ShareChat
click to see wallet page
search
அமெரிக்க மக்களும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சமாதான விரும்பிகளுமாக அனைவரும் சேர்ந்து அவசரமாக ஒரு முடிவெடுத்து அணுகுண்டு வீசும் உத்தரவை டிரம்ப் என்கிற ஒரு தனிநபர் இட முடியாது என்கிற நிலையை உறுதி செய்யவேண்டும்! காரணம் ஈரானுடனான போர் ஈரானை வீழ்த்தினாலும் அதைவிட ஆயிரம் மடங்கு அவமானத்தையும் உலக நாடுகளின் கண்டனத்தையும் எதிர்கொள்வது அவருக்கு தவிர்க்க முடியாதது! அத்துடன் எப்ஸ்டீன் பைல் விவகாரமும் சேர்ந்து உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் நிமிர்ந்து பார்க்க முடியாத ஒரு கேவலமான நிலை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது! இந்த நிலையில் சரியோ தவறோ இத்தனைக்காலம் வாழ்ந்தாயிற்று, இனி நாட்டுக்காக உயிர்விட அச்சமில்லை என்று சொல்லி உயிர் விட்ட ஈரானின் உயர் தலைவரின் செயலுக்கு நேர் மாறாக..... இனியும் மானமிழந்து வாழ விரும்பாமல் தன்னை அவமானப் படுத்திய உள்நாட்டையும் மற்ற நாடுகளையும் என்ன செய்கிறேன் பார் என்று வெறிபிடித்து அணுகுண்டுகளை வீச உத்தரவிடலாம் என்று அஞ்சுகிறேன்! ஒரு வெறிபிடித்த மூடனின் வெறிக்கு உலகம் பலியாகும் அபாயம் இருப்பதாக நினைக்கிறேன்! அந்த மிருகம் உலக மக்கள் அனைவரையும்விட தான் தான் மேல் என்கிற திமிர்பிடித்த ஒன்று! எந்த எல்லைக்கும் செல்லலாம்! எதுவும் நடக்கலாம்! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ஒருவேளை அணுகுண்டு வெடித்தால் இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? ஒருவேளை அணுகுண்டு வெடித்தால் இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? - ShareChat