🌹*கணவன்–மனைவி இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பது எப்படி?*🌹
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
> *_1. கணவன் மனைவிக்கு மத்தியில் உள்ள உரிமைகள் பேணப்பட வேண்டும்:_*
கணவன்-மனைவி இடையே பிரச்சினைகள் உருவாவதற்கும், அந்தப் பிரச்சினைகள் மிகவும் மோசமான நிலைக்கு உயர்வதற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று, *_ஒருவருக்கொருவர் உள்ள உரிமைகள் குறித்து போதிய அறிவு இல்லாததுதான்_* என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்லாம் இந்த உரிமைகளை தெளிவாக விளக்குகிறது; மேலும், கணவன் மனைவி இருவரும் அந்த உரிமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கட்டாயப்படுத்தியும் உள்ளது.
*وَلَهُنَّ مِثْلُ الَّذِىْ عَلَيْهِنَّ بِالْمَعْرُوْفِ*
_கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. (அல்குர்ஆன் : 2:228)_
இந்த வசனம் கணவன் மனைவி இருவருக்கும் மத்தியில் உள்ள உரிமைகளை நிறைவேற்றுவது கடமை என்று சுட்டிக் காட்டுகிறது.
*_இந்த உரிமையை நிறைவேற்றுவதன் மூலமாக குடும்ப வாழ்க்கையில் நிம்மதி பெற முடியும்._*


