இன்று 2.2.2026 மாலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் தோழமைகள் சந்தித்தோம்.
இன்று, 2.2.2026 முற்பகலில் மயிலாடுதுறை மாவட்ட பகுதியில், இரண்டு முறை குண்டுகள் வெடிப்பது போன்று பலத்த ஓசை கேட்டது. இந்த அதிர்வில் பல இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன. சில வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கிவிட்டன. சில வீடுகளில் கதவுகளில் வீறல் ஏற்பட்டுவிட்டன. இத்தகைய பலத்த ஓசை அவ்வப்போது கேட்டு வருகிறது.
மேற்படி குண்டு வெடிப்பு சத்தம் ONGC நிறுவனத்தின் நில அதிர்வு சோதனை காரணமாக எழுவதாகக் கருதுகிறோம். சிலர் அது ஜெட் விமானம் செல்வதில் Air Release காரணம் என்று அவரவர் கற்பனைக்கு ஏற்ப பதில் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து எங்களுக்கு தெளிவுபடுத்துமாறு கோரினோம் .
மேலும், பலருடைய வீட்டுச் சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டதற்கும், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததற்கும் இந்திய விமானப்படை ஜெட் காரணமானாலும் சரி, ஓ.என்.ஜி.சி.யின் நில அதிரிவு சோதனை காரணமானாலும் சரி, சம்பந்தப்பட்டவர்களால் முறையாக நட்ட ஈடு தரப்பட வேண்டும். நட்ட ஈட்டை எப்படிப் பெறுவது என்பது குறித்தும் தெளிவுபடுத்த மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினோம்.
மாவட்ட ஆட்சியருக்கும் பலத்த ஓசை எழுந்தது குறித்து அலுவலகத்தில் கூறி இருந்திருக்கிறார்கள். எங்கள் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் எந்தப் பகுதியில் அப்படிப்பட்ட சத்தம் எழுந்தது என்பது குறித்து விசாரித்தறிவதாகக் கூறியிருக்கிறார். ஜன்னல், கதவுகள் பாதிப்புகள் குறித்த பதிவுகளை அளிக்குமாறும, சம்பந்தப்பட்ட மக்கள் நேரில் சந்திக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார். இப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண இயலும் என்று நம்புகிறோம்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம், தமுமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், மதிமுக, ம.ம.க உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் சந்திப்பில் பங்கேற்றார்கள்.
Perasiriyar Jayaraman
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
02.02.2026 #மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு #பேராசிரியர் ஜெயராமன் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு


