ShareChat
click to see wallet page
search
மாங்கல்ய தோஷம் நீக்கும் நிசும்பசூதனி ஒன்பதாம் நூற்றாண்டில் தஞ்சை தரணியை விஜய சோழன் ஆட்சி செய்து வந்தான் திடீரென தேசத்தில் இனம் தெரியாத கொள்ளை நோயை தாக்கி மக்கள் பலரும் மாண்டனர் இந்நிலையில் ஒரு நாள் இரவு சோழனின் கனவில் சன்னியாசி வடிவில் காட்சி தந்த சிவனார் ஒரு காலத்தில் அசுரர்களை அழிக்க என்னால் உருவாக்கப்பட்ட நிசும்பசூதனி தனது எல்லைக்குள் உக்கிரமாகி இருக்கிறாள் அவளை குளிர்விக்கபூஜைசெய் எனச் சொல்லி மறைந்தார் முடிந்ததும் அரண்மனை ஜோதிடர்களிடம் விவாதித்த மன்னர் அவர் சொன்ன ஆருடத்தின்படி சும்ப நிசும்பர்களை வதம் செய்த இடத்தில் நிசும்பசூதனிக்கு ஆலயம் எழுப்பினான் காளியாக உருவெடுத்து அசுரவதம் நிகழ்த்தியவள் என்பதால் நிசும்பசூதனி உக்கிரகாளி அம்மனின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தான் அன்று தொடங்கி இன்றளவும் தஞ்சையின் வடகிழக்கு எல்லையை காக்கும் தெய்வமாக அருளாட்சி நடத்தி வருகிறாள் நிசும்பசூதனி தஞ்சாவூரில் குயவர் குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ளது நிசும்பசூதனி உக்கிகாளியம்மன் ஆலயம் கருவறையில் கையில் ஏந்திய சூலம் வலது காலை மடக்கி இடது காலல் அசுரனின் தலையை மிதித்தபடி ஆக்ரோஷமாக காட்சி தருகிறார் கருவறை அடுத்துள்ள மண்டபத்தில் சிவபெருமானும் விநாயகரும் சன்னிதி கொண்டுள்ளனர் கோவிலுக்கு நுழைந்ததும் வலது பக்கத்தில் விஜயசாந்தி நிறுவப்பட்ட காளியையும் தரிசிக்கலாம் திருமணத்தடையால் அவதிப்படுபவர்கள் கடன் தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு வந்து ராகுகால வேளையில் காளியம்மனுக்கு விளக்கு ஏற்றி வேப்ப மரத்தில் மஞ்சள் சரடு கட்டி வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம் கணவன் மனைவியிடையே உள்ள பூசல் வழக்குகள் போன்ற பாதிப்பு உடையவர்கள் நிசும்பசூதனியிடம் பிரார்த்தனை செய்தால் விரைவில் நியாயமான பலன் கிடைக்கும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - ShareChat