ShareChat
click to see wallet page
search
ஜப்பானியர்கள் போல் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமா..? தினமும் 20 நிமிடம் போதும்..!! மாரடைப்பு, பக்கவாதமே வராது..!! இன்றைய அவசர உலகில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை வயது வித்தியாசமின்றி பலரையும் பாதிக்கும் பொதுவான சுகாதாரப் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, மூளைக்கான ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையால் உண்டாகும் பக்கவாதம், ஒருவரின் வாழ்நாளையே முடக்கிவிடும் வல்லமை கொண்டது. இதய ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தாலோ அல்லது ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்தாலோ ‘இஸ்கிமிக்’ வகை பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உயிருக்கு ஆபத்தான பாதிப்பிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள ஜப்பானியர்கள் பின்பற்றும் ஒரு எளிய ரகசிய முறை தற்போது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ஜப்பானியர்களின் ஆரோக்கிய ரகசியம் : ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா பகிர்ந்துள்ள தகவலின்படி, ஜப்பானியர்கள் தினமும் தங்களது பாதங்களை மிதமான வெந்நீரில் ஊறவைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். குறிப்பாக 50 வயதைக் கடந்தவர்கள் தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் இவ்வாறு செய்வது ரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவுகிறது. வெந்நீர் பாதங்களில் படும்போது ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் பாய்கிறது. இது உடல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கிறது. இந்த நீரில் சிறிது ‘எப்சம் உப்பு’ (Epsom Salt) சேர்ப்பது தசைகளை தளர்த்தி, இரவு நேரங்களில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறவும் வழிவகுக்கும். அறிகுறிகள் : 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், புகை மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்கள், நீண்டகால தலைவலியால் அவதிப்படுபவர்கள் மற்றும் வகை-2 நீரிழிவு நோயாளிகளுக்குப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட அதிகம். திடீரென உடலில் சமநிலை இழப்பது, மங்கலான பார்வை, முகம் ஒருபுறமாகக் கோணுதல், கைகளைத் தூக்க முடியாமல் போவது மற்றும் பேசும்போது சொற்கள் குழம்புவது போன்றவை பக்கவாதத்தின் தொடக்கக்கால அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது உயிரைக் காக்க உதவும். தற்காப்பு முறைகள் : ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஜப்பானியர்களைப் போல எளிய இயற்கை மருத்துவ முறைகளைப் பின்பற்றுவது பக்கவாதம் போன்ற ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளோடு, பாதங்களை வெந்நீரில் ஊறவைக்கும் இந்த எளிய முறையையும் நமது தினசரி பழக்கமாக மாற்றிக்கொள்வது நீண்டகால ஆரோக்கியத்திற்கு வித்திடும். #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat