ShareChat
click to see wallet page
search
#vrathangal Arivome. ஏகாதசி விரதம் இருக்கும் சரியா முறை...கண் விழிக்க வேண்டிய நாளும், விரதம் நிறைவு செய்யும் முறையும்_* * 🛕🛕🛕2025ம் ஆண்டின் துவக்கத்தில் ஒரு வைகுண்ட ஏகாதசி வந்த நிலையில், தற்போது இரண்டாவதாக வருடத்தின் இறுதியில் மற்றொரு வைகுண்ட ஏகாதசி வருகிறது. டிசம்பர் 30ம் தேதியன்று வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்த நாளில் எப்படி விரதம் இருந்தால் பெருமாளின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். > பக்தனுக்காக பெருமாளே இறங்கி வந்த நாள் தான் வைகுண்ட ஏகாதசி திருநாள். அதனால் இந்த நாளில் பக்தியுடன், மனமுருகி பெருமாளிடம் விரதம் இருந்து வேண்டினால் வேண்டியது அனைத்தும் கிடைக்கும். பெருமாளின் அருளால் பிறக்க இருக்கும் 2026ம் ஆண்டு சிறப்பான, செழிப்பான ஆண்டாக அமையும். வைகுண்ட ஏகாதசி விரதம்: வைகுண்ட ஏகாதசி என்பது பெருமாளின் அருளை பெறுவதற்கான உன்னதமான நாளாகும். மாதந்தோறும் வரும் ஏகாதசி தினங்களில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும், வருடத்திற்கு ஒருமுறை மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பானதாகும். விரதங்களிலிலேயே மிகவும் உயர்வான, புண்ணியம் தரும் விரதமான ஏகாதசி விரதத்தை மார்கழியில் இருப்பதால் நாம் செய்த பாவங்களில் இருந்து விடுபட முடியும். இந்த நாளில் அனைத்து வைணவ தலங்களிலும் அதிகாலையில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படும். இந்த நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும், எந்த நாளில் கண் விழிக்க வேண்டும், விரதத்தை நிறைவு செய்யும் முறை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். *ஏகாதசி விரதம் இருக்கும் சரியான முறை :* பொதுவாக ஏகாதசி விரதம் என்பது மூன்று நாட்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். அதாவது, தசமி திதியில் துவங்கி, ஏகாதசி முழுவதும் முழு உபவாசமாக விரதம் அனுஷ்டித்து, மூன்றாம் நாளான துவாதசி அன்று பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.ஏகாதசி அன்று தண்ணீர் கூட குடிக்காமல் சிலர் விரதம் இருப்பார்கள். அப்படியே தண்ணீர் குடிப்பதாக இருந்தாலும் துளசி தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து மற்ற பழங்கள், பால் ஆகியவற்றை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். எளிமையான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். *விரதத்தை துவங்கும் நாள்:* இந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி அதிகாலை 04.42 மணிக்கு துவங்கி, டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 03.50 மணி வரை தசமி திதி உள்ளது. ஏகாதசி திதியானது டிசம்பர் 30ம் தேதி காலை 03.51 மணிக்கு துவங்கி, டிசம்பர் 31ம் தேதி அதிகாலை 01.34 மணி வரை உள்ளது. அதே போல் துவாதசி திதி டிசம்பர் 31ம் தேதியன்று அதிகாலை 01.35 மணிக்கு துவங்கி, அன்று இரவு 11.16 வரை உள்ளது. இதனால் டிசம்பர் 30ம் தேதியன்று வைகுண்ட ஏகாதசியாக கணக்கில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும். டிசம்பர் 29ம் தேதியன்று இரவே விரதத்தை துவக்கி விட வேண்டும். தசமி அன்று இரவு உணவை தவிர்க்க வேண்டும். எந்த நாளில் கண் விழிக்க வேண்டும்? வைகுண்ட ஏகாதசி தினமான டிசம்பர் 30ம் தேதியன்று அதிகாலை ஸ்ரீரங்கத்தில் அதிகாலை 04.30 மணி முதல் 05.30 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படும். அந்த நிகழ்வை கண்டு தரிசனம் செய்த பிறகு அப்படியே பெருமாள் நினைவிலேயே பகல் முழுவதும் உபவாசமாக இருந்து விரதத்தை தொடர வேண்டும். டிசம்பர் 30ம் தேதியன்று இரவு கண் விழித்து, டிசம்பர் 31ம் தேதியன்று காலை பல விதமான காய்கறிகளை சேர்த்து, வடை, பாயசத்துடன் உணவு சமைத்து, பெருமாளுக்கு தளிகை இட்டு,நைவேத்தியமாக இலை போட்டு உணவு படைக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு பேருக்காவது உணவு அளித்து விட்டு, காலை 8 அல்லது 9 மணிக்கு பிறகு, உணவு சாப்பிட்டு நாம் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். *இரவில் கண் விழிக்கும் சரியான முறை :* வைகுண்ட ஏகாதசி அன்று இரவு கண் விழிப்பதற்காக மொபைல் போன் பார்ப்பது, சினிமா பார்ப்பது, விளையாட்டுகள் விளையாடுவது, வீண் அரட்டை அடிப்பது ஆகியவற்றை செய்யக் கூடாது. இதனால் எந்த பலனும் கிடைக்காது. இரவு முழுவதும் பெருமாளின் பெருமைகளை போற்றும் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் படிக்கலாம். ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை படிக்கலாம். "ஓம் நமோ நாராயணாய நமஹ" என்ற மந்திரத்தை எழுதலாம். பெருமாளின் கதைகளை படிக்கலாம் அல்லது கேட்கலாம். இப்படி பெருமாளின் நினைவிலேயே இருந்து, சொர்க்கவாசலை அடைவதற்கு தகுதியானவர்களாக நம்மை மாற்றிக் கொண்டு இருந்தால் மட்டுமே பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைப்பதுடன், வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த முழு பலனையும் பெற முடியும் 🍁🍁🍁
vrathangal Arivome. - ShareChat