ஒரு கள்ளக்காதல் ஜோடியின் பயங்கரமான கொலை சதியும் அம்பலமாகி உள்ளது.. என்ன நடந்தது கர்நாடக மாநிலத்தில்? யாரிந்த பெண் ஆஷா?
கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது ஹெப்பூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர்தான் ஆஷா என்ற இளம்பெண்.. துமக்கூரு பகுதியைச் சேர்ந்த ஆஷா என்பவருக்கும், பரமேஷ் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது..
இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி பரமேஷ் தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.. தனது கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துவிட்டதாக ஆஷா, உறவினர்களுக்கெல்லாம் போனை போட்டு ஒப்பாரி வைத்தார்..
"போலீசுக்கு என் கணவர் இறந்ததை யாரும் சொல்லாதீங்க.. அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்து கஷ்டப்படுத்துவார்கள்.. என் கணவருக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்படக்கூடாது.. உடனே உடலை அடக்கம் செய்துவிடலாம்" என்றெல்லாம் உறவினர்களிடம் அழுது உருகி பேசி பிடிவாதம் பிடித்தார்.
மனைவியின் சென்டிமென்ட் பேச்சு
இந்த சென்டிமென்ட்டை உண்மை என நம்பிய பரமேஷின் குடும்பத்தினரும், உறவினர்களும் எவ்வித சந்தேகமுமின்றி இறுதி சடங்குகளை முடித்து உடலை அடக்கம் செய்தனர்.. ஆனால், கணவர் இறந்து துக்கம் தாளாமல் இருக்க வேண்டிய ஆஷா, பரமேஷ் உயிரிழந்த வெறும் 20 நாட்களிலேயே தனது நண்பரான சந்திரப்பா என்பவரை அவசர அவசரமாக கல்யாணம் செய்து கொண்டார்..
இந்தத் திடீர் திருமணமும், கணவர் இறந்த சில நாட்களிலேயே ஆஷா காட்டிய அதீத அவசரமும் பரமேஷின் சகோதரிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.. உடனே ஹெப்பூர் காவல் நிலையத்தில் பரமேஷின் சகோதரிகள் தங்களது சகோதரனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் புகார் அளித்தனர்..
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் புதைக்கப்பட்ட பரமேஷின் சடலத்தைத் தோண்டி எடுத்து, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
ஆஷாவின் பகீர் வாக்குமூலம்
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், பரமேஷ் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.. அப்போதுதான் இது இயற்கையான மரணம் கிடையாது என்பது தெரிந்ததும், போலீசார் ஆஷா மற்றும் அவரது இரண்டாவது கணவரான சந்திரப்பாவை தங்களது பாணியில் விசாரித்தனர்.. அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன..
அதாவது ஆஷாவுக்கும் சந்திரப்பாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.. இது பரமேஷூக்கும் தெரிந்து, மனைவியை கண்டித்து வந்துள்ளார்.. இதனால் எரிச்சலடைந்த கள்ளக்காதல் ஜோடி, பரமேஷை தீர்த்துக்கட்டிவிட்டு இணைந்து வாழத் திட்டமிட்டனர்.. அதன்படி, ஜனவரி 29ம் தேதி இரவு பரமேஷ் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஆஷாவும் சந்திரப்பாவும் சேர்ந்து, தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சு விட முடியாமல் செய்து துடிதுடிக்கக் கொலை செய்துள்ளனர்..
கல்யாண கோலத்தில் மனைவி
பிறகு விடிந்ததும் எதுவும் தெரியாதது போல மாரடைப்பு நாடகமாடி குடும்பத்தினரை நம்ப வைத்துவிட்டாராம் ஆஷா.. இவ்வளவும் வாக்குமூலத்தில் வெளிவந்ததையடுத்து, ஆஷா மற்றும் சந்திரப்பா ஆகிய இருவரையும் ஹெப்பூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக கட்டிய கணவனையே கொலை செய்து, 20 நாளில் கல்யாண கோலத்தில் நின்ற பெண்ணின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!! #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔


