சமயங்களில் நாம் நினைத்தபடி எதுவும் அமைவதில்லை,சில நேரங்களில் நாம் உயிருக்கு உயிராக நேசித்த ஒருவரிடமிருந்து விலகி நடப்பதுதான், நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அன்பாக மாறிவிடுகிறது...
இது கோபத்தால் வரும் விலகல் அல்ல, பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டிருப்பது இருவரையும் இன்னும் ஆழமாகக் காயப்படுத்தும் என்பதை உணர்ந்த பிறகு எடுக்கும் ஒரு முதிர்ச்சியான முடிவு...
ஏன் இந்த அமைதியான பிரியாவிடை தெரியுமா,
ஒரு கட்டத்தில், நாம் யாருக்காகக் காத்திருந்தோமோ, யாரிடம் மாற்றத்தை எதிர்பார்த்தோமோ, அங்கிருந்து எந்தப் பதிலும் வராதபோது மௌனமாக விலகுவதே கண்ணியம், ஒருவரை நேசிப்பது என்பது அவர்களைச் சிறைபிடிப்பது அல்ல, அவர்களை அவர்களின் போக்கில் விடுவதும், அவர்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ அனுமதிப்பதும் கூட அன்பின் ஒரு வகைதான்...
அன்பு குறையவில்லை, விலகிவிட்டோம் என்பதால் அன்பு குறைந்துவிடாது, அவர்கள் இப்போதும் நன்றாகச் சாப்பிட வேண்டும், நிம்மதியாக உறங்க வேண்டும், சரியாக வாகனம் செலுத்த வேண்டும், போதிய அளவு எல்லாம் கிடைக்க வேண்டும், என்று உங்கள் மனம் இப்போதும் பதைபதைக்கும்...
மௌனமான பிரார்த்தனை செய்து கொண்டே இருப்போம், உங்கள் நினைவுகளில் அவர்கள் எப்போதும் இருப்பார்கள், அவர்கள் அடையும் ஒவ்வொரு வெற்றியையும் தூரத்தில் இருந்து பார்த்து ரசிப்பீர்கள், உங்கள் மகிழ்ச்சியில் அவர்கள் பங்குபெறாவிட்டாலும், அவர்களின் மகிழ்ச்சியில் உங்கள் பிரார்த்தனை நிச்சயம் இருக்கும்...
வருத்தப்படாதீர்கள்... நீங்கள் உண்மையாக இருந்தீர்கள்,
எல்லாமே நாம் கற்பனை செய்தபடி சுபமாக முடிவதில்லை, ஆனால், அந்தப் பயணத்தில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதுதான் முக்கியம்...
நீங்கள் பொறுமையாக இருந்தீர்கள்,
கடைசி வரை அன்பாகவே பேசினீர்கள்,
உங்கள் தரப்பிலிருந்து 100% உண்மையாக நேசித்தீர்கள், ஆனால் அவர்கள் எல்லாம் கடந்து சென்றார்கள்...
அவர்கள் உங்கள் வலிகளை சிரிதேனும் பொருட்படுத்தாமல், உங்கள் அன்பின் மதிப்பை உணராமல் இருக்கலாம், ஆனால்,
நான் என் முழு இதயத்தையும் கொடுத்தேன், என்கிற அந்த முழுமையான நிம்மதி உங்கள் மனதிற்குப் போதுமானது, நீங்கள் தோற்றுப்போகவில்லை, ஒரு அழகான உறவாக உங்கள் கடமையைச் செய்திருக்கிறீர்கள்...
நிஜமான அன்பு காயப்படுத்தாது, குணப்படுத்தும்,
உண்மையான அன்பு எப்போதுமே முடிவில்லா தொடர்கதையாக அமைய வேண்டிய அவசியமில்லை, சில நேரங்களில் அது ஒரு பாடமாக அமையும், சில நேரங்களில் அது உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ள உதவும்...
காயப்பட்டுப் பிரிந்தாலும், அவர்கள் மீண்டும் அதே பழைய துள்ளலோடும், அழகோடும், புன்னகையோடும் தன் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று விரும்புவதுதான் ஆகச்சிறந்த அன்பு...
உன்னை கவனித்துக்கொள், பார்த்து வாகனம் செலுத்து, நன்றாய் சாப்பிடு, நேரத்திற்கு உறங்கு.... இந்த வார்த்தை இனி அவர்கள் காதுகளுக்கு எட்டப்போவதில்லை, ஆனால் உங்கள் மௌனத்திலும், தனிமையிலும் அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்கிற ஏக்கம் என்றும் இருக்கும்...
சுயமரியாதையோடும், அதே சமயம் மௌனமான நன்றியுணர்வோடும் நகர்ந்து செல்வோம்... ✍️
மனால்றியா அம்மு #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்

