ShareChat
click to see wallet page
search
##ஐயப்பா #ஐய்யப்பா சரணம் #ayyappa #ayyappan #ஐயப்பன்… #ayyappan whatsapp status #ஐய்யப்பன் பக்தர்கள் #🙏🙏இருமுடி பிரியன்🙏🙏 #🙏ஏகாதசி🕉️ தர்மசாஸ்தா! 💥 புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல் தான் ஐயப்பன். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவனும் ஐயப்பன் தான். மற்ற கடவுளுக்கு மாலை போடும் பக்தர்களை விட ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த தலைப்பில் ஐயப்பனுக்கு தர்மசாஸ்தா என்ற பெயர் இருக்கிறது அதற்கு பொருள் என்னவென்று தெரிந்து கொள்வோம். 💥 சாஸ்தா என்ற வார்த்தைக்கு, உன்னத ஆட்சியாளர், கட்டளையிடுபவர், ஆள்பவர், மேலும் தவறு செய்பவரை தண்டிப்பவர் என்று அர்த்தம். முருகப்பெருமானை பிரம்ம சாஸ்தா என்று அழைப்போம். ஏனெனில், அவர் பிரம்மனுக்குக் கட்டளை இட்டவர். வீரபத்ரரை தக்ஷ சாஸ்தா என்பர். காரணம், அவர் தக்ஷ பிரஜாபதியை தண்டித்தார். 💥 ஹரிஹர புத்திரனை தர்ம சாஸ்தா என்று அழைக்கப்படக் காரணம், அவர் தர்மத்தை நிலை நாட்டி ஆட்சி புரிகின்றார். தர்மம் என்பது மனித வாழ்க்கையின் ஆணிவேர். தர்மமானது ஒரு மனிதன் அறவழியில் நடப்பதற்கான பாதையாக இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. 💥 ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது நல்ல செயல்கள் அனைத்தும் தானாக நடக்கும். கிருஷ்ணபரமாத்மாவும் கீதையில் இதைத்தான் சொல்கிறார். எங்கு தர்மம் அழிகிறதோ, நான் அங்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்றும் இந்த தர்மத்தால் தான், இன்று அகிலம் தழைத்து நிற்கிறது என்றும் கூறுவார். 💥 ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது அந்த செயல், இந்த அகில உலகத்தையும் பாதுகாத்து, அவனையும் தெய்வீகமானவனாக்குகிறது. நாளடைவில், இந்த தர்மம், அவனை தெய்வீகத்தின் பிரதிநிதியாக மாற்றுகிறது. அந்த தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக இருப்பதால், ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று அழைக்கிறோம். 💥 ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் : 💥 கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம் வரம் வாமஹஸ்தம் சஜாநூபரிஸ்தம் வஸந்தம் சதா யோக பட்டாபிராமம் பஜே சம்பு விஷன்வோஸ் ஸஷுதம் பூதனாதம். வலது கரத்தால் ஞான முத்திரை காட்டி அருள்பவனே! தொடை மீது வைத்திருக்கும் இடக்கரத்தால் வரதமுத்திரை காட்டுபவனே! மார்பில் மின்னும் யோக பட்டத்துடன் காட்சியருள்பவனே! பூதங்களின் நாதனாக திகழ்பவனே! ஹரிஹரபுத்திரனே! அய்யப்ப சுவாமியே, உன்னை வழிபடுகிறேன்!!! சுவாமியே சரணம் ஐயப்பா!!! #சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள்? 💥 கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டது. ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகிக் கொண்டு வருகிறார்கள். அவ்வாறு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் சாமி சரணம் என்று அடிக்கடி கூறுவார்கள். அதில் சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்வோம். 💥 சுவாமி என்பது முக்கணங்களான ரஜோ, தமோ, ஸ்தவகணங்களை ஜெபித்து இதனை அகற்ற வல்லது. சுவாமி என்ற உச்சரிப்பின் வெளிப்பாட்டினால் சொல்லிப் படிப்பவர்களுக்குச் சுபம் உண்டாகிறது. 💥 'ச" என்ற எழுத்திற்கு நம்மிடம் உள்ள காமக் கிராதிகள் எனும் சாத்தான்களை அழிக்கும் சத்தசம்காரம் என்று பொருள். 💥 'ர" என்ற எழுத்திற்கு ஞானத்தைத் தர வல்லது என்று பொருள். 💥 'ண" என்ற எழுத்திற்கு சாந்தத்தைத் தரவல்லது என்று பொருள். 💥 'ம்" முத்ரா என்ற எழுத்திற்கு துக்கங்களைப் போக்க வல்லது. சுவாமிக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. 💥 ஆகையால், நம்முடைய நாபி கமலத்தில் இருந்து எழும் பிராண வாயுவை இதய மார்க்கமாகச் செலுத்தி, நாவின் மூலம் சப்தமாக உயிர்ப்பித்து 'ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா" என ஒலிக்கும்போது, மூல மந்திர ஒலியுடன் நம் காமக் கிராதிகளை அழித்து ஞானத்தைத் தர ஐயப்பனைச் சரணடைகிறோம் என்று பொருள். ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் : 1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம் நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம் 2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம் 3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம் வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம் 4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம் கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம் 5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம் மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தன. 🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
#ஐயப்பா #ஐய்யப்பா சரணம்  #ayyappa #ayyappan #ஐயப்பன்… #ayyappan whatsapp status - ೪a' ೪a' - ShareChat