#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
17 ஜனவரி 2012*
முதலாவது பெண்
நாதஸ்வரக் கலைஞர்
எம். எஸ். பொன்னுத்தாய்
நினைவு நாள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்தவர் பொன்னுத்தாய். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர் என்பதால், அவரது வழியில் நாதஸ்வரக் கலைஞராக பொன்னுத்தாய் புகழ்பெற்று விளங்கினார். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் மதுரையில் வசித்தார்.
மதுரையில் நடேசபிள்ளை என்பவரிடம் 9வது வயதில் நாதஸ்வரக் கலையைப் பயின்ற பொன்னுத்தாய் 13வது வயதில் அரங்கேற்றம் கண்டார்.
கணவர் விடுதலைப் போராட்ட வீரர் அ. சிதம்பர முதலியார். மறைந்த முன்னாள் முதல்வர்களான எம். பக்தவச்சலம், காமராஜர் இருவருக்கும் நெருங்கியத் தோழராக விளங்கியவர்.


