சுமார் 7,000 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், Psychological Bulletin இதழில் வெளியாகியுள்ளன. இதில், மொபைல் திரையைப் பார்ப்பது உடலில் துரித உணவுகள் (Junk Food) ஏற்படுத்தும் தீமைகளுக்கு இணையாக, குழந்தைகளின் மனதிற்கும் மூளைக்கும் பெரும் ஆபத்தை விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிறுவயதிலேயே அதிக நேரம் மொபைலில் மூழ்கியிருக்கும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் குறைபாடு, செயல்திறன் மழுங்குதல் மற்றும் கற்றல் திறன் பாதிப்பு போன்ற தீவிரமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த அதீத செயல்பாட்டு கோளாறுகள் குழந்தைகளின் இயல்பான சிந்தனைத் திறனைச் சிதைத்து விடுகின்றன. இதனால், மிக அவசியமான தேவையைத் தவிர, குழந்தைகளுக்குக் கைப்பேசியைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மனநல நிபுணர்கள் பெற்றோரை வலியுறுத்துகின்றனர்.
வீட்டுப்பாடங்களைச் செய்யும்போதும் அல்லது கல்வி கற்கும்போதும் குழந்தைகள் செல்போனைப் பயன்படுத்துவது அவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையைத் தடுத்து, தேடலுக்கான ஆர்வத்தைக் குறைத்துவிடுகிறது. இது ஒரு இயந்திரத்தனமான மனநிலையை உருவாக்கி, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் மந்தநிலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுவதால், அவர்கள் எதிர்காலத்தில் சுயமாக முடிவெடுக்கும் திறனை இழக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், செல்போனுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டு, மற்றவர்களுடன் உரையாடுவதைத் தவிர்க்கும் ‘இண்ட்ரோவெர்ட்’ (Introvert) நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இத்தகைய தகவல் தொடர்புத் திறன் குறைபாடு (Poor Communication), எதிர்காலத்தில் அவர்கள் பணியிடங்களிலும் சமூக உறவுகளிலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கக் காரணமாகும். எனவே, குழந்தைகளின் வருங்கால நலன் கருதிப் பெற்றோர் அவர்களின் மொபைல் பழக்கத்தை இப்போதே கட்டுப்படுத்துவது மிக அவசியமாகும் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📢 ஏப்ரல் 5 முக்கியதகவல்கள் 👍 #🚹உளவியல் சிந்தனை #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰


