ShareChat
click to see wallet page
search
#sree vaamana puraanam. உ ✧───•► 🙏 ஶ்ரீ வாமன புராணம் 🙏 பாகம்_07 ஸ்தாணு சம்புவும் ஸ்தாணு தீர்த்தமும்..!! ஒரு சமயம் உமா மகேசுவரர்கள் தாருகவனத்தை அடைந்தனர். அங்குப் பல முனிவர்கள் உடலை வருத்தி பலகாலமாக தவம் செய்து வந்ததால் எலும்பும், தோலுமாகக் காட்சி அளித்தனர். அதைக் கண்டு அம்பிகை தன் கருணையால் பரமேசுவரனிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசினாள். அவர்கள் மீது தயவு கொள்ளுமாறு வேண்டிட, சிவனார் முனிவர்கள் நீண்ட நாட்களாகத் தவம் செய்து வந்தாலும், சாதாரண மக்களைப் போலவே காமக் குரோதாதிகளை விடவில்லை. அதனால் அவர்கள் தவம் பலிக்கவில்லை. இப்போது ஒரு விந்தையைப் பார் என்று கூறி பரமன் ஓர் அழகிய பிக்ஷõடனராகி, திகம்பரனாகி, ரிஷிபத்தினிகளிடம் சென்று பிச்சை எடுத்தார். அப்போது ரிஷிபத்தினிகள் அனைவரும், ஒருத்தியுடன் ஒருத்தி போட்டி போட்டுக் கொண்டு அந்தப் பிக்ஷõடனரைத் தம் வசப்படுத்திக் கொள்ள அவர் கைகால்களைப் பற்றி இழுத்தனர். இதனைக் கண்ட முனிவர்கள் மிக்க கோபம் கொண்டு அந்த பிக்ஷõடனரின் லிங்கம் கீழே விழுமாறு கட்டை எடுத்து அடித்தனர். அது அருகிலிருந்த மடுவில் போய் விழுந்தது. இதனால் முனிவர்களின் தவம் கெட்டது. அவர்களின் ஓர் அறிவாளி பிக்ஷõடனர் யாரோ ஒரு மகானாக இருக்கக்கூடும். அவரை நாம் மிகவும் துன்புறுத்திவிட்டோம். அதனால், நாம் சுகம், சாந்தி, அமைதி எல்லாம் இழந்தோம். இதென்ன விந்தையென்று பிரம்மாவைக் கேட்டறிவோம் என அனைவரும் சத்தியலோகம் சென்று பிரம்மனிடம் நடந்த அனைத்தையும் கூறி முறையிட்டனர். அப்போது பிரம்மா சினம் கொண்டார். தவசி ஆனாலும் யாகம், தானம், ஓமம், செய்தவர்களாயினும் அவற்றால் பலன் ஏதும் ஏற்படாது. நீங்கள் சிறிதும் எண்ணிப் பாராமல் தவறு செய்து விட்டீர்கள். இருப்பினும் இது குறித்து பரமசிவனாரை நாடி அவர் சொற்கேட்டு நடந்திடலாம் வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். சிவபெருமானைப் பக்தியொடு மனமுருகி பிரார்த்தனை செய்ய, பரமன் பிரத்தியக்ஷமாகி அந்த லிங்கத்தை மடுவிலிருந்து எடுத்து பிரதிஷ்டை செய்து, அதற்குத் தினமும் அபிஷேக ஆராதனை, தூப, தீப நைவேத்தியம் ஆகிய உபசாரங்கள் செய்யுங்கள். அது எனது சொரூபம் யாராயினும் அதை நிஷ்டையுடன் பூசித்தால் இகபரசுகம் பெறுவர். அவர்களுடைய எல்லாப் பாவங்களும் நீங்கும் என்றார். பிரம்மாவும், ரிஷிகளும் மடுவை அடைந்து அந்த லிங்கத்தை வெளியே எடுக்க முனைந்தனர். அது இயலாததால் மறுபடியும் பிரம்மாதி தேவர்களும், முனிவர்களும் கைலாயம் சென்று பரமேசுவர தண்டகம் பாடித் துதித்தனர். அவர்களுடைய பிரார்த்தனையைப் பரமன் ஏற்றார். தானே மடுவுக்கு வந்து ஒரே கையால் லிங்கத்தை வெளியே எடுத்தார். இந்த லிங்க தரிசனத்தால் மூவுலகில் உள்ளவர்களும் புண்ணியம் செய்தவர்களாகி சொர்க்கம் அடைவர் என்று கூறி மறைந்தார். அப்போது முதல் அவ்விடம் ஸ்தாணு தீர்த்தம் ஆயிற்று.அதன் அருகில் உள்ள ஆலமரம் ஸ்தாணுவடம் எனப்பட்டது. ஸ்தாணு தீர்த்தம் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள் அந்த இடத்திற்கு வந்து ஸ்தாணு சம்புவைத் (தாணு சங்கரரை) தரிசித்து சொர்க்கம் சேரலாயினர். இதனால் விண்ணுலகம் நிறைந்திட இந்திரன் பிரம்மாவிடம் முறையிட அவர் லிங்கம் கண்ணுக்குப் புலப்படாதவாறு தூளி மழை பெய்யச் செய்யுமாறு கூறினார். பரமன் லிங்கத்தை எடுத்து அதனை ஸ்தாணு வடம் (சிவனார் ஆலமரம்) அருகிலேயே ஸ்தாபித்தார். ஆதனால் அந்த இடமும், மரமும் பவித்திரமாயின. அந்தத் தீர்த்த மரத்தின் அடியில் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். அதுகண்ட பிரம்மா அங்கொரு சிற்பலிங்கத்தை நிறுவினார். பின்னர் அந்த சிற்பலிங்கத்தைப் பூசித்தவரும் மோக்ஷமடைந்தனர். பிறகு பிரம்மாதி தேவர்கள் பயனடைய லிங்கத்தின் மீது லிங்கமாக ஏழு லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். அந்தத் தூளியில் மூழ்கி முனிவர்கள் முக்தி பெற்றனர். தூளி காற்றில் பறந்து குருக்ஷத்திரம் முழுவதும் படிந்து அது புண்ணியத்தலம் ஆயிற்று. அந்த லிங்கத்தைக் கண்டாலும், தொட்டாலும். வடவிருட்சத்தைத் தொட்டாலும், அந்தத் தீர்த்தத்தில் மூழ்கினாலும் சர்வபாவங்களும் நீங்கி விடும். மோட்சமும் கிட்டும். அங்கு செய்யும் பித்ருதர்ப்பணம் பித்ரு தேவதைகளுக்குத் திருப்தியளிக்கும். கிருதயுகத்தில் சந்நிஹத்யம் என்றும், திரேதாயுகத்தில் வாயு என்றும், துவாபர கலியுகங்களில் ருத்திரதடாகம் என்றும் இந்தத் தீர்த்தம் புகழ்பெற்று வைஸ்வத மன்வந்தரம் முடிவு வரையில் நிற்கும். தொடரும்...✍ 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🙏 ஶ்ரீ ராம ஜெயம் 🌷
sree vaamana puraanam. - ஸ்ரீவாமன புராணம் ஸ்ரீவாமன புராணம் - ShareChat