முடிவெட்டிக்கொள்ள சலூனுக்குப் போனேன். ஒரு சிறுவனுக்கு முடிவெட்டிக் கொண்டிருந்தார் சலூன்காரர்.
சிறுவனுக்கு அடர்த்தியான தலைமுடி. ஏழைப் பையன்தான் என்று தெரிந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் வெட்டி முடித்த பிறகு, அவன் எழுந்து ₹50 ரூபாய் கொடுத்தான். வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டார் சலூன்காரர்.
அடுத்து நான்...
கால் மணிநேரம்கூட ஆகவில்லை. என் தலையில் அவ்வளவுதானே முடி இருக்கிறது. ₹100 ரூபாய் கொடுத்தேன்.
ஒரு பழைய பத்திரிகை ஜோக் நினைவுக்கு வந்ததால், பேசாமல் வந்தேன்.
அந்த ஜோக்...
“நிறைய தலைமுடியோட வந்தவருக்கு முடிவெட்ட ₹50 ரூபாய் வாங்கினீங்க. எனக்கு முடிவெட்ட ₹100 ருபாயா..?”
“ஆமா… முடியைத் தேடித்தேடி வெட்டணும்ல”... 😜😂
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்


