ShareChat
click to see wallet page
search
விஜய்யை விடுங்க... சைலண்டா வேலை பார்த்த சிபிஐ.. செந்தில் பாலாஜிக்கு வந்த சிக்கல் கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை அவரே உறுதி செய்துள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மனை, திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தரப்பு வாங்க மறுத்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜிக்கு சம்மன்.. கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மீண்டும் ஆஜராகும்படி, தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், தேர்தல் பணிகள் காரணமாக நேரில் ஆஜராவதிலிருந்து 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டுமெனவும், விசாரணையை டெல்லியில் இல்லாமல் சென்னையிலேயே நடத்த வேண்டும் என்றும் தவெக தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக சிபிஐ பரிசீலித்து வருவதாகவும், சம்மனில் குறிப்பிட்டுள்ளபடி இன்று விஜய் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை இணைக்க அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, சிபிஐ அனுப்பிய சம்மன் கருதபப்டுகிறது. இந்நிலையில் தான், கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது உறுதியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ? முதலில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், மார்ச் 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் செந்தில் பாலாஜி, அவரது வீட்டில் இருப்பவர்கள் அல்லது அலுவலக ஊழியர்கள் என யாருமே அந்த சம்மனை பெறவில்லை எனவும் கூறப்பட்டது. அதேநேரம், உடனடியாக தனது வழக்கறிஞர்கள் குழுவினரை சந்தித்து செந்தில் பாலாஜி தீவிர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனக்கு சிபிஐ தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டதை செந்தில் பாலாஜியே உறுதி செய்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு என்ன தொடர்பு? செந்தில் பாலாஜி கரூர் எம்.எல்.ஏ-வாக மட்டுமின்றி, ஆளுங்கட்சியான திமுகவின் கொங்கு மண்டல பொறுப்பாளராகவும் உள்ளார். தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை தொடர்ந்து, அரசு தரப்பில் முதல் நபராக மருத்துவமனைக்கு விரைந்தது செந்தில் பாலாஜி தான். அவரை விமர்சித்து பேசியபோது தான் விஜய் மீது ஒருவர் செருப்பு வீசியது தொடர்பான வீடியோவும் வைரலானது. மேலும், செந்தில் பாலாஜியின் சதி காரணமாகவே இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் தவெகவினர் அப்போதே குற்றம்சாட்டினர். ஆனால், தவெகவின் முன்னேற்பாட்டில் இருந்த குறைபாடுகள் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக, பல்வேறு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை கொண்டு செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருந்தார். இந்நிலையில் தான் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அமைச்சர் பதவியை இழந்த செந்தில் பாலாஜி..! முன்னதாக அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக கடந்த 2023ம் ஆண்டு சிபிஐ தரப்பில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு 471 நாட்கள் விசாரணை காவலில் சிறையில் அடைக்கப்பட்டு, நீண்ட சட்டப்போரம் மூலம் ஜாமினில் வெளியே வந்தார். வழக்கு விசாரணை முடியும் வரை அமைச்சராகக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவால், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, கொங்கு மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜியை முடக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்ட சம்மனும் பார்க்கப்படுகிறது. #தினம் ஒரு தகவல் #இந்தியாவின் தினம் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
தினம் ஒரு தகவல் - ShareChat