ShareChat
click to see wallet page
search
* ஶ்ரீ (969) #ஸ்ரீ இராமர் ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்* 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 🕉 *16 வார்த்தை ராமாயணம்* *"பிறந்தார், வளர்ந்தார், கற்றார், பெற்றார், மணந்தார், சிறந்தார், துறந்தார், நெகிழ்ந்தார், இழந்தார், அலைந்தார், அழித்தார்,செழித்தார், துறந்தார், துவண்டார், ஆண்டார், மீண்டார்* 🌷 *விளக்கம்:* *1. பிறந்தார்:* *🌷 ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.* *2.வளர்ந்தார்:* *🌷 தசரதர், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது* *3.கற்றார்:* *🌷 வஷிஷ்டரிடம் சகல வேதங்கள், ஞானங்கள், கலைகள் முறைகள் யாவும் கற்றது.* *4.பெற்றார்:* *🌷 வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு, விஸ்வாமித்ரர் யாகம் காத்து, விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.* *5.மணந்தார்:* *🌷 ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.* *6.சிறந்தார்:* *🌷 அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும், தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.* *7.துறந்தார்:* *🌷 கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.* *8. நெகிழ்ந்தார்:* *🌷 அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.* *🌷 குகனார் அன்பில் நெகிழ்ந்தது.* *🌷 பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.* *🌷 பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும், தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும், தன்னலமற்ற குணத்தையும், தியாகத்தையும், விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.* *🌷 அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.* *🌷 சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.* *🌷 விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.* *🌷 எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.* *9.இழந்தார்:* *🌷 மாய மானின் பின் சென்று, அன்னை சீதையை தொலைத்தது.* *10.அலைந்தார்:* *🌷 அன்னை சீதையை தேடி அலைந்தது.* *11.அழித்தார்:* *🌷 இலங்கையை அழித்தது.* *12.செழித்தார்:* *🌷 சீதையை மீண்டும் பெற்று, அகமும் முகமும் செழித்தது.* *🌷 ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று, செல்வச் செழிப்பான வாழ்க்கைக்குத் திரும்பியது.* *13.துறந்தார்:* *🌷 அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில், மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக, அன்னை சீதையைத் துறந்தது.* *14.துவண்டார்:* *🌷 அன்னை சீதையை பிரிய நேர்ந்தது, ஶ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.* *15.ஆண்டார்:* *🌷 என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவறச் செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.* *16. மீண்டார்:* *🌷 பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது".* *🚩ஜெய் ஸ்ரீராம்.*
ஸ்ரீ இராமர் - ஸர்வம் ஸ்ரீராம்மயம் ஸர்வம் ஸ்ரீராம்மயம் - ShareChat