எல்லாப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் மேல் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் மூலமாக தங்கள் குழந்தைகளையே அழித்து விடுகிறார்கள்.
நீங்கள் உங்கள் பெற்றோர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும். எப்படி ஒரு குழந்தை தனது தாயின் கருவறையில் இருந்து விடுதலை பெற்று வெளியே வருகிறதோ, அப்படி நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து விடுதலை பெற்று வெளியே வர வேண்டும்.
குழந்தை கருவறையில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வெளிவராவிட்டால் அந்த கருவறையே அதற்கு கல்லறை ஆகிவிடும். ஒன்பது மாத வாசத்திற்குப் பின் அந்த குழந்தை கருவறையைவிட்டு வெளியே வர வேண்டும். அந்த கருவறையைத் தாங்கிக் கொண்டிருக்கும் தனது தாயைவிட்டு வெளியே வரவேண்டும்.
தாய்க்கு எவ்வளவு வலி ஏற்பட்டாலும் சரி, குழந்தை இருந்துவிட்டுப் போன அந்த வெற்றிடம் தாயை எவ்வளவு பாதித்தாலும் சரி, குழந்தை வெளியே வந்துதான் ஆக வேண்டும்.
அதே போல் ஒரு காலகட்டத்தில் அந்த குழந்தை தனது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளில் இருந்து வெளியே வர வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தை முதன்முறையாக தனிமனிதாக உருவாகுகிறது. அதன்பின்தான் அந்த
குழந்தை தனது சொந்தக்காலில் உண்மையாகவே நிற்கத் தொடங்குகிறது. அப்போதுதான் அது உண்மையாகவே விடுதலை பெறுகிறது.
குழந்தைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய பெற்றோர்களாக இருந்தால் அந்த குழந்தைக்கு நல்லது. விழிப்புணர்வுடன் செயல்பட்டு குழந்தை விடுதலை பெற. தன்னிலை பெற அவர்களால் ஆன உதவியைச் செய்வார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை தங்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு மனக்கட்டுத்திட்டம் போடமாட்டார்கள். குழந்தைகளை அன்புள்ளம் கொண்டவர்களாக வளர்ப்பார்கள்.
ஒவ்வொரு தாய் தந்தையும் அப்படி இருந்துவிட்டால் இந்த உலகம் அடியோடு மாறிவிடும். அந்த உலகம் எப்படி இருக்கும் தெரியுமா? அங்கே தனக்குரிய தொழிலை மனிதன் எப்படித் தேர்ந்தெடுப்பான் தெரியுமா?
மரவேலையின் மேல் தனக்குள்ள காதலால்தான் ஒரு தச்சன் தனது தொழிலைத் தேர்ந்தெடுப்பான். பாடம் புகட்ட தனக்கிருக்கும். தணியாத தாகத்தால்தான் ஆசிரியன் அந்தத் தொழிலுக்கே வந்திருப்பான். காலணி தயாரிப்பவனும் தனது தொழில் மேல் இருக்கும் காதலால்தான் அந்தத் தொழிலில் ஈடுபடுவான்.
ஆனால் இப்போது அப்படியா நடக்கிறது? காலணி தயாரிக்க ஆர்வம் உள்ளவன் அறுவை சிகிச்சை நிபுணனாக
இருக்கிறான். அறுவை சிகிச்சை மேல் நாட்டம் உள்ளவன் காலணி தயாரித்துக் கொண்டிருக்கிறான். இருவருமே தங்களது தொழிலை ஒரு வித கோபத்தோடு செய்து கொண்டிருக்கிறார்கள். தச்சன் அரசியல் வாதியாகிவிட்டான். அரசியல்வாதி தச்சனாக இருக்கிறான். எல்லோரும் கோபமாக இருக்கிறார்கள்.
எந்த மனிதனும் அவன் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. வேறு எங்கேயோ சம்பந்தமில்லாத இடத்தில் இருக்கிறான். பொருந்தாத தொழிலில் ஈடுபடுவதுதான் இன்று பலரையும் பாதித்திருக்கும் நோய். யாரிடமும் நிறைவில்லை.
காரணம்? நடைமுறைப் பயன் ஒன்றுதான் முக்கியமாகப் போய் விட்டது. அதுதான் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது. இன்று நான் பார்க்கும் தொழிலால் எனக்கு என்ன லாபம் கிடைக்கிறது? பணம், பெயர்... என்று எல்லாரும் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். யாருமே தங்களது தொழிலை நேசிப்பதில்லை. நேசிக்கும் தொழிலில் ஈடுபடுவதில்லை.
இந்த அழகான கதையை நான் கேட்டு ரசித்தி ருக்கிறேன்.
ஒரு பெண் வயதாகி இறந்தவுடன் சொர்க்கத்திற்குப் போனாள். அங்கிருந்த தேவதையிடம் ஒரு வேண்டுகோளை வைத்தாள்.
"சொர்க்கத்தில் இருக்கும் ஒருவருடன் நான் பேச விரும்புகிறேன். முடியுமா?"
நீங்கள் பேச விரும்பும் நபர் சொர்க்கத்தில் இருந்தால், நிச்சயமாக முடியும்."
"அந்த நபர் இங்குதான் இருக்கிறார். எனக்கு நிச்சயமாகத் தெரியும். நான் ஏசுநாதரை ஈன்றெடுத்த தாயான கன்னி மேரியுடன் பேச விரும்புகிறேன்.'
நிச்சயமாக முடியும். கன்னி மேரி சொர்க்கத்தின் மற்றொரு பகுதியில் இருக்கிறார். உங்கள் வேண்டுகோளுக்கு செவிமடுத்து நிச்சயம் இங்கே வந்து உங்களிடம் பேசுவார்."
சிறிது நேரத்தில் அங்கு ஒளிமயமாக வந்த கன்னி மேரியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண், பின் தயங்கித் தயங்கித் தனது கேள்வியைக் கேட்டாள்
"பல லட்சக்கணக்கான மக்கள் தெய்வமாக வணங்கும் ஒரு மகனுக்குத் தாயாக இருப்பது எப்படி இருக்கிறது என்று சொல்லுங்களேன்."
கன்னி மேரி கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார், "உண்மையைச் சொல்லப் போனால் நானும் என் கணவரும் என் மகன் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நிச்சயம் டாக்டராவான் என்று நம்பிக் கொண்டிருந்தோம். அவன் இப்படி ஆகிவிட்டானே...."
தங்கள் குழந்தை அப்படி ஆக வேண்டும் இப்படி ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் எப்போதும் நம்பிக் கொண்டே இருக்கிறார்கள். கனவு கண்டு கொண்டே இருக்கிறார்கள். அந்த நம்பிக்கைதான் குழந்தைக்கு விஷமாகிவிடுகிறது.
உங்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுங்கள். அதிகபட்ச அன்பைக் காட்டுங்கள். அவர்கள் உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படுவார்கள் என்ற அடிப்படையில் அந்த அன்பு இருக்க வேண்டாம். அவர்கள் உங்கள் குழந்தைகள். நீங்கள் அவர்களைப் பெற்றவர்கள். உங்கள் அன்புக்கு இது மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும்.
அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே நேசியுங்கள். உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படும் வகையில் அவர்களை மாற்றியமைக்க முயற்சி செய்யாதீர்கள். பயன் கருதி அன்பு காட்டாதீர்கள்.
உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் படைக்கப்படவில்லை. அவர்கள் என்ன செய்தாலும் சரி அது நீங்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் அன்பைப் பாதிக்கக்கூடாது. உங்கள் அன்பு நிபந்தனையற்ற தூய்மையான அன்பாக இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் உங்களைச் சுற்றி ஒரு புது உலகம் உருவாகும். மக்கள் தங்கள் மனம் எதை விரும்புகிறதோ அதையே செய்வார்கள். எந்தத் தொழில் தங்களுக்குக் காதல் இருக்கிறதோ அந்தத் தொழிலையே தேர்ந்தெடுப்பார்கள். நடைமுறைப் பயன் கருதி எந்தத் தொழிலையும் தேர்வு செய்யமாட்டார்கள்.
(மனிதனின் புத்தகம்
மகன் )
_ஓஷோ #உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு


