உலகம் இப்போது செயற்கை நுண்ணறிவு காலத்துக்குள் சென்றுவிட்டது, அந்த யுகத்தின் வாசலில் மானுடம் கால் வைத்திருக்கின்றது, எதிர்காலம் இனி செயற்கை நுண்ணறிவின் வழிகாட்டலிலே இயங்கும், எல்லாமே இனி அந்த அறிவுக்கு கட்டுபடும், அது கலிகாலம் என்றாலும் எல்லோரும் கட்டுபட்டே தீரவேண்டும்
இந்த செயற்கை நுன்ணறிவு நுட்பம் இப்போதே பெரிய பாதிப்பை ஆளில்லா விமானம் முதல் வங்கிதுறை வரை மெல்ல தலைகாட்டுகின்றது, நம்பமுடியா ஆச்சரியம்தான் ஆனால் அதுதான் இனி உலக மாற்றத்தின் துவக்கம்
இதில் ஆதிக்கம் செலுத்தும் நாடு இனி உலகாளும், இதனாலே மோடி அரசு 2003ம் ஆண்டே இந்த நுட்பத்தில் பெரும் வளர்ச்சி பெற வழிசெய்தது, ஜோ பிடன் அரசோடு பல ஒப்பந்தங்களையும் செய்தது
இதனாலே AI என்பது அமெரிக்கா இந்தியாவுக்கானது (America India) என அன்றே சொன்னார் பிடன்
இதை தொடர்ந்து உலகின் மிக முக்கியமான இந்த நுட்பத்துக்கு இந்தியா பெரும் காரியத்தை செய்தது, டிரம்ப் வந்தாலும் அவராலும் இதனை கட்டுபடுத்தமுடியாதபடி மோடி அரசின் நகர்வு இருந்தது
கூகுள் நிறுவணம் தெலுங்கானாவிலும், பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் ஐதரபாத்திலும் இன்னும் ஓப்பன்மூவ் போன்ற நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் பெரும் முதலீட்டை கொட்டின
இப்போது உலகிலே முதன் முறையாக செயற்கை அறிவு மாநாட்டை இந்தியா நடத்துகின்றது, இதற்கு உலகில் இருந்து பெரும் ஜாம்பவான்களும் முதலீட்டாளர்களும் பார்வையாளர்களும் வந்திருக்கின்றார்கள்
நேற்று இந்த மாநாட்டை மோடி துவக்கி வைத்தார், அதை தொடர்ந்து பெரும் அறிவுசார்பு பரிமார்றங்கள் நடக்கின்றன
இந்தியாவின் அம்பானி நிறுவணமும் பெரிய முதலீட்டை செய்திருப்பதால் அவர்கள் அரங்கமும் இந்திய தொழில்நுட்பத்தை தாங்கி நிற்கின்றது
எதிர்கால விஞ்ஞான உலகம் இந்தியாவுக்கு எனும்படி மாபெரும் தொழில்நுட்ப பாய்ச்சலை மோடி அரசு தேசத்துக்கு செய்திருக்கின்றது ,இது ஒவ்வொரு தேசாபிமானிக்கும் பெரும் உற்சாகத்தை தருகின்றது
எதிர்கால செயற்கை அறிவு உலகம் இந்தியாவுக்கே, அது போர்கருவி, வங்கி, தகவல் தொடர்பு , பங்குசந்தை, வானிலை ஆய்வு, செயற்கைகோள், ஏவுகனை, கப்பல்கள் என எல்லா இடத்திலும் ஆதிக்கம் செலுத்தும் எனும்படி உலகிற்கு இன்று பெரும் செய்தியினை சொல்கின்றது இந்தியாமந்திரம் கற்போம்வினைத் தந்திரங் கற்போம்
"வானை யளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.
காவியம் செய்வோம்நல்ல காடுவளர்ப்போம்
கலை வளர்ப்போம்கொல்ல ருலைவளர்ப்போம்
ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள்செய்வோம்
உலகத் தொழிலனைத்து முவந்துசெய்வோம்."
என இந்த தேசத்தை பற்றி பெரும் கனவு கண்டு பாடினான் பாரதி, மோடி அரசு "உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்' எனும் அவன் வரிக்கு இன்று சரியான வடிவம் கொடுத்து அவன் கனவையெல்லாம் நிறைவேற்றி வருகின்றது, அதனை தேசாபிமானிகள் பெரும் மகிழ்வோடு வரவேற்று நன்றி செலுத்துகின்றார்கள் #💪 தன்னம்பிக்கை #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #👌அருமையான ஸ்டேட்டஸ் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏என் தேசப்பற்று


