#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #😄சிரிப்போ சிரிப்பு😅
ஒரு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம்... சிறிய சச்சரவு பெரிதாகி கடந்த மூன்று நாட்களாக இருவருக்கும் பேச்சு வார்த்தையில்லை. இது நீடிக்கவே... மனைவி அவள் கணவன் எதிரில் வந்து "நான் இப்போது 10 வரை எண்ணுவேன்... அதற்குள் நீங்கள் பேசவில்லை என்றால்... நான் எனது அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன் என்றாள்.
கணவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை...!! அவன் அதைத் தான் எதிர்பார்த்து காத்ருந்தான்... அவள் எண்ணத் துவங்கினாள்....
மனைவி : 1... 2... 3...
கணவன் : (அமைதி)
மனைவி : 4... 5...
கணவன் : (மவுனம்)
மனைவி : 6... 7...
கணவன் : (அவன் மனதில் மகிழ்ச்சி... ஆனாலும், அமைதி)
உச்சகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது...
மனைவி : 8... 9...
கணவன் : (மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி...)
மனைவி : (அமைதி)...
(பயங்கர மவுனம்)...
பிறகு கணவனால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.
கணவன் : உணர்ச்சி வசப்பட்டு கத்தினான்...
"எண்ணு... எண்ணு...
ஏன் மேற்கொண்டு எண்ணாமல் நிறுத்திவிட்டாய்...?" என்று...
மனைவி : (மிகவும் அமைதியாக)
"நல்ல வேளை... நீங்க பேசிட்டீங்க... இல்லைனா நான் இப்ப எங்கம்மா வீட்டுக்கு போயிருப்பேன்...!! என்று சொன்னாள்.
கணவன் : 🙄⁉️😔⁉️😒⁉️
கடவுளே... இதுக்கெல்லாம் பரிகாரமே
கிடையாதா...!! 😥😥


