*இது சாதாரணமாக ஒரு வாசகமல்ல, நம்முடைய வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஓர் அழைப்பு..*
குர்ஆன் என்பது ஒரு நூல் மட்டும் இல்லை – அது நம்மை சுவர்க்கத்திற்கு அழைத்து செல்லும் ஒரு வழிகாட்டும் ஒளி.
ஒவ்வொரு ஹுரூஃபும் (எழுத்துக்களும்) நமக்கு நன்மையைத் தரும், ஒவ்வொரு ஓதுதலும் நம்மை இறைவனுக்கு அருகாமையாக்கும்.
இந்த உலகத்தில் சிந்திக்க வழிகாட்டும் இந்த வார்த்தைகள், மறுமை நாளில் நம்மை காப்பாற்றி பரிந்துரை செய்யும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். 🤍
*மனதில் வைத்துக்கொள்ளுங்கள்,*
*நாம் அனைவரும் ஒருநாள் அல்லாஹ்வுக்கு முன் நிற்கப்போகிறோம். அந்த நேரத்தில் நம்முடைய நண்பனாக நம்மைக் காப்பாற்ற வரக்கூடியது – குர்ஆன் தான்.*
அதனால் இன்று ஒரு பக்கம் ஓத , மனனம் செய்ய ஆரம்பிக்கலாம்.
தினமும் ஓர் அத்தியாயம், அல்லது சில வசனங்களேனும்…
அதிலிருந்து நம்மை நாம் மாற்றிக் கொள்ளலாம்.
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்


