ShareChat
click to see wallet page
search
#📺அரசியல் 360🔴 மிக கடுமையான உளைச்சலை Epstein-ன் ஆவணங்கள் ஏற்படுத்துகிறது. காமம், வக்கிரம் ஆகியவை ஒருபுறம் என்றால் உலக அதிகார மையங்கள் கொண்டிருக்கும் அருவருப்புகளின் உச்சம் ஒருபுறம் என்றால், மனிதக் கறி உண்ணும் சடங்கு உள்ளிட்ட பல சடங்குகள் இங்கு இருந்திருக்கிறது என்பது ஒருபுறம் என்றால் உலக அரசியலின் முக்கியமான கட்டங்களும் பல நாடுகளின் அரசியலும் இத்தகைய இடங்களில்தான் கட்டமைக்கப்படுகிறது என்பது ஒருபுறம் என்றால் நோம் சாம்ஸ்கி போன்ற அறிஞர்களும் இந்த மானுட அவலத்துக்கு துணையாக இருந்திருப்பது இன்னொரு புற அதிர்ச்சி. அமெரிக்க தலைமை தன்னை ஏற்க வேண்டுமென மோடி தூது அனுப்பியது இந்தக் கூட்டத்தைதான். மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு தேவைப்படுகிற ஒருங்கிணைப்பை உருவாக்க இஸ்ரேல் சார்பாக அமெரிக்க தரப்புக்கு இந்த கூட்டத்தின் வழியாகதான் மோடி சென்றிருக்கிறார். இவற்றுக்கான அன்பளிப்புகளில் ஒன்றுதான் இஸ்ரேலிடமிருந்து பெற்ற பெகாசஸ் உளவுசெயலி. இந்த உளவுசெயலி மூலமாக இன்றும் சிறையில் வாடும் உமர் காலீத் போன்ற பல செயற்பாட்டாளர்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மைதான், எப்ஸ்டீன் வெறுமனே பாலியல் குற்றவாளியோ தரகனோ மட்டுமில்லை என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. பைசாண்டிய சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் போன்ற ஆட்சிகளில் உள்ள மேட்டுக்குடிகள் தங்களுக்கென பிரத்யேக பாலுறவு இச்சைகளை உருவாக்கி அவற்றுக்கான பாலின வகைகளையும் உருவாக்கி பாலியியல் அடிமைகள் என்கிற பண்பாட்டை உருவாக வழிவகை செய்தார்கள். உலகில் மனிதர்கள் துய்க்கும் அனைத்தையும் துய்க்க முடிகிற சமூக அதிகாரத்தில் இருப்பவர்கள், அவற்றை தாண்டி தங்களின் இச்சைகளை விரிவடைய செய்யும்போது இத்தகைய வக்கிரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் சாமானியர்களுக்கு இருக்கும் வாழ்க்கை மற்றும் வழக்கங்களில் இருந்து முற்றிலும் வேறு வழக்கங்களை தங்களுக்கு உருவாக்கி, தனித்துவம் வாய்ந்தவர்களாகவும் சிறப்பு சலுகை வாய்த்தவர்களாகவும் ஆக்கிக் கொள்கிறார்கள். இயற்கையான மற்றும் சமூகப்பூர்வமான மனித வழக்கங்களிலிருந்து வேறு வழக்கங்களை வரித்துக் கொள்வதன் மூலம் சமூகத்துக்கு மேலே, உயரத்தில் அந்தரத்தில் மிதக்கும் சக்தி பெற்றவர்களாக தங்களை வரித்துக் கொள்கிறார்கள். இத்தகைய வரித்துக் கொள்ளுதல் என்பது ஒரு வகை அதிகாரம்தான். இதனால்தான் இவர்கள் எப்போதும் சாமானிய மனிதர்களை விரும்புவதில்லை. ஒடுக்குமுறை அதிர்ச்சியை தருவதில்லை. போர்களும் இவர்களுக்கு அலுப்பதில்லை. உலக அதிகாரம், வணிகம், அரசியல் யாவும் இந்த அதிகார முற்றங்களில் தீர்மானிக்கப்படும் அவலம்தான் இதிலுள்ள வக்கிரங்களில் எல்லாம் வக்கிரம். இதற்குள் இருந்துதான் தற்கால அறிவுஜீவிகளும் கலைஞர்களும் தங்களுக்கான வெற்றிகளை வடிவமைத்து கொள்ள வேண்டும் என்பது அவர்களையும் இக்குற்றத்தின் பங்குதாரர் ஆக்குகிறது. சோவியத் யூனியனை கடுமையாக விமர்சிக்கும் நோம் சாம்ஸ்கி, தனக்கான சிறப்பு சலுகைகளை அதிகார மட்டங்களில் பெறவென எப்ஸ்டீனின் ஆதரவாளராக மிஞ்சிப் போன பிறகு, அவரின் வார்த்தைகள் யாவும் அர்த்தமிழக்கின்றன. இதிலுள்ள அரசியல் பக்கம் என்னவென்றால் இவை யாவும் அமெரிக்காவின் உளவுத்துறைக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. பிரிட்டனின் அரசுக்கும் தெரிந்திருக்கிறது. பில் கேட்ஸ் உள்ளிட்ட உலக பொருளாதார கர்த்தாக்கள் (!) இந்த கூட்டத்தில் இருந்துதான் தங்களின் வளர்ச்சியை பெற்றிருக்கின்றனர். அமெரிக்க உருவாக்கிய சவுதி அரசு தொடங்கி இந்த எப்ஸ்டீனின் இந்த தீவு முழுமையும் ஏதோவொரு வகையில் இஸ்ரேலுக்காக இயங்கி இருக்கிறது. முதலாம் புஷ் தொடங்கி, ஸ்டீபன் ஹாக்கிங், நோம் சாம்ஸ்கி, அமெரிக்க சார்பு அரபு தலைவர்கள் யாவரும் இங்கு உறுப்பினர்கள். எப்ஸ்டீன் ஒரு யூதர். அவருடன் இயங்கிய கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் ஓர் அரை யூதர். இவரின் தந்தை மொசாதில் பணிபுரிந்தவர் என சொல்லப்படுகிறது. கடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அவர், மொசாத்தால் கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் சுற்றுகிறது. ஒரு வகையில் எப்ஸ்டீனும் இஸ்ரேலுக்குதான் இயங்கி இருக்கிறார். அவரும் மொசாத்தாக இருக்கலாம். அவருடைய மரணத்திலும் மர்மம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா-இஸ்ரேல்-பிரிட்டன்-ஐரோப்பா என்கிற உலக ஒழுங்கை பொருளாதார ரீதியாக முதலாளித்துவம் இணைத்தாலும் உள்ளூர முதலாளித்துவம் உருவாக்கும் மனித விரோத வக்கிரங்கள் ஒருங்கிணைந்து செயலாற்றி இருக்கின்றன என்பதற்கு எப்ஸ்டீன் குறித்த ஆவணங்கள் மற்றுமோர் உதாரணம். உலகம் முழுக்க கடுமையான எதிர்பிரசாரம் செய்யப்படும் சீன அதிபரோ ரஷிய அதிபரோ வடகொரிய கிம்மோ ஈரானின் கமேனியோ ஈராக்கின் சதாமோ லிபியாவி கடாபியோ இந்த கூட்டத்துக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'வணக்கம் வைக்காத ராணுவத் தளபதியை கண்டதுண்டமாக வெட்டினார் கிம்' என்றும் 'கட்சியில் கேள்வி கேட்டவரை காணாமலடித்த ஜி ஜிங்பிங்' என்றும் மாதத்துக்கு ஒருமுறை கதை கட்டும் சிஐஏவும் அமெரிக்க ஊடகங்களும் அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் எப்ஸ்டீன் இத்தனை காலம் தப்பித்திருக்க முடிந்ததற்கு யாரெல்லாம் காரணம் என்பது பற்றி ஒரு பத்தி கூட வெளியிட்டதில்லை. முதலாளித்துவம் முன் வைக்கும் நுகர்வு மிகுதி, சிறப்பு சலுகைகள் மற்றும் கட்டற்ற அதிகார வெறி யாவும் மனிதனின் அடி ஆழத்தில் இருக்கும் அற்பங்களை தட்டியெழுப்பி விடுகிறது. சிக்மண்ட் ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு உயிர்ப்பு கொள்ளும் இருண்ட இடங்கள்தான் எப்ஸ்டீனின் தீவு போன்ற இடங்கள். Squid Games தொடரில் காட்டப்படும் கொடூரங்களை காட்டிலும் பெரும் கொடூரங்கள் எப்ஸ்டீனின் தீவில் அரங்கேறி இருக்கிறது. எப்ஸ்டீனை போல மைக்கேல் ஜாக்சனும் ஒரு தீவு வைத்திருந்தார். இன்னும் இது போல் எத்தனை வெளிவராமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன எனத் தெரியவில்லை. ஆனால் நமக்கு அமெரிக்காதான் சுதந்திரம் போற்றும் நாடு, முதலாளித்துவம்தான் உலகம் உய்வதற்கான தத்துவம், மோடிதான் ஆகச்சிறந்த இந்தியப் பிரதமர்! Rajasangeethan அவர்களின் பதிவு #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️
📺அரசியல் 360🔴 - |8 88478962 =~8#8~= @ a 444144 |8 88478962 =~8#8~= @ a 444144 - ShareChat