ShareChat
click to see wallet page
search
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 25.01.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== வருவேன் நானென்று வருமுன் னறிவதற்கு நிருப மதுவெழுதி நீணிலத்தி லேயனுப்பி மரமறிய சீவசெந்து மலையு மிகவறிய திரமான வாயு சேடன் முதலறிய வருண னறிய மதியு மிகவறிய தருணம் வரும்போது சாணா ரிடம்வருவேன் அறிந்துபல சாதிமுதல் அன்பொன்றுக் குள்ளானால் பிரிந்துமிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார் என்று அந்தநீசனுக்கு எடுத்துரைத்து எம்பெருமான் . விளக்கம் ========= நான் உலகை ஆளவைப்பதற்கு எப்பொழுது வருவேன் என்பது பற்றி முன்பே அறிவதற்காகச் செய்தி ஒன்று எழுதி இப்பரந்த உலகிற்கு அனுப்பி மரங்களும், சீவ செந்துகளும், மலைகளும், எப்பொழுதும் உலாவுகின்ற வாயுக்களும், சேடனும், வருணனும், சந்திரனும் அறியும்படியாகச் செய்வேன். தக்க சமயம் வருகின்றபொழுது நான் சாணார் இனத்தில் தோன்றுவேன். இவற்றை எல்லாம் அறிந்து எல்லாச் சாதியினரும் அன்பாக ஒன்று கூடி பிரிந்து வாழாத வாழ்க்கை வாழ்ந்து வந்தால் உயர்ந்தோராக வாழ்ந்து இருப்பர் என்று திருமால் இவவளவும் அந்த நீசனுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார். . . அகிலம் ======== அன்று திருவனந்தம் அவனிவிட் டெழுந்தருளி நீசனுட கோட்டை நெடுநெரெனத் தானிடிய தேசமெல்லாம் நித்திரா தேவி யிருள்மூட ஏழுமேக முங்கூடி இராச்சியத்தைத் தான்மூடி வெளுவே ளெனமாரி வெண்டூளி போல்தொளிய வாயு வதுதிரண்டு வையகத்தைத் தானரிக்க வீசுவீ சென்று உலாவி யதுவீச வாரியது கோபமுற்று வையகத்தை தான்முழுங்க மூரிபோல் மூச்செறிந்து மொகுமொகென கோபமுற்று மாநீச னிட்டிருந்த வாய்த்தகற் கோட்டையெல்லாம் தேனியீன் கூடதுபோல் செகலிடிந்த தம்மானை . விளக்கம் ========= இவ்வாறு நீசனுக்கு எல்லாப் புத்திமதிகளையும் சொல்லி எந்தப் பயனும் இல்லாமையால் திருவனந்தபுரம் தேசத்தைவிட்டு எழுந்து திருச்செந்தூர் புறப்பட்டார். திருவனந்தபுரத்தை விட்டு வெளியேறியதும் நீசனுடைய கோட்டைகள் எல்லாம் இடிந்தன. . தேசமக்கள் எல்லாம் நித்திராதேவி ஆட்கொண்டு அறிவின்மையை உண்டாக்கினாள். ஏழுவகை மேகங்களும் அந்த இராச்சியத்தைச் சூழ காற்றானது திரண்டு அத்தேசத்தில் வீச, மழை நீரானது யானையின் துதிக்கை போன்று பெய்து அங்குள்ள பூமியை அரித்துச் சென்றது. கோபமுற்ற கடலானது தனது நீரால் அத்தேசத்தை மூழ்கடித்தது. எருமைபோன்று மூச்செறிந்து வெகுண்டெழுந்த கடல், நீசன் உருவாக்கியிருந்த கடினமான கோட்டைகளை எல்லாம் தேன்கூடு போன்று நினைத்து அடித்து நொறுக்கியது. . . அகிலம் ======== கோட்டைத் தளமிடிந்து குஞ்சரங்கள் தானிறந்து பூட்டை மிகப்பூட்டிப் போட்டிருந்த காவலெல்லாம் உழைந்து மிகவெருவி ஓகோவென வுளறி கழைந்து அவரோடக் கைமறந்து நின்றனனே சிப்பாயி யோட சுபேதாருந் தானோட அப்பப்பா வென்று அந்நீசன் தானோட பிராமண நம்பூரி புலம்பிமிகத் தானழுது ஸ்ரீராமனையுங் காணலையே தேசமிரு ளாகுதல்லோ அய்யோ கெடுத்தானே அரசன்நம்மை யென்றுசொல்லி மெய்யோடே குத்தி விழுந்தழுவார் வேதியர்கள் . விளக்கம் ========= நீசனது கோட்டைத்தளங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு யானைகள் எல்லாம் இறந்தன. பணப்பெட்டி, கோட்டை போன்ற பகுதிகளைப் பூட்டி காவல் புரிந்து வந்த காவலர்கள் எல்லாரும் மனம் பதறி ஓகோ என்று வாய் உளறி இயற்கையின் மோதலைச் சமாளிக்க முடியாமல் களைத்து ஓடினர். இதைக் கண்டு அங்கு நின்ற சிப்பாய்கள் ஓட சுபேதாரும் ஓட, அப்பப்பா என்று அபய ஒலி எழுப்பி, அந்த நீசன் தன்னை மறந்து ஓடினான். பிராமண நம்பூரிகள் எல்லாரும் புலம்பிப் புலம்பி அழுதனர். வேதியர்கள் திருமாலையும் காணவில்லையே, தேசம் முழுவதும் இருளாக இருக்கிறதே. அய்யோ, இந்த நீச மன்னன் நம்மைக் கெடுத்து விட்டானே என்று சொல்லித் தமது உடம்பில் குத்திக் கொண்டு விழுந்து அழுதார்கள். . . அகிலம் ======== மாய னனந்த புரத்திலே வாழுமட்டும் நீசனுட சட்டம் நின்றுதல்லோ ராச்சியத்தில் ஸ்ரீபத்ம நாபரிந்தச் சீமைவிட்டுப் போனவுடன் பிறிவாக நவ்வா பிடித்தானே சீமையெல்லாம் என்று பலபேர்கள் இப்படியே சொல்லிமிக அன்று புலம்பி அழுவார் சிலபேர்கள் நம்பூரி வேதியர்கள் நாம்கெட்டோ மென்றுசொல்லி வெம்பிடா வண்ணம் வெளியிலுரை யாதிருந்தார் இப்படியே பூலோகம் எல்லாந் திணுக்கிடவே அப்படியே மாயவரும் ஆனதெய் வாருடனே இன்றுமுதல் யானிருக்கும் இடங்களிலே சாதியெல்லாம் ஒன்றுபோ லென்னிடத்தில் ஒத்துமிக வாருமென்று சொல்லித் திருச்சம்பதி சென்றிடவே தானடக்கப் பல்லுயிரும் வந்து படிந்ததுகே ளன்போரே . விளக்கம் ========= அய்யோ திருமால் அனந்தபுரத்தில் இருந்தவரை நீசன் வைத்த சட்டங்கள் நல்ல முறையிலே நிறைவேற்றப்பட்டு வந்தனவே. திருமால் இங்கிருந்து சென்றவுடன் நல்வா என்கின்ற வெள்ளை நீசன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டானே என்று பலர் இந்த வகையாகக் கூறிப் புலம்பி அழுதார்கள். . நம்பூரிகளும் வேதியர்களும் நாம் கெட்டு அழிந்தோம் என்று அவர்களுக்குள் கூறிக் கொண்டு வேறு யாரிடமும் கூற முடியாவண்ணம் புழுங்கினர். இப்பழயே அந்த தேச உயிர்கள் எல்லாம் திடுக்கிட்டுத் துன்பமுற்றன. அப்பொழுது திருமால் தேவர்களை நோக்கி, தேவர்களே இன்றுமுதல் நான் இருக்கின்ற இடங்களில் எல்லாச் சாதியினரும் ஓரினம்போல் ஒற்றுமையாக வாழ்ந்து வாருங்கள் என்று கூறித் திருச்செந்தூர் செல்லுவதற்காக நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது பல வகையான உயிரினங்கள் திருமாலை நோக்கி வந்து வணங்கி சென்றன. அன்பர்களே, கேட்பீர்களாக. . . அகிலம் ======== திருச்சம் பதியதிலே சென்றவர் தானிருக்கப் பொருச்சமது பார்த்தான் புகழுமொரு நம்பூரி அப்போது சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம் இப்போது சும்மா இங்குவர லாமெனவே அன்றந்த சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம் இப்போது சும்மா இங்குவர லாமெனவே அன்றந்த சாஸ்திரத்தில் அதுகண்டு மல்லாமல் நன்றந்தச் சாணார்கள் நல்லதே ருண்டுபண்ணித் தொட்டுக் கொடுத்துத் தேர்நடத்த வேணுமென்றும் மட்டும் வெகுதானம் வலங்கையுயர் கொண்டோர்க்குக் கொடுக்கவே ணுமென்று கூறினார் சாஸ்திரத்தை வெடுக்காக அந்த விபரிப்பெல் லாம்நடத்தி வாரிக்கரை யாண்டியென வாய்த்தநா மம்விளங்க நேரியர்கள் சூழ நெடியோ னங்கேயிருந்தார் . விளக்கம் ========= திருச்செந்தூரில் சென்று திருமால் அமர்ந்திருக்கின்ற சமயம் ஒரு சிறந்த நம்பூரி அன்றைய நிலை பற்றிய குறை நிறைகளைக் காணப் பொருச்சம் பார்த்தான். அப்பொழுது அவன் பார்த்த சாத்திரங்களில் இந்தப் பூமியிலுள்ள பல சாதி மக்களும் இனி எப்பொழுதும் சதா திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருப்பார் என்னும் விதியும் மிகவும் நல்ல குணம் பொருந்திய சாணார்கள் திருச்செந்தூரில் நல்ல தேர் ஒன்று உருவாக்கி அதைத் தொட்டுக் கொடுத்து அத்தேர் விழாவை நடத்த வேண்டும் என்னும் விதியும் மேலும், உயர்வு பொருந்திய வலங்கையர் என்னும் அச்சான்றோர் உயர்வு பொருந்தியவர்களுக்குப் பலவிதத் தானங்கள் கொடுக்க வேண்டும் என்னும் விதியும் இருக்கின்றன என்பதை எடுத்துக் கூறினான். . இத்தகைய சாத்திர வாக்கிற்கு ஏற்ற எல்லாச் செயல்களையும் நடத்தித் திருமால் வாரிக்கரையாண்டி என்னும் திருநாமம் சூட்டப்பெற்று உயர்வான பெண்டிர் சூழத் திருச்செந்தூரில் இனிதாக அர்ந்திருந்தார். . கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது. தொடரும்….. அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர்
Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நல்ல மனுவோர் நாடி முழிப்பதுவும் வல்லபுவி தர்மம் வாழ்வதுவுஞ் சிறப்பும் சொல்லி விரித்தார் சிறந்ததொட்டில் மீதிருந்து எல்லோருங் கேட்டு இப்போதோர் காரணந்தான் நடத்துகிறா ரென்று நல்லோர்கள் சொல்லிடுவார் சடத்தமுள்ள நீசச் சண்டாளப் பாவியெல்லாம் கபடுசெய்கி றானெனவே காசு மிகவேண்டக் பேசி யிவனும் பிதற்றுகிறா னென்றுசொல்லி நகைப்பார் சிரிப்பார் நன்றிகெட்ட நீசர்குலம் ! அகிலம்  DMutn Pokash 25.01.2026 விளக்கின் Guirou | நங்கோ GW வீரத்தனமாய்  அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நல்ல மனுவோர் நாடி முழிப்பதுவும் வல்லபுவி தர்மம் வாழ்வதுவுஞ் சிறப்பும் சொல்லி விரித்தார் சிறந்ததொட்டில் மீதிருந்து எல்லோருங் கேட்டு இப்போதோர் காரணந்தான் நடத்துகிறா ரென்று நல்லோர்கள் சொல்லிடுவார் சடத்தமுள்ள நீசச் சண்டாளப் பாவியெல்லாம் கபடுசெய்கி றானெனவே காசு மிகவேண்டக் பேசி யிவனும் பிதற்றுகிறா னென்றுசொல்லி நகைப்பார் சிரிப்பார் நன்றிகெட்ட நீசர்குலம் ! அகிலம்  DMutn Pokash 25.01.2026 விளக்கின் Guirou | நங்கோ GW வீரத்தனமாய் - ShareChat