ShareChat
click to see wallet page
search
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே தலக்குளத்தை சேர்ந்தவர் அருண் பிரசாத் (34). கார்பெண்டர். இவரது மனைவி சுபிதா (28). 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 9 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தும்பவிளை பகுதியை சேர்ந்த அனீஸ் (30) என்பவருக்கும், சுபிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது தெரிந்து அருண் பிரசாத் கண்டித்தும் இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு அதிகரித்ததால், சுபிதா அதே பகுதியில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்று,நாகர்கோவிலில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலைக்கு சேர்ந்தார். மகன்கள் தந்தையுடன் தங்கும் சமயத்தில் அனீஸை வீட்டுக்கே வரவழைத்து சுபிதா உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அவர் அனீசுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை சுபிதாவின் சித்தப்பா ராஜேஷ் (45) கண்டித்துள்ளார். அவர்களுக்குள் தகராறு முற்றவே மாற்று திறனாளியான ராஜேஷை சுபிதா பிடித்து தள்ளியதில் நிலை குலைந்து விழுந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அரிவாளை எடுத்து சுபிதாவை தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டியதாக கூறப்படுகிறது. படுகாயத்துடன் படுக்கை அறைக்குள் சென்று சுபிதா உள் பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது சுபிதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து இரணியல் போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #📢பிப்ரவரி 9 முக்கிய தகவல் 🫠 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔
📢பிப்ரவரி 9 முக்கிய தகவல் 🫠 - 54 హ 1 ೧ கள்ளக்காதலனுடன் உல்லாசம் இளம்பெண் வெட்டிக்கொலை: மாற்று திறனாளி சித்தப்பா கைது 54 హ 1 ೧ கள்ளக்காதலனுடன் உல்லாசம் இளம்பெண் வெட்டிக்கொலை: மாற்று திறனாளி சித்தப்பா கைது - ShareChat