக இருப்பார்கள். அண்ணனுக்கு ஒரு தேவையிருந்தும், அதை தம்பிக்காக விட்டுக் கொடுப்பார். இது ஒரு தியாகம் தான். மனைவி என்பவள் நன்றாகச் சமைத்து, கணவனுக்கு வயிறு முட்டக் கொடுத்துவிட்டு, தான் சாப்பிட்டதைப் போன்று நடித்துக் கொள்வாள். தாய் தான் இந்த தியாகத்தில் முதல் இடம் வகிப்பாள். தான் பசியோடு இருந்தாலும் தன் பிள்ளையை நன்றாகக் கவனிப்பாள். இப்படி ஒழுங்கான குடும்பமாக இருந்தால் தாய்க்குத் தந்தையும், தந்தைக்குப் பிள்ளையும், பிள்ளைக்குப் பெற்றோர்களும், மனைவிக்குக் கணவனும், கணவனுக்கு மனைவியும், அண்ணனுக்குத் தம்பியும், தம்பிக்கு அண்ணனும் என ஒருவருக்கொருவர் தனது தேவைகளையும் விருப்பங்களையும் பிறருக்காக விட்டுக் கொடுத்து, அனுசரித்து, தியாகம் செய்வதைப் பார்க்க முடிகிறது. சிலர் இப்படி குடும்பத்திற்காகச் செலவு செய்வதையும் சுயநலம் என்பார்கள். இது தவறான விமர்சனமாகும். ஒருவன் குடும்பத்திற்கும் சொந்த பந்தங்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்காமல் தான் மட்டும் வைத்துக் கொண்டால் தான் சுயநலம் என்று கூறலாம். தான் சார்ந்த குடும்பத்தினருக்குச் செலவு செய்தால் அதை சுயநலம் என்று விமர்சிப்பது நியாயமில்லை. இஸ்லாம் கூறும் குடும்ப அமைப்பில் ஒவ்வொருவனும் தன்னுடைய உறவினர்களுக்காகச் செலவு செய்ய ஆரம்பித்தாலே உலகில் பிச்சைக்காரர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். எனவே இதைச் சுயநலம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமாகும். ஒருவன் இலட்சாதிபதியாக, கோடீஸ்வரனாக ஆவதற்கு முயற்சி செய்கிறான் எனில் சுயநலத்திற்காக இல்லை. தனது மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் போன்ற சொந்த பந்தங்களுக்காகவும் தான் உழைக்கிறான். எனவே ஒருசில கஞ்சர்களைத் தவிர மற்ற அனைவருமே குடும்ப அமைப்பிற்காகத் தான் உழைக்கிறார்கள், வாழ்கிறார்கள். இதை சுயநலம் என்று சொல்லக்கூடாது. சுய தொழில்கள் அல்லது பிறரிடம் கூலி வேலைகள் செய்வதும் இன்னும் சிலர் தனது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி இளமையைத் தொலைத்துக் கொண்டு வெளிநாடுகளில் சிரமப்படுவதும் தனது குடும்பமாக இருக்கிற தாய், தந்தை மற்றும் மனைவி மக்களுக்குத் தான் என்பதை நாம் உணர வேண்டும். இன்னும் சொல்வதாக இருப்பின், வெளிநாட்டிற்குச் சென்று கஷ்டப்படுவதே தியாகம் தான். ஒருவன் தன் வயிற்றுக்கு மட்டும் சாப்பிடுவதற்காக உழைக்க வேண்டுமெனில், உள்நாட்டில் மாதத்தில் பத்து நாட்கள் வேலை பார்த்தால் போதும். வெளிநாட்டைப் பொறுத்தளவுக்கு மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் உழைத்தாலே போதுமானதாகும். ஆனால் மாதம் முழுவதும் உழைக்கக் காரணம், நம்முடைய தாய், தந்தையர்களும் மனைவி மக்களும், குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அதற்கு மேலும் அல்லாஹ் நமக்குத் தந்தால் உற்றார் உறவினர்களுக்கும் ஊருக்கும் சமூகத்திற்கும் உலகத்திற்கும் உதவுவதற்குத் தான். ஆக, குடும்பம் என்ற அமைப்பை விட்டு வெளியேறிவனுக்கு சுயநலத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது. அவர்களது எண்ணங்களில், எனது உடல், எனது சுகம், எனது ஆசைகளை நிறைவேற்றும் அளவுக்குக் கஷ்டப்படுவது என்பது மட்டுமே நிறைந்திருக்கும். அதனால் தான் இத்தகையவர்கள் எந்த தியாகத்தையும் செய்யாதவர்களாகவும் சமூக அக்கறை இல்லாதவர்களாகவும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். சமூக ரீதியாகக் கிடைக்கிற நன்மைகள் போக, கணவன் மனைவி என்று வாழும் குடும்ப அமைப்பில் அவ்விருவரும் சரியாகப் புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் குடும்பவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது ஒழுங்கான இல்லற வாழ்க்கை இருந்தால் அது நிச்சயமாக சரியான பலனைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. தாம்பத்தியத்தின் நன்மைகள்