#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் ஜெபம்*
*நிலையற்ற இவ்வுலகில், நிலையாக இருக்கின்ற எங்கள் ஆண்டவரே! இந்த காலகட்டத்தில் நாங்கள் நிலையில்லாத பொருட்கள், ஆடம்பரமான வாழ்க்கை, நேர்மையற்ற செல்வம் சேர்ப்பது போன்ற, தேவையற்ற எண்ணங்களில் நாங்கள் வாழ்ந்து கொணடிருக்கிறோம். உம்மை பல நேரங்களில் மறந்து விடுகிறோம். எங்களை மன்னியும் அப்பா.*
*இருப்பினும் நாங்கள் உம்மை மறந்தாலும், நீர்தாமே எம் குறைகளை காணாமல், எங்கள்மீது இரக்கம் வைத்து இன்றைய நாள் முழுவதும், எல்லா சூழ்நிலையிலும் எங்களை அற்புதமாக வழிநடத்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் இறைவா.*
*இன்றைய இரவு வேளையினை உம் கரத்தில் தருகிறோம் அப்பா. உமது இரக்கம் எங்களுக்கு கிடைத்து, அதன் மூலம் மன அமைதியுடனான ஆழ்ந்த உறக்கத்தை தந்து, அதிகாலையில் முழ ஆன்ம சுகத்தோடு விழித்தெழுந்து, உமது திருமுகத்தை கானும் ஆசிர்வாதத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.*
*நன்றி இயேசுவே! நன்றி ஆன்டவரே! மரியே வாழ்க!!*


