#sree lalithaa sagasranaamam.
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 235*
*இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம்*
*..சதுஷ்ஷஷ்டி உபசாராட்யா..*
சதுஷ்ஷஷ்டி உபசாராட்யா🌹🌹
அறுபத்து நான்கு உபசாரங்களால் ஆராதிக்கப்படக் கூடியவள் அன்னை..
*விளக்கம்🙏*
"""""""""""""""""""""""
அன்னையைப் பூஜிக்கும்போது பலவிதங்களில் உபசாரங்கள் செய்து பூஜிப்பது வழக்கம். கணக்கு வகையில் இவை அறுபத்து நான்காம்; இவற்றுள் ஆசனம், அர்க்யம், ஸ்நானம், ஆடை அணிவித்தல், ஆபரணங்கள் பூணுவிப்பது, ஆடல், பாடல், ஜபம், த்யானம் என்பவை இந்த பட்டியலில் காணப்படும் சிலவாம். தீவிர பக்தியில் ஈடுபடாதவர்களுக்கு இத்தகைய கிரியாபரமான உபசாரங்கள் தேவையாகின்றன. பக்தி வளர்ந்து பரிபக்குவமடைகையில், இவை குறைந்து, மறைந்துவிடுகின்றன. படிநிலைகளில் கீழே இருக்கும் பக்தர்களுக்கு இவையெல்லாம் இருப்பது முன்னேற்றத்துக்குத் தேவையாகின்றன.இதுவே அன்னையின் பெருமையை கூறும் 235 வது திருநாமம்...
*🌹🌹 ஐயா சிவ சிவ அரகர அரகரா🌹🌹*
*🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி🙏🙏*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🟪🔶🟪🔶🟪🔶🟪🔶🟪🔶🟪🟪🔶🟪🔶🟪🔶🟪🔶🟪🔶🟪


