ShareChat
click to see wallet page
search
உலகின் 51 சக்தி பிடங்களில் ஒன்றான அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி நீலாச்சல் மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகாமாக்யாதேவி திருக்கோவிலில் ரோஜா வழிபாடு! காமாக்யா திருக்கோவிலில் குங்கும வழிபாடு சிறப்பு ஆகும். கொல்கத்தா காளி கோவிலிலும் குங்கும வழிபாடு சிறப்புதான் என்றாலும் காளிக்கு பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது என்பதற்காக அங்கு யாரும் காளிக்கு உயிர்ப்பலி கொடுப்பதில்லை. அதற்குப்பதில் சிகப்பு முள்ளங்கியை இரண்டாக நீளவாக்கில் அறுத்து வைத்தும், சிகப்பு நிற செம்பருத்திப்பூவை காளிக்கு அணிவித்தும் வழிபடுவது வழக்கம். சிகப்பு முள்ளங்கியை நீளவாக்கில் இரண்டாக அறுத்துப்பார்த்தால் வெள்ளை நிற எலும்பிற்குமேல் சிகப்பு நிறத்தில் சதை ஒட்டிக்கொண்டிருப்பது போல இருக்கும் என்பதால் இது உயிர்பலிக்கு சமமாகவும், சிகப்பு செம்பருத்திப்பூவானது ரத்தத்திற்கு சமம் என்பதாலும் செம்பருத்தியில் உள்ள ஐந்து இதழ்களும் பஞ்சபூதங்களை குறிப்பது என்பதாலும் இவ்விரண்டையும் காளிக்கு படைத்து கொல்கத்தாவில் வழிபடுகின்றார்கள். தீதிஜி எப்பொழுதும் இவைகளைப் படைத்து காளியை வழிபடும் வழக்கம் உள்ளவராம்! நாமும் இவைகளைப் படைத்து காளியை வழிபட்டு பயனடையலாம்! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat