நேர்வழி பெற்று, முஸ்லிம்களாக இருக்கும் நாம் எதற்காக மீண்டும் மீண்டும் நேர்வழிக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றோம்?! என என்றாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா?! சில நொடி சிந்தியுங்களேன்! அதில் உங்கள் வாழ்க்கை மாற்றத்தின் காரணியைக் காண்பீர்கள்!
நேர்வழியை அல்லாஹ் இரண்டாகப் பிரித்துள்ளான்.
1- நேர்வழியைக் காண்பித்தல்.
2- நேர்வழியில் நடந்திட வாய்ப்பளித்தல். அதில் உறுதியாக நிலைத்திருக்கச் செய்தல்.
அல்குர்ஆனின் மூலமும் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாயிலாகவும் அல்லாஹ் மக்களுக்கு நேர்வழியைக் காண்பித்தான். சத்தியத்தையும் அசத்தியத்தையும் மிகத் தெளிவாக பிரித்தறிவிப்பதுடன் இறைத்தூதர்களின் பணி நிறைவு பெற்றுவிடுகிறது. இதுதான் முதலாம் வகை நேர்வழி.!
ஆனால் அந்த நேர்வழியில் நுழைந்திடும் வாய்ப்பையும் இஸ்லாத்தினுள் நுழைந்தவர்கள் அவர்களின் மரணம் வரை சத்தியத்தில் நிலைத்து நிற்கும் பாக்கியத்தையும் அல்லாஹ் தான் நாடியவருக்கு மட்டுமே வழங்குகிறான். இதுதான் இரண்டாம் வகை நேர்வழி!. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - " َمیِقَتْسُفْلا طاَرّصلا اًنِدفِا "நீஎங்களைநேர்வழியில் நடத்துவாயாக!" அல்குர்ஆன் 1:6] " َمیِقَتْسُفْلا طاَرّصلا اًنِدفِا "நீஎங்களைநேர்வழியில் நடத்துவாயாக!" அல்குர்ஆன் 1:6] - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - " َمیِقَتْسُفْلا طاَرّصلا اًنِدفِا "நீஎங்களைநேர்வழியில் நடத்துவாயாக!" அல்குர்ஆன் 1:6] " َمیِقَتْسُفْلا طاَرّصلا اًنِدفِا "நீஎங்களைநேர்வழியில் நடத்துவாயாக!" அல்குர்ஆன் 1:6] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_865664_2ba539f4_1768240863879_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=879_sc.jpg)

