ShareChat
click to see wallet page
search
குரூப் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் "கரெப்ஷன் - கமிஷன்" அமைச்சர் கே.என்.நேருவின் ஊழலா? டி.என்.பி.எஸ்.சி-யின் திறனற்ற நிர்வாகமா? இலட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக இன்றும் இருப்பது அரசு வேலை! அதை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என ஏழை- நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இளைஞர்கள், தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தியாகம் செய்து தேர்வுகளுக்குத் தயாராகின்றனர். இந்தச் சிரமங்கள் எதையும் புரிந்துகொள்ளாமல், வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசும், அதன் கீழ் செயல்படும் நிர்வாகத்திறனற்ற டி.என்.பி.எஸ்.சி நிர்வாகமும் அலட்சியமாகச் செயல்பட்டு, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இலட்சியத்தில் மண்ணள்ளிப் போட்டுள்ளது. அதற்கு உதாரணம்தான், இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் அவலம்! தமிழ்நாடு அரசுப் பணிகளான உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர்-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப் 2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை - 3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை - 3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளுக்கும் என மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்தாண்டு ஜுலை 15-ஆம் தேதி வெளியானது. அதாவது இன்றில் இருந்து ஏழு மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியாகிவிட்டது. அப்போது இருந்தே டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம், அதற்கான திட்டமிடலைத் தொடங்கி இருக்க வேண்டும் அதன்படி, முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 எழுதினார்கள். அதன் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப் 2 தேர்வில் 1126 பேர் தகுதி பெற்றனர். குரூப் 2 ஏ தேர்வில் 9457 பேர் தகுதிபெற்றனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று காலையும், மாலையும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களில் நடைபெறுவதாக இருந்த இந்தத் தேர்வுகளுக்கு சென்னையிலும் 7 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. காலையில் தேர்வு தொடங்கியதும், அரும்பாக்கம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்றவர்களுக்குப் பதிவு எண் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை: ஆனால், ஹால் டிக்கெட்டில் அவர்களுக்கு அரும்பாக்கம் தேர்வு மையம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி தேர்வு எழுத வந்தவர்கள் கேள்வி எழுப்பியபோது, "நீங்கள் நந்தனம் தேர்வு மையம் செல்லுங்கள்... அங்கு உங்களுக்கு பதிவு எண் இருக்கலாம்" என யூகத்திலேயே தேர்வு மைய அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று, முதன்மைத் தேர்வுக்குத் தயராகிவந்த இளைஞர்களுக்கு, தேர்வு மைய அதிகாரிகளின் இந்த அலட்சியமான பதில் அதிர்ச்சியையும், மனச்சோர்வையும் அளித்துள்ளது. அதையடுத்து அவர்கள் சாலை மறியலில் இறங்கி உள்ளனர். இந்தச் செய்தி ஊடகங்களில் பெரிதானதையடுத்து, முதல் கட்டமாக சென்னையில் நடைபெற்ற குரூப் 2 தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் ரத்து செய்தது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மையங்களில் தேர்வுகள் இயல்பாக நடைபெற்றன. அதன்பிறகு, ஒரு மணி நேரம் கழித்து ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வுகளை ரத்து செய்வதாக பிறகு டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அறிவித்தது. இது இன்று தேர்வு எழுதவந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்களை கடும் குழப்பத்திலும், சோர்விலும், எதிர்காலம் பற்றிய கவலையிலும் ஆழ்த்தி உள்ளது. இளைஞர்களின் வாழ்வில் மண்ணைப் போட்ட இந்த மோசமான நடவடிக்கைக்கு, தொழில்நுட்பக் கோளாறுகளைக் காரணம்காட்டுகிறது டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம். ஆனால், "தேர்வுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூட டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் செய்யாமல் இருந்த நிர்வாகத் திறனற்ற அலட்சியமே, இதற்கு முழுமுதற் காரணம் என்று தமிழக வெற்றிக் கழகம் சுட்டிக்காட்டுகிறது. அதோடு குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி தலைவர், செயலாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி என 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 6 உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான இளநிலை உதவியாளர்கள் இருந்தும் இந்தக் குளறுபடிகள் நடந்ததற்குக் காரணம் நிர்வாகத் திறன் இல்லாததா? அல்லது திட்டமிட்டே செய்தார்களா? என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்குக் காரணம், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில், ஒரு பணியிடத்திற்கு தலா 35 லட்சம் ரூபாய் என மொத்தம் 888 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டின் போது இந்தத் தகவல் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு மையங்களில் குளறுபடி என்பதை சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, இந்த விவகாரத்தை பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். கல்வியில் முதலிடம், பொருளாதாரத்தில் முதலிடம் என பொய்யான புள்ளிவிபரங்களை வைத்து வெற்று விளம்பரம் செய்து கொள்ளும் விளம்பர மாடல் தி.மு.க அரசு, எதார்த்தத்தில் ஒரு சாதரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட நேர்மையாகவும், குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு திறனற்று இருக்கிறது என்பதுதான் உண்மை! திறனற்ற தி.மு.க அரசுக்கு மக்கள் பாடம் புகட்டும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது. #குரூப் 2 தேர்வுகள் #ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகம் #✨💗TVKForTN 💗✨ #thalaivarvijay #tvk #tamilagavettrikazhgam #thalapathyvijay #actorvijay #tvkvijay #tvkfortn
குரூப் 2 தேர்வுகள் - uian வரேன்ம பொக uian வரேன்ம பொக - ShareChat